நல்ல துவக்கம்!
ஈரோடு மாவட்டத்தில் உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் பிரச்சார இயக்கம்
இன்று துவங்கியது. கோபிசெட்டிபாளையத்தில் முதல் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. கிளையின்
துணைத் தலைவர் தோழர் நாகராஜ் தலைமையேற்றார். மாவட்ட துணைச் செயலர் தோழர் லாசர் முன்னிலை
வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் தோழர் கே.பங்காரு துவக்க உரையாற்றினார். கோவை மாவட்டச்
செயலர் தோழர் என்.ராமகிருஷ்ணன் மற்றும் மாநில துணைச் செயலர் தோழர் எல்.சுப்பராயன் சிறப்புரையாற்றினர்.
திரளாக ஊழியர்கள் பங்கேற்றனர். தோழர் கணேசன் நன்றி கூறினார். நல்ல துவக்கம் இது .
. . நல்ல முடிவினையே தரும்!
No comments:
Post a Comment