NFTECHQ

Sunday 14 April 2013

தினம் ஒரு கேள்வி – 12.


தோழர் அபிமன்யூவும் அவரது தோழர்களும் 78.2 சத அகவிலைப்படி இணைப்பு பெறமுடியாமல் இருப்பதற்கு NFTE மற்றும் பிற சங்கங்கள் தான்  காரணம் என் குறை கூறி வருகிறார்கள். இது முற்றிலும் உண்மை கலப்பில்லாத பொய். தவறான பிரச்சாரம். உண்மை என்ன? லாபத்தில் இயங்கிவரும் பொதுத் துறை நிறுவனங்களில் 78.2 அகவிலைப்படி இணைப்புடன் ஊதிய நிர்ணயம் மற்றும் 5 ஆண்டுகள் ஊதிய உடன்பாடு போட DPE வழிகாட்டுதல் இருந்தது. ஆனால் தோழர் நம்பூதிரி ஆணவமாய் தனித்து 2010 இல் ஊதிய உடன்பாட்டில் கையொப்பம் இட்டார். இது தெரிந்தே செய்த குற்றம். விளைவு ஊழியர்கள் இதுவரை 75 மாதங்களில் மொத்தமாக ரூ.6000 கோடி ஊதியத்தில் இழந்துள்ளனர். தனது குற்றத்தை, தனது சரணாகதியை மறைத்து NFTE  மீது அவதூறு செய்வது நேர்மை தானா?
நன்றி: சென்னை இணைய தளம்.

No comments:

Post a Comment