புதிய அங்கீகார விதிகளின்படி இது முதல் தேர்தல். முதல் இரண்டு சங்கங்கள் அங்கீகாரத்துடன் செயல்பட ஊழியர்கள் உத்திரவிட்டுள்ளனர். அவர்களின் முடிவினை ஏற்போம். அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு செயல்பட உறுதியேற்போம். போட்டியிடும் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதோர் பயன்படுத்த பொதுத் தேர்தலில் 49(ஓ) என்ற வாய்ப்பு தரப்பட்டது. அதைப் போலவே இந்த தேர்தலில் எண் 14 பயன்பட்டுள்ளது. நாடு முழுமையும் அந்த எண்ணிற்கு வாக்களித்துள்ளனர். இது ஏன் என்பதை புரிந்து கொள்ள முயற்சிப்பது நல்லது. அதை துரோகம் என்று உதாசீனப்படுத்துவது சரியல்ல.
பி.எஸ்.என்.எல் நிறுவனம் காக்க, ஊழியர் நலன் காக்க உறுதியான நடவடிக்கைகளை உடனே துவங்குவோம். அதுவே அனைவருக்கும் நல்லது.
No comments:
Post a Comment