NFTECHQ

Friday 31 May 2013

தோழர் RRB

R.R.பாலசுப்ராமணியன் அவர்களை தோழர் RRB என அழைப்பதுதான் அவருக்கு நாம் தரும் மரியாதை. துணைக் கோட்ட அதிகாரியாக பணியாற்றி பணி ஒய்வு பெறுகிறார்(31.05.2013). தோற்றத்தில் எப்படியோ அப்படியே பழகுவதிலும் இனிமை. சிறந்த ஊழியராக, அதிகாரியாக பணியாற்றியவர். 

NFPTE சங்கத்தில் விருதுநகர் கோட்டச் செயலராக தொழிற்சங்கப் பணியாற்றியவர். அவரது தொழிற்சங்கப்பணி அதிகாரிகள் சங்கத்தில் தொடர்கிறது. இந்திய நாட்டில் முதன் முறையாக ஒரு இணைய தளத்தை தொழிற்சங்கப் பணிக்காக துவங்கியது தமிழ் மாநிலச் சங்கம். அதை நிறுவிட, நிர்வகிக்க முழுமையாகப் பணியாற்றியவர். 2002 ஆம் ஆண்டு வெற்றி மாநாடு ஈரோட்டில் நடைபெற்றது. அவரை பாராட்டி மகிழ்ந்தோம்.  தமிழகத்தில் இணைய தளம் இருக்கும் வரையில் அவரது நினைவு நீங்காதிருக்கும்.


அவரது ஓய்வு காலம் பயனுள்ளதாக , நெடியதாக, இனியதாக, நலமுடன் அமைந்திட வாழ்த்துகிறோம்!   

இனி இனிய ஓய்வு!

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பல்லாண்டு பணி ஆற்றி 31.05.2013 அன்று பணி ஓய்வு பெறுகின்றனர். இவர்கள் அனைவரும் பல்லாண்டு பயனுள்ள, நலமாக வாழ்க என வாழ்த்துகிறோம்!

                        1. B.பழனியப்பன் DGM (TR).
                        2. N.தீனதயாளன் SSS
                        3. P. கருணாநிதி   SSS
                        4. K.N.பொன்னுசாமி STS
                        5. K. மாசிலாமணி STS
                        6. R. முருகபூபதி TM
                        7. P. கிருஷ்ணன் குட்டி STS


Monday 27 May 2013

அஞ்சலி

தோழர் BR மறைந்தார்

BR என அன்போடு அனைவராலும் அழைக்கப்படும் தோழர் B.ரஜேந்திரன் இன்று அதிகாலை மறைந்தார். நமது சங்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். லைன்ஸ்டாப் மற்றும் நான்காம் பிரிவு ஊழியர் சங்கத்தில், ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் அவரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அன்னாரின் திடீர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. 
அன்னாரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், தோழர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.

Thursday 23 May 2013

வாழ்த்துவோம்!

திருமண அழைப்பிதழிலிருந்து

"எங்கு அன்பு உண்டோ அங்கு வாழ்க்கை உண்டு"
மணமக்கள் 
செல்வி Dr.K.சிந்துஜா     செல்வன் Dr.M.ராஜேஷ்
[தோழர் P.காமராஜ் - விஜயலட்சுமி
புதுச்சேரி ]

பல்லாண்டு வாழ்க! 

Tuesday 21 May 2013

வாழ்த்துவோம்!


திருமண அழைப்பிதழ்களிலிருந்து. . . . . .

மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத
முதுடைத்தாமம் நிறை தாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி! நான்
           n  ஆண்டாள் பாசுரம்.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
           n  தமிழ் மறை
பெற்றோரைப் பிறந்தகத்தைப் பிறந்த ஊரைவிட்டுப்
பிரிந்துவந்து பெருநோக்கில் கடையறம் ஆற
மற்றற்ற துறவியெனக் குடும்பத் தொண்டேற்றும்
பண்பாட்டின் அடிப்படையில் என்னப் பதியாய்க் கொண்டென்
நற்றவத்தால் என் வாழ்க்கைத் துணையாகிப் பெண்மை
நலநோக்கில் அன்போடு கருணை கொண்டு
மற்றவர்க்கும் தொண்டாற்றும் மான்பு மிக்க என்றன்
மனைவியை நான் மதிக்கின்றேன் வாழ்த்தி மகிழ்கின்றேன்.
                     n  வேதாந்த மகரிசி
                மணவிழா காணும்
         செல்வன் நிர்மல்ராம்                            செல்வன் சதீஷ்குமார்
         செல்வி    ராதிகா                                 செல்வி    ஜனனி
         [தோழர் பட்டாபிராமன்-                     [தோழர் ராமகிருஷ்ணன்-
                       ஹேமலதா       ]                                            கலாவதி ]

                                         பல்லாண்டு வாழ்க!
                                               22,23.05.2013