NFTECHQ

Friday 31 May 2013

தோழர் RRB

R.R.பாலசுப்ராமணியன் அவர்களை தோழர் RRB என அழைப்பதுதான் அவருக்கு நாம் தரும் மரியாதை. துணைக் கோட்ட அதிகாரியாக பணியாற்றி பணி ஒய்வு பெறுகிறார்(31.05.2013). தோற்றத்தில் எப்படியோ அப்படியே பழகுவதிலும் இனிமை. சிறந்த ஊழியராக, அதிகாரியாக பணியாற்றியவர். 

NFPTE சங்கத்தில் விருதுநகர் கோட்டச் செயலராக தொழிற்சங்கப் பணியாற்றியவர். அவரது தொழிற்சங்கப்பணி அதிகாரிகள் சங்கத்தில் தொடர்கிறது. இந்திய நாட்டில் முதன் முறையாக ஒரு இணைய தளத்தை தொழிற்சங்கப் பணிக்காக துவங்கியது தமிழ் மாநிலச் சங்கம். அதை நிறுவிட, நிர்வகிக்க முழுமையாகப் பணியாற்றியவர். 2002 ஆம் ஆண்டு வெற்றி மாநாடு ஈரோட்டில் நடைபெற்றது. அவரை பாராட்டி மகிழ்ந்தோம்.  தமிழகத்தில் இணைய தளம் இருக்கும் வரையில் அவரது நினைவு நீங்காதிருக்கும்.


அவரது ஓய்வு காலம் பயனுள்ளதாக , நெடியதாக, இனியதாக, நலமுடன் அமைந்திட வாழ்த்துகிறோம்!   

No comments:

Post a Comment