03.06.2013 அன்று பவானி கிளை
மாநாடு சிறப்பாக நடைபெற்றது. தோழர் பாரதி தலைமை தாங்கினார். பல கிளைச் செயலர்கள் பங்கேற்று
சிறப்பித்தனர். மாவட்டச் செயலர் தோழர் குமார் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் சங்க நிர்வாகிகள் தோழர்கள் ஜெயராமன், பங்காரு, குல்சார்
அகமது, நல்லுசாமி, மெளனகுருசாமி ஆகியோர் பங்கேற்றனர். தோழர் செல்வராஜன், தோழர் மாலி
பங்கேற்று வாழ்த்தினர்.
நிர்வாகிகள் தேர்வு ஒருமனதாக
இருந்தது. தோழர் குருமூர்த்தி தலைவராகவும், தோழர் நாகராஜன் செயலராகவும், தோழர் பாலசுப்ரமணியன்
பொருளராகவும் தேர்வு பெற்றனர்.
நெடுங்காலம் நமது சங்கத்தில்
உறுப்பினராக இருந்தவரும், பணி ஓய்வு பெற்ற தோழர் கிருஷ்ணன் குட்டி பாராட்டப்பட்டார்.
தோழர் முருகானந்தம் நன்றி நவின்றார்.
No comments:
Post a Comment