25.01.2014 அன்று மத்திய அரசுத் துறைகளான தபால்,
தொலைத்தொடர்பு (DOT), வருமானவரி மற்றும் பி.எஸ்.என்.எல்
போன்றவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் சங்க ஆண்டு மாநாடு
ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது..
நாம் கண்ட
சிறப்பு அம்சங்கள்
ஆண்டுக்கு ஒரு முறை தவறாமல் ஜனவரி மாதம் மூன்றாவது
வாரத்தில் ஆண்டு மாநாட்டை நடத்துவது என முடிவு செய்து கடந்த 23 ஆண்டுகளாக இந்த
நடைமுறையைப் பின்பற்றி வருகின்றனர்.
ஒரு அமைப்பிற்குத் தேவையான ஒற்றுமை உணர்வு,
அறிவாற்றல், பிரச்னைகளைப் புரிந்து கொண்டு தீர்வு காணும் ஆற்றல்,
சகிப்புத்தன்மை, அனைவரியும் அனைத்துக்
கருத்துக்களையும் ஏற்று அரவணைக்கும் உயரிய் மனப்பாங்கு போன்ற குணங்களைக் காண
முடிந்தது..
உலகத் தொழிலாளர்களை ஒன்றுபடச் சொனனவரின் வழி வந்தோரும்
பிறரும் ஒற்றுமையை உடைத்து பிளவை உருவாக்கிய பின்னரும் தலைமை மீது நம்பிக்கை
கொண்டு 600க்கும் மேற்பட்டோர் இந்த அமைப்பில் நம்பிக்கை கொண்டு உறுப்பினர்களாகத்
தொடர்கின்றனர்.
நிர்வாகிகள் தேர்வு ஒரு மனதாக போட்டியில்லாமல்
நடைபெற்றது.
இவர்களையும் இவர்களின் செயல்பாடுகளையும் பார்க்கும்
போது ஓய்வு பெற்றோர் போன்று உணர முடியவில்லை. மாறாக வருத்தமே இல்லாத வாலிபர்களைப்
போன்ற உணர்வுதான் ஏற்பட்டது..
No comments:
Post a Comment