தோழர் ஞானையா அவர்களுக்கு இன்று பிறந்த நாள்.
அந்தத் தோழருக்கு நமது உள்ளம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
NFPTE சம்மேளனத்தின்
பொதுச் செயலராகப் பணியாற்றி பல பிரச்னைகளுக்குத் தீர்வு கண்ட தோழர். NFPTE சம்மேளனத்தில் பிளவு
ஏற்பட்ட போது சிக்கல்களுக்குத் தீர்வு கண்டு மீண்டும் ஒரு மனதாக பொதுச் செயலராகத்
தேர்வு செய்யப்பட்டார்.
பணி ஓய்வு பெற்ற பிறகு அரசியல் வாழ்வில் அப்பழுக்கற்ற பணியைச் சிறப்பாக
நிறைவேற்றினார்.
ஆழந்த அறிவாற்றலுடன் நாற்பதுக்கும் மேற்பட்ட பயனுள்ள புத்தகங்களை
எழுதியுள்ளார்.
94 வயது. வயதின் காரணமாக இயற்கையான உடல் சோர்வு இருப்பினும் சிந்தனையில்
இன்னும் இளைஞனாக விளங்குகிறார். சிறந்த சமூகச் சிந்தனையாளரான அவர் இன்னும் பல
ஆண்டுகள் பயனுள்ள வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.
No comments:
Post a Comment