NFTECHQ

Saturday 12 July 2014

தண்ணீர் தண்ணீர்



இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் படத்தின் தலைப்பு இது.

பவானியில் காவிரி நதிக் கரையோரத்தில் நமது தொலைபேசி நிலையத்திலும் ஊழியர்கள் குடியிருப்பில் ஒரு சொட்டு தண்ணிருக்கும் வழியின்றித் தவிக்கிண்றனர். இது குறித்து நமது கிளைச் சங்கம் கோட்ட அதிகாரியிடம் முறையாக விவாதித்தது. இதற்கான செலவு தனது நிதி வரம்புக்குள் இல்லாததால் அதற்கான கோப்புகளை மேலதிகாரிக்கு அனுப்பியுள்ளார். நமது மாவட்டச் சங்கமும்  இது குறித்து பொது மேலாளரிடம் விவாதித்தது. உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.

(AGM PLANNING)  கோப்புகளை சிவில் பகுதிக்கு அனுப்பியுள்ளார்.

பவானியில் ஊழியர்கள் மிகுந்த கோபத்துடன் உள்ளனர். இந்த கோபம் நியாயமானதே. நியாயமான கோபம் சூழ்நிலையைச் சூடாக்கும். சூழ்நிலை சூடானால் விளைவுகள் கடுமையாவது இயல்பே.

எனினும் நமது அதிகாரிகள் பிரச்னையின் கடுமையான தன்மையை உணர்ந்து விரைவில் தீர்வு காண்பார்கள் என்ற நம்பிக்கை மாவட்டச் சங்கத்துக்கு உள்ளது.


No comments:

Post a Comment