NFTECHQ

Friday 11 July 2014

சாமான்யனின் கேள்வி



11.07.2014 இன்று காலை ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டே ப்ட்ஜெட் பற்றிய செய்திகளைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர். அவரவர் பார்வையில் விவாதம் நடைபெற்றது.
அப்போது ஒரு கட்டிடத் தொழிலாளி என்னைப் போன்றவர்களுக்கு ஏதாவது இருக்கா என்று கேட்டார். யாரும் அதற்கு பதில் சொல்லவில்லை. அவர் சொன்னார். கட்டிடம்  இடிந்து நான் செத்தால் கூட எதுவும் கிடைக்காது. ஏன்னா என் மனைவி ஏற்கெனவே
வைத்தியம் பாக்க வசதியில்லாத்தால்
கேன்சரில் செத்துப் போயிட்டா.
என்னோட மகனூம் ஒரு விபத்தில் போய்ச் சேர்ந்துட்டான். நாங்கல்ல்லம் ஓட்டைப் போட்டுவிட்டு வெந்தும் வேகாம சாப்பிட்டுட்டு விதி வந்தா சாக வேண்டும். எந்த கவர்ன்மெண்ட் வந்தாலும் எங்க தலையெழுத்தை மாத்த முடியாது என்று சொல்லி விட்டு டீ டம்ளரை வைத்து விட்டு  டீக்கான காசைக் கொடுத்து விட்டு ஒரு கட்டு பீடியை வாங்கிக் கொண்டு சென்று விட்டார்.

No comments:

Post a Comment