NFTECHQ

Wednesday 17 September 2014

தந்தை பெரியார்



தந்தை பெரியார்
பிறந்த தினம் செப்டம்பர் 17
ஈரோட்டில் பிறந்து,
மனிதனை மனிதனாக மதித்து,
பகுத்தறிவை பறை சாற்றி,
சுய மரியாதை உணர்வூட்டி இறுதி வரை கொள்கையில் பிறழாமல் வாழ்ந்தவர்.
ஈரோடு மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழுவின் தலைவராக நாணயத்துடனும் நேர்மையுடனும் பணியாற்றினார். கடவுளை நம்பாத ஒருவரை அறங்காவலர் குழுவின் தலைவராக செய்ல்பட அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கை எழுந்தது. அப்போது ஆண்ட காங்க்கிரஸ் கட்சியின் முதல்வர் கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் அவரது நாணயமான செயல்பாடுதான் முக்கியம். எனவே அப்பதவிக்கு அவர் முழுமையான தகுதி பெற்றவர். அவரை அப்பதவியிலிருந்து நீக்குவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை என உறுதியாகத் தெரிவித்தார்.
ஏற்ற கொள்கைக்கும், பதவிக்கும் பெருமை சேர்த்து வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்தவர்  தந்தை பெரியார்.
ஈரோட்டுப் பெரியார் வழியில் தனிழகம் நடைபோட்டிருந்த்தால் நிலைமை இவ்வளவு சீர்கேட்டுக்கு ஆளாகியிருக்காது.

No comments:

Post a Comment