இந்திய
சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தான் சிறுமி மலாலா
யூசுப்சாய் இருவரும் 2014-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை
பகிர்கின்றனர்.
குழந்தைகள்
நல உரிமைகளுக்காக பல்வேறு அமைதிவழிப் போராட்டங்களை நடத்தியது, குழந்தைகளின்
கல்விக்கான உரிமைகளுக்காக போராடியது உள்ளிட்ட இவர்களது தன்னலமற்ற பங்களிப்புக்காக
அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக
கைலாஷ்
சத்யார்த்தி
டெல்லியில்
வசித்து வரும் 60 வயதாகும் கைலாஷ் சத்யார்த்தி, 1990ஆம் ஆண்டு முதல் குழந்தைத் தொழிலாளர்கள் என்ற சுரண்டலை எதிர்த்து
அறவழியில் போராட்டம் நடத்தி வருகிறார். இவரது குழந்தைகள் மீட்பு அமைப்பு இதுவரை 80,000 குழந்தைகளை பல்வேறு விதமான சுரண்டல்களிலிருந்து மீட்டு மறுவாழ்வு
அளித்துள்ளது.
குழந்தைகளுக்கு
கல்வி அளிக்காமல் சிறுவயதிலேயே வேலைக்கு அனுப்பப்படுவது ஒரு குற்றம் என்று கூறும்
சத்யார்த்தி, இதுவே வேலையில்லாத் திண்டாட்டம், நாட்டின்
வறுமை, கல்வியறிவின்மை ஆகியவற்றுக்குக் காரணம் என்கிறார். இவரது இந்த
கருத்துக்கள் பல்வேரு ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன.
அனைவருக்கும்
கல்வி என்ற திட்டம் உருவானதில் கைலாஷ் சத்யார்த்தியின் பங்களிப்பு உண்டு. இவரது
கருத்துக்கள், இவரது இயக்கம் ஆகியவை நிறைய ஆவணப்படங்கள், தொலைக்காட்சி
தொடர்கள், விழிப்புணர்வு படங்கள் என்று தாக்கம்
செலுத்தியுள்ளது.
இவரது
இந்த தன்னலமற்ற அயராத பணிக்காக இதற்கு முன்னர் ஏகப்பட்ட விருதுகளை
வென்றிருக்கிறார். கைலாஷ் சத்யார்த்தி மனைவி, மகள், மகன்
மற்றும் மருமகள் ஆகியோருடன் இவரது அமைப்பினால் மீட்கப்பட்ட ஏகப்பட்ட சிறார்களுடன்
புது டெல்லியில் வாழ்ந்து வருகிறார்.
மலாலா
இந்திய
சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தியுடன் அமைதி நோபல் பரிசைப் பெறுகிறார் சிறுமி
மலாலா யூசுப்சாய். பாகிஸ்தானில் மகளிர் கல்விக்காக போராடி, அதனால்
பல இன்னல்களையும், தாலிபான்களின் கோபத்திற்கும் ஆளாகியுள்ல
மலாலாவுக்கும் நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது நோபல் கமிட்டியின் ஒரு திட்டமிட்ட
பார்வையின் விளைவினால் என்று கூறப்படுகிறது.
அதாவது, ஓர்
இந்து மற்றும் ஒரு முஸ்லிம், அதிலும் இந்தியர் மற்றும்
பாகிஸ்தானியர் ஆகிய இருவருக்கும் அமைதிக்கான நோபல் பரிசினை அளிக்கும்போது கல்வி
மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராகக் கல்வியின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு
பிரச்சாரத்தில் பங்களிப்பு செய்ய முடிவதாக நோபல் கமிட்டி குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment