வாடிய பயிரை கண்ட போதெல்லாம்
வாடினேன் என்ற கூற்றின் சொந்தக்காரர் வள்ளலார் இதே தினத்தில் தான்
(அக்டோபர்
5)
பிறந்தார். 1823ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் மருதூரில், பிறந்தார்ன் ராமலிங்க அடிகளார். சிறு வயதிலேயே அவரது தந்தை உயிரிழந்ததால்
கடலூரில் இருந்து சென்னைக்கு குடியேறியது அவரது குடும்பம்.
சிறந்த சொற்பொழிவாளர், நூலாசிரியர், மொழி ஆய்வாளர், சித்த மருத்துவர் , சமூக சீர்திருத்தவாதி என
பன்முகங்களை கொண்டவர் வள்ளலார். சன்மார்க்கத்திற்காக வாழ்வை அர்பணித்த வள்ளலார் 1867ஆம் ஆண்டு வடலூரில் தர்ம சாலை ஒன்றை தொடங்கி அனைவருக்கும் உணவு
வழங்கினார். மக்களின் பசியை போக்க வழி கண்டவர் வள்ளலார். வள்ளலார் வாழ்ந்த
காலத்தில் அவரது கருத்துக்கள் அனைத்தும் முற்போக்காகவே பார்க்கப்பட்டன.
No comments:
Post a Comment