நாட்டு மக்களுக்கு சேவை செய்யும் ஒரு
நிறுவனம் அதன் ஊழியர்களின் நியாயமான பிரச்னைகளை காலத்தே தீர்த்து வைக்க வேனண்டியது
அதன் கடமை. அந்த கடமையிலிருந்து நிறுவனம் தவறியிருக்கிறது. இதன் விளைவே
போராட்டங்கள் தவிர்க்க முடியாமல் போகிறது. பல முறை பேச்சு வார்த்தை, பல முறை
போராட்டங்கள் என நடந்த பின்னரும் ஒரு நிர்வாகம் இவ்வாறு அமைதி காப்பது அதற்கு
அழகல்ல. பெற்ற உரிமைகளையும் சலுகைகளையும் நிர்வாகம் பறித்துள்ளது. போதும் என்ற
அளவைத் தாண்டி பொறுத்து விட்டோம். காலத்தே போராட்வில்லை
என்ற் ஆதங்க்கமும் ஊழியர்களுக்கு
உண்டு. உற்பத்தியுடன் இணைந்த போனசை இலாபத்துடன் கூடிய ஊக்க ஊதியம் என்று போட்ட
உடன்பாடு பெரும் சிக்கலை உருவாக்கியது. இலாபம் ஈட்டாத பல்வேறு அரசு மற்றும் பொத்த்
துறை ஊழியர்கள் போனஸ் பெற்று வருவதை அறிவோம்.
இந்த போனசை வழங்குவதால் நிறுவனம்
அழிந்து ஒழிந்து விடாது. இதைப் போன்றே ஊரதிய தேக்க நிலை – இளைய தோழர்களின் ஊதிய
இழப்பு பொன்றவை “மனித வள மேம்பாட்டின்” அ டிப்படையில் ஒரு நிறுவனம் கவனம் செலுத்தி
தீர்வு காண வேண்டிய பிரச்னைகள்.
போராடினால் மட்டுமே தீர்வு வரும் என்ற
நிலை உருவாகி விட்டது. போராடாமல் தீர்வை உருவாக்கும் நிர்வாக நடைமுறை இல்லாமல்
போய்விட்டது.
எனவே நிர்வாகம் நம் மீது திணித்த
நவம்பர் 27 ஒரு நாள் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம்.
No comments:
Post a Comment