NFTECHQ

Sunday 16 November 2014

மார்க்ஸ் என்னும் மாமனிதன்

 “உலகத்தின் உடைமைகள் அனைத்தும் மக்கள் அனைவருக்கும் பொதுவானவை.
அவற்றைக் காலப் போக்கில் சில வசதி படைத்த மனிதர்கள் தங்களுக்கு தனி உடைமையாக்கிக் கொண்டனர்.
தொழிலாளிகளின் உழைப்பைச் சுரண்டி முதலாளிகள் வளர்கின்றனர்.
அதனால்தான் இருப்பவர்கள் சிலருமாக இல்லாதவர்கள் பலருமாகச் சமுதாயம் மாறி வருகிறது.
இந்த நிலை மாற வேண்டும். அதற்கு முதலாளிகள் இணங்க மாட்டார்கள். ஆகவே தொழிலாளிகள்  ஒன்று திரண்டு  போராடி புரட்சி செய்து தங்கள் உரிமைகளைப் பெற வேண்டும்
இதுதான் பொதுவுடைமைக் கொள்கை. இந்தச் சித்தாந்தத்திற்கு செயல் வடிவம் கொடுத்த ஒரு மாபெரும் புரட்சிக்காரரைத்தான் நாம் சந்திக்கவிருக்கிறோம்” இப்படிப்பட்ட ஒரு முன்னுரயுடன் தொடங்குகிறது அந்த வீடியோ காட்சி. தொடர்கிறது
“அவர்தான் ஜெர்மானிய தாடிக்காரன் என்று அறிஞ்ர்களால் மரியாதையோடும்,நேசத்துடனும் அழைக்கப்படும் கார்ல் மார்க்ஸ். 1818ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்த்வர் 
கார்ல் மார்க்ஸ். அவரது தந்தை ஒரு வழக்கறிஞர். குடும்பம் வறுமையில் வாடினாலும் மகனை சட்டம் படிக்க வைக்க வேண்டும் அதன் மூலம் வறுமையைப் போக்க வேண்டும் என்று விரும்பினார். மார்க்ஸின் பெற்றோர் சமயத்தில் அதிகமாக ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தாலும் மார்க்சுக்கு மதம் இனம் இவற்றில் பற்று இல்லை. மதத் தலைவர்களின் போக்கை வெறுத்த அவர் மதத்தால் மக்களுக்கு நன்மை எதுவும் கிடைக்காது என்று அவர் நம்பினார். இளம் வயதிலேயே அவரது சிந்தனைகள் புரட்சிக்ரமாக இருந்தன. தன் தந்தையின் எண்ணப்படியே பான் பலகலைக்கழகத்தில் சட்டத் துறையில் சேர்ந்தார் மார்க்ஸ். ஆனால் வரலாற்றிலும் தத்துவத்திலும் அவர் கவனம் திரும்பியது. நிறைய தத்துவ நூல்களை வாசிக்கத் தொடங்கினார். அவர் மனதில் பொதுவுடைமைத் தத்துவம் வேர் விடத் துவங்கியது.
தனது பொதுவுடைமைக் கருத்துக்களை துண்டுப் பிரசுரமாக வெளியிட்டு பல்கலைக் கழக மாணவர்களிடம் பரப்பினார். பல்கலைக்கழக நிர்வாகம் அவரைக் கண்டித்தும் அவர் தொடர்ந்ததால் வேறு வழியின்றி அவரைப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றியது.
சட்டத்தை ஏற்கெனவே விரும்பாத மார்க்ஸ் பெர்லின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தத்துவம் பயின்றார். 1841ஆம் ஆண்டில் அவருக்குத் தத்துவத்தில் முனைவர் பட்டம் கிடைத்தது. அதன் பிறகு அவரது சிந்தனைகள் மேலும் விரிவடைந்தன. பல்கலக்கழக நாட்களில் ஜென்னி எண்ற பெண்ணை விரும்பினார் மார்க்ஸ். செல்வந்தர் வீட்டுப் பெண்ணான ஜென்னி அவரை விரும்பினார். ஆனால் பொருளாதாரத்தில் இருவருக்கும் இருந்த வேற்றுமைகளைக் காரணம் காட்டி திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார் ஜென்னியின் தந்தை. காதலின் பலம் அவர்களை ஒன்று சேர்த்து வைத்தது. காதலுக்காக செல்வ சுகத்தைத் தூக்கி எரறிந்த ஜென்னி கடைசி வரையில் கார்ல் மார்க்சுக்கு ஆணி வேராக இருந்தார்.
முனைவர் பட்டம் பெற்ற பிறகு ஜெர்மனியின் பத்திரிக்கை ஒன்றுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்றார் மார்க்ஸ்ஆனால் அவரது புரட்சிகரமான எழுத்துக்கு அரசாங்க்கம் தடை விதித்தது. எனவே பாரிசுக்குச் சென்றார். அங்கு பல அரசியல் கட்டுரைகளைப் பல பத்திரிக்கைகளில் எழுதினார்.அவை ரஷ்ய அரசாங்க்கத்தைத் தாக்குவதாக இருந்ததால் ரஷ்யா கேட்டுக் கொண்டதற்கிணங்க அவரை நாடு கடத்தியது பாரீஸ். இச் சமமயத்தில் மார்க்சுக்கு பிரடெரிக் ஏங்கல்ஸ் என்பவரின் நட்பு கிடைத்தது. ஒரு முதலாளியின் மகனாக இருந்தும் தொழிலாளிகளைப் பற்றி அதிகம் கவலைப்பட்டவர் ஏங்கல்ஸ். எனவே இருவருக்கும் நெருங்க்கிய நட்பு ஏற்பட்டது. தொழிலாளர் நலனை மேம்படுத்த மார்க்சும் ஏங்கல்சும் திட்டம் தீட்டினர். தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பேராடி எப்படிப் பெறுவது என்பதை விளக்கும்  தூண்டுப் பிரசுரங்களை பொதுவுடைமை அறிக்கை என்ற பெயரில் இருவரும் வெளியிட்டனர்.
அதில் முதலாளித்துவ சமுதாய அமைப்பினை வன்முறைப் புரட்சிகளால் உடைத்தெறியுமாறு தொழிலாளிகளுக்கு அறிவுறுத்தினார் மார்க்ஸ்.
1847ல் லண்டனில் தொழிலாளர் மாநாடு ஒன்று நடந்தது. அந்த மாநாட்டில்தான் கம்யூணிஸ்ட் மேனிபெஸ்ட்டோ என்ற கம்யூனிச சித்தாந்ததை அறிமுகப்படுத்தி உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்  என்ற முழக்கத்தை மார்க்சும் ஏங்க்கல்சும் முன் வைத்தனர். மார்க்ஸ் பல நாடுகளில் சுற்றித் திரிந்து தன் கொள்கைகளைப் பரப்பினார். கடைசியில் 1849ஆம் ஆண்டு ஏங்கல்ஸின்
உதவியுடன் அவர் லண்டனில் நிரந்தரமாகத் தங்க்கினார்.. பெரும்பாலன நேரங்க்களை அவர் பிரிட்டிஷ் அரும் பொருளகத்தில் நூல்களை படிப்பதில் செலவிட்டார். அப்போது அவர் அதிகம் சிந்தித்து எழுதிய அவரது முதல்  நூல் மூலதனம் . அதாவது கேபிட்டல்.
சமுதாயத்தின் இறந்த காலத்தின் வரலாறு வர்க்கப் போராட்டத்தின் வரலாறு.
முதலாளிகளின் பலம் பெருகப் பெருக தொழிலாளிகள் நசுக்கப்படுகிரார்கள்.
பொறுத்தது போதும் என்று பொங்க்கியெழுந்து தொழிலாலர்கள்  ஒன்றுபட்டு முதலாளித்துவப் போக்கை மாற்ற வேண்டும்.
தொழிலாளிகள் தங்கள் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ள தொழிற்சங்க அமைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
இதுதான் அந்த நூலில் கார்ல் மார்க்ஸ் வாதிட்ட அடிப்படைக் கருத்து.
இன்று உலகம் முழுவதும் தொழிற்சங்கங்கள் இருப்பதற்குக்குக் காரணம் கார்ல் மார்க்ஸ்தான்.
மார்க்ஸின் பொதுவுடைமைக் கருத்துக்கள் உலகம் முழுதும் பரவி வலுப் பெறத் துவங்கின.
மார்க்ஸ் முன்னுரைத்ததைப் போலவே புரட்சிகள் வெடிக்கத் துவங்கின.
1917ஆம் ஆண்டு ரஷ்யாவில் ஆகஸ்ட் புரட்சி நடந்து லெனின் தலைமையில் பொதுவுடைமை ஆட்சி அதாவது கம்யூணிஸ்ட் ஆட்சி மலர்ந்தது. அதன்பின் ஒன்றன் பின் ஒன்றாக செக்கலோஸ்வாக்கியா, யூகோஸ்லாவியா, கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி, போலந்து, பல்கேரியா, ருமேனியா, அல்பேனியா, சீனா, வடகொரியா, வியட்னாம், க்யூபா  போன்ற நாடுகளுக்கு கம்யூனிசம் பரவியது.
உலகம் உய்வு பெற வேண்டும் என்று உழைத்த மார்க்ஸின் குடும்பம் வறுமையில் உழன்றது.
பணக்காரக் குடும்பத்திலிருந்து வந்தும் தனது கணவரின் கொள்கைக்காக அனைத்தையும் துறந்த ஜென்னி தாங்கள் அனுபவித்த வேதனைகளையும் தனது மகளின் மரணத்தையும் டைரியில் குறித்திருக்கிறார் இவ்வாறு (பெண் குரல்)
எங்கள் குட்டி தேவதை பிரென்சிஸ்கா மார்புச் சளியால் மூச்சுத் திணறி இறந்தாள்,
எங்க்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. அவள் பிறந்த போது தொட்டில் வாங்கக் கூட  எங்களிடம் காசு இல்லை.       இறந்த போது சவப்பெட்டி வாங்கக் கூட காசில்லை.
(டைரிக் குறிப்பு நிறைவு)
மார்க்ஸ் என்ற மாமனிதனுக்குத் தூணாக நின்ற ஜென்னிக்கு புற்றுனோய் ஏற்பட்டது.        
அவருக்கு மருந்து வாங்கக் கூட பணம் இன்றித் தவித்தார் உலகம் உய்வு பெற வேண்டும் என்று உழைத்த கார்ல் மார்க்ஸ்.ஜென்னியையும் மரணம் கொண்டு, போக, நிலை குலைந்து போன மார்க்ஸ் இரண்டே ஆண்டுகளில் 1883ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.
பாட்டாளிகளை அவர் அன்போடு காம்ரேட்ஸ் அதாவது தோழர்களே என்று அழைத்தார்.  இண்று கூட தொழிற்சங்கங்களில் அந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது.
பொதுவுடைமைக் கொள்கையில் அடிப்படையில் எந்தக் கோளாறும் கிடையாது. கம்யூணிசத்தின் இன்றைய நிலைக்கு அது நடைமுறைப்பட்ட விதம்தான் காரணமே தவிர, அதன் அடிப்படை நோக்கங்க்கள் அல்ல.     அந்த நோக்கங்க்கள் உயரியவை. மார்க்ஸ் நினத்தது போலவே அது செயல்படுத்தப்பட்டிருந்தால், அதை விட ஒரு நியாயமான பொருளியல் சித்தாந்தம் இருக்குமா என்பது சந்தேகமே.
உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி தங்க இடமின்றி வாழ நேர்ந்த போதும் சமதர்மக் கொள்கை என்ற தன் இலக்கிலிருந்து மாற்வே இல்லை மார்க்ஸ் என்ற அந்த மாமனிதன்.
அவருக்கு வானம் வசப்பட்ட அளவிற்கு வாழ்க்கை வசப்படவில்லைதான்.
ஆனால், இன்றைய உலகில் ஒரு தொழிலாளியின் நலன் காக்கப்படும் ஒவ்வொரு கணமும் மார்க்சுக்குத்தான் நன்றி சொல்கிறது வரலாறு.
மார்க்ஸின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் பாடம் இதுதான்.
துன்பமும் துயரமும் போட்டி போட்டுக் கொண்டு
நம்மைத் தாக்கினாலும் நாம் வகுத்துக் கொண்ட இலக்கை நோக்கி நம் பயணம் தொய்வின்றித் தொடர வேண்டும்.
அவ்வாறு தொடர்ந்தால் ஒருவேளை வாழ்க்கை வசப்படாவிட்டாலும் நிச்சயம் அந்த வானம் வசப்படும்.”
இப்படியாக அந்த ஆடியோ வீடியோ காட்சி நிறைவு பெறுகிறது.
இதைக் கேட்க விரும்புவோர் google இணைய தளத்தில்  karl marx biography in tamil என டைப் செய்து youtube ல் காணலாம். கேட்கலாம் எக்காலத்துக்கும் பொருந்தும் அந்த மாமனிதனின் வரலாற்றின் ஒரு பகுதியை.

No comments:

Post a Comment