நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு
விற்பனை செய்ய அரசு தயாராக இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி
தெரிவித்தார்.
டெல்லியில் இந்தியத் தொழிலக கூட்டமைப்பு புதன்கிழமை (சிஐஐ)
ஏற்பாடு செய்திருந்த உலக பொருளாதார பேரவை மாநாட்டில் பேசுகையில் அவர் இத்தகவலைத்
தெரிவித்தார்.
நஷ்டத்தில் இயங்கும் சில பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் வசம்
சென்றால் அது சிறப்பாக செயல்படும் என கண்டறியப்பட்டுள்ளது. அத்தகைய நிறுவனங்களை
தனியாருக்கு அளிக்க அரசு தயாராக உள்ளது என்று அவர் கூறினார்.
சில பொதுத்துறை நிறுவனங்கள் கட்டாயம் மூட வேண்டிய சூழலில்
உள்ளன. இதனால் அதில் பணிபுரியும் ஊழியர்கள் வேலையிழப்பார்கள். இதே நிலையில்
அவர்கள் தொடர அனுமதிப்பதா அல்லது அத்தகைய நிறு வனங்களை தனியாரிடம் அளிப்பதன் மூலம்
அந்நிறுவனங்களுக்கு புத்துயிரூட்டி வேலையில் தொடரும் நிலையை உருவாக்குவதா என்று
நினைக்க வேண்டும். இப்படி பார்க்கும்போது தனியாரிடம் அளித்து பணியில் தொடர்வதுதான்
சிறந்த முடிவாக ஊழியர்களுக்கு இருக்க முடியும் என்றார்.
நஷ்டத்தில் இயங்கும் நிறு வனங்கள் அரசின் தயவில் வெறு மனே
செயல்பட்டுக் கொண்டிருக் கின்றன. நீண்ட கால நோக்கில் இது சரியான நடவடிக்கையாக
இருக்காது. வரி செலுத்தும் மக்களின் பணம் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனத்துக்கு
தொடர்ந்து செல்வதை மக்கள் தொடர்ந்து அனுமதிக்க மாட்டார்கள் என்று அவர் சுட்டிக்
காட்டினார்.
மொத்தம் 79 பொதுத்துறை நிறு வனங்கள் நஷ்டத்தில் செயல்படு
கின்றன. இத்தகைய நிறுவனங்களில் அரசின் முதலீடு ரூ. 1.57 லட்சம் கோடி
முடங்கியுள்ளது. மேலும் இத்தகைய நிறுவனங்களின் செயல்பாட்டுக்கென பட்ஜெட்டில் ரூ.
10 ஆயிரம் கோடி ஒதுக்கப் பட்டது. இத்தொகை வெறுமனே ஊழியர்களுக்கு சம்பளம்
அளிக்கத்தான் பயன்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் அரசுத்துறை பங்குகளை விற்பனை செய்வதன்
மூலம் ரூ. 43,425 கோடியைத் திரட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்றும் ஜேட்லி
கூறினார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொதுத் துறை நிறுவனங்களுக்குப்
புத்துயிர் ஊட்டி ப்திய பாரதம் படைப்போம் என்றார்கள். ஆட்சிக்கும் வந்தார்கள்.
பாவம் இவ்வளவு தூரம் சிந்திப்பதை விட இந்த நாட்டையே உள்நாட்டு
முதலாளிகளுக்கோ அல்லது வெளி நாட்டு முதலாளிகளுக்கோ விற்று விடலாமே?
இந்திய அரசியல்வாதிகள் ஆள்வதற்கு வக்கில்லாமல் நாட்டை விற்று
விட்டார்கள் என்ற வரலாற்றை வரும் சந்ததி
படித்துத் தொலையட்டும். இந்தியாவை இப்படியும் தூய்மைப்படுத்தலாமோ?
No comments:
Post a Comment