ஈரோடு மாவட்ட
ஆட்சியருக்கு வேண்டுகோள் கடிதம்
பெறுதல்
மாவட்ட ஆட்சித் தலைவர்
ஈரோடு மாவட்டம்
மதிப்பிற்குரிய ஐயா,
வணக்கம்.
பொருள்: நகரங்களை மறுவகைப்படுத்துதல் ம்ற்றும்
உயர்நிலைப்படுத்துதல் --சம்பந்தமாக
தங்களின் மேலான கவனத்திற்கு கீழ்க்கண்ட வேண்டுகோளை
பணிவுடன் சமர்ப்பிக்கிறோம்.
2011ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி
நாட்டில் உள்ள 23 நகரங்களை மறுவகைப்படுத்தியும், உயர்நிலைப்படுத்தியும்
மத்திய அரசின் நிதி அமைச்சகம் 21.07.2015
அன்று உத்தரவிட்டுள்ளது. (உத்தரவின் நகல் தங்களின் மேலான பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது).
இந்த உத்தரவின்படி, ஈரோடு நகரமும் (ERODE UA URBAN
AGGLOMERATION) என்ற அடிப்படையில் தரம்
உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி
1.ஈரோடு நகரம்
2.பவானி நகராட்சி
3.பிராமண பெரிய அக்ரஹாரம்
4.காசிபாளையம்
5.மேட்டு நாசுவம்பாளையம்
6.பெரியசேமூர்
7. சூரம்பட்டி
8. சூரியம்பாளையம்
9.வீரப்பன்சத்திரம்
போன்ற பகுதிகளை உள்ளடக்கி ஈரோடு நகரத்தின் கூட்டுப்
பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(உத்தரவின் நகல் தங்களின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது)
இந்த உத்தரவின் மூலம் மேற்கண்ட பகுதிகளில் பணியாற்றும்
அரசு மற்றும் அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சத வீட்டு வாடகைப்படி கிடைக்கும்.
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் ஈரோடு நகரில் பணிபுரியும்
ஊழியர்களுக்கு மேற்கணட உததரவின் அமலாக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில்,பவானி மற்றும் காளிங்கராயன்பாளையத்தில்
பணிபுரியும் ஊழியர்களுக்கு மேற்கணட உததரவின் அமலாக்கம் மற்றும் அதனால் ஊழியர்களுக்குக்
கிடைக்கும் பலன்கள் குறித்து ஈரோடு மாவட்ட
பி.எஸ்.என்.எல் நிர்வாகம் வழிமுறைகள் குறித்து விளக்கம் கேட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட இடங்களில் (பவானி மற்றும் காளிங்கராயன்பாளையம்) பணிபுரியும்
தபால் துறை
ஊழியர்களுக்கு இந்த உத்தரவின்படி 20 சத வீட்டுவாடகைப்படி வழங்கப்பட்டுள்ளது.
எனவே தாங்கள் இது குறித்த வழிமுறைகளை வழங்கி
பவானி மற்றும் காளிங்கராயன்பாளையத்தில் பணிபுரியும்
பி.எஸ்.என்.எல் ஊழியர்களும் இந்த உத்தரவின் மூலம் பலன்பெற
உதவுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.
நன்றியுடன்
தங்கள் உண்மையுள்ள
(N.பழனிவேலு)
மாவட்டச் செயலர்