03.01.2015 அன்று மாவட்டச் செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில் அமைப்பைப் பற்றி விரிவான ஆய்வு செய்யப்படும்.
2014 ஜனவரி முதல் 2014 டிசம்பர் வரை மாவட்டச் சங்கத்தின்
செயல்பாடு,
நிறைகள், குறைகள், உறுப்பினர் எண்ணிக்கையில் கூடுதல்
குறைதல், வரவு செலவின் நிலை,
போராட்டங்கள் அவை தந்த படிப்பினைகள்
பற்றி ஆய்வு செய்யப்படும்.
02.09.2014 அன்று மாநிலம் தழுவிய பணிக்குழு உறுப்பினர்கள்
சந்திப்பு/பயிலரங்கம் ஒன்றை மாநிலச் செயலரின் வேண்டுகோளை ஏற்று நடத்தினோம்.
அதற்கு ரூபாய் 50,000 செலவானது. அதன் விளைவு என்ன என்பது குறித்தும்
ஆய்வு செய்வோம்.
ERP அமலாக்கம் அதன் நிறைகள் குறைகள் குறித்து
ஆய்வு செய்வோம்.
பிரச்னைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை என்ற ஆதங்கம் இருப்பது
யதார்த்தம்.
குப்தாவின் காலம் போல் இல்லையே என்ற ஏக்கம் உள்ளது.
சவால்கள் ஏராளமாக உள்ளன.
சவால்களை எதிர்கொள்ளும் நம்பிக்கையுடன்தொடர்ந்து பயணிப்போம்.
இந்த நம்பிக்கைதான் நமது பலம்.
No comments:
Post a Comment