NFTECHQ

Monday 5 January 2015

செயற்குழு முடிவுகள்

ஜனவரி 6,7,8 தேதிகளில் தர்ணாவைச் சிறப்பாக நடத்த் வேண்டும். காலவரையற்ற வேலைநிறுத்தத்தை திட்டமிட்டு சிறப்புடன் நடத்த வேண்டும். கையெழுத்து இயக்கத்த இலக்கை எட்டும் வகையில் நடத்தி முடிக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் அனைவருக்கும் டிசம்பர்2014 சம்பளம் 31.12.2014ல் கிடைத்தது. இதற்கு உழைத்திட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ERP பணியில் சிறப்பாகச் செயல்பட்ட தோழர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ERP அமலாக்கத்தில் உள்ள சில குறைகள் தெரிவிக்கப்பட்டன. “supplementary bill” தயாரிக்க வழிவகை காண வேண்டும். அமைப்பு நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. நிர்வாகிகளும் கிளைச்செயலர்களும் தங்கள் கருத்துக்களை முழுமையாகவும் மனம் விட்டும் பேசினர். காலவரையறை எதுவும் நிர்ணயம் செய்யாத்தால் அவர்கள் தங்கள் கருத்துக்கள் அனைத்தையும் தெரிவிக்க வாய்ப்பு கிடைத்தது. போராட்டங்கள் பலன் தரும் வகையில் இருக்க வேண்டும். 30 அம்சக் கோரிக்கைகளில் ஒன்றைக் கூட தீர்க்கவில்லை என்ற ஆதங்கம் தெரிந்தது. உடன்பாட்டோடு போராட்டங்கள் முடிக்கப்பட்ட பழைய வரலாறுகள் போல் தலைவர்கள் செயல்பட வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டது. ERP அமலாக்கத்தின் காரணமாக ஊழியர்கள் செக்ஷன் மாற்றல் குறித்து தொழிற்சங்கத்தைக் கலந்து பேசி நிர்வாகம் முடிவு காணவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 1960 முதல் நடைபெற்ற பல்வேறு போராட்டங்கள் குறித்தும் இன்றைய போராட்டத்தின் அவசியம் குறித்தும் தோழர் மாலி ஒரு எழுச்சி மிக்க உரையாற்றினார். மாவட்டச் செயலர் வரும் கால் சிறப்பான செயல்பாட்டுக்கு பல திட்டங்க்களை அறிவித்து அவை செயல்வடிவம் பெற அனைவரும் பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஒரு நிறைவான பயனுள்ள செயற்குழுவாக அமைந்தது.

No comments:

Post a Comment