NFTECHQ

Friday 30 January 2015

வாழும் எம்மான்

சனவரி 25, 1948 அன்று காந்தியடிகள் எழுதிய கடிதத்தில் இடம் பெற்ற வரிகள்
"நான் ராமனின் சேவகன். அவன் விரும்புகிறவரை அவனுக்கான பணியை நிறைவேற்றுவேன். உண்மை மற்றும் அகிம்சையின் வலிமையை உலகுக்கு உணர்த்தக்கூடிய ஒரு மரணத்தை அவன் எனக்கு அருளுவானானால், நான் எனது வாழ்க்கை லட்சியத்தில் வெற்றி பெற்றவனாவேன்.
நான் அவற்றை மனப்பூர்வமான முறையில் பின் தொடர்ந்திருந்தால், கடவுளை சாட்சியாகக் கொண்டு நான் செயல்பட்டிருந்தால் அத்தகைய மரணத்தைக் கட்டாயம் எனக்குக் கடவுள் அருள்வான்.
யாராவது ஒருவன் என்னைக் கொல்வானானால், அந்தக் கொலையாளியின் மீது எத்தகைய கோபமும் எனக்கு ஏற்படக் கூடாது. நான் ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டே மரணமடைய வேண்டும். எனது இந்த விருப்பத்தை பிரார்த்தனைக் கூட்டத்தில் நான் வெளிப்படுத்தினேன்'.
சனவரி 29, 1948 வியாழக்கிழமை இரவு 9.15 மணிக்கு படுக்கைக்குச் செல்லுவதற்கு முன்னர் உருது மொழியில் அமைந்த இரு வரிப் பாடல் ஒன்றை மனு காந்தியிடம் காந்திஜி மேற்கோள் காட்டினார். அது "உலகம் என்ற தோட்டத்தில் வசந்த காலம் சில நாள்களுக்கு மட்டுமே நீடிக்கிறது. அந்த அழகிய காட்சியைச் சிறிது நேரம் கண் திறந்து பார்த்திடுக'.

காந்தியடிகளைக் கொன்ற கொலைகாரன் கோட்சேவுக்குக் கோவில்கள் கட்டுவோம் என்று ராம பகதர்கள் எக்காளமிடுகின்றனர். ராமனின் பெயரைச் சொல்லும் அரசும் கண்டிக்கக்த் துணிவின்றி வெடிக்கை பார்க்கிறது.

காந்தியை ஒரு முறை கொன்றது போதும். தினமும் கொலை செய்ய வேண்டாம்.

No comments:

Post a Comment