27.05.2015 அன்று
கொடுமுடி கிளை மாநாடு வழக்கத்திற்கே உரிய முறையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தோழர்கள்
லோகனாதன், தியாகராஜன்,
பழனிசாமி
ஆகியோர் முறையே தலைவர்,
செயலர், பொருளர் பொறுப்ப்களுக்கு ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
ஓய்வு
பெற்றாலும் மிகச் சிறப்பாக வழிகாட்டும் தோழர்
சுப்ரமணியம் (டெக்) தனது பணியை சிறப்பாகத் தொடர்கிறார்.
“தன் உயிர் உடலை
விட்டு பிரிந்த பிறகு NFTE கொடி
தனது உடம்பில் போர்த்தப்பட வேண்டும்” என்பது
அவரது வேண்டுகோள்.
இந்த
மாதம் பணி ஓய்வு பெறும் தோழர் பிரகாசம் (மாவட்ட உதவித் தலைவர்) அவர்களுக்கு பணி
நிறைவு பாராட்டு விழாவும் சிறப்பாக நடத்தப்பட்டது.
தோழர்கள்
மாலி, யாசின், லாசர், குல்சார்,
மெளனகுருசாமி, ராஜேந்திரன்,நாகராஜன், நல்லுசாமி,
புண்ணியகோட்டி, ரங்கனாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தோழர் குலோத்துங்கன்
சிறப்பு மிகு தலைமயேற்றார்.
புதிய
நிர்வாகிகள் செயல்பாடு சிற்க்க வாழ்த்துக்கள்.
தோழர்
பிரகாசம் பல்லாண்டு நீடுழி வாழ வாழ்த்துகிறோம்.
No comments:
Post a Comment