செப்டம்பர் 2
பொதுவேலை நிறுத்தத்திற்கான
கோரிக்கைகள்
1.விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை
எடு.
2.வேலைகளைஉருவாக்கி வேலையின்மையைப் போக்கு.
3.நடைமுறையில் உள்ள தொழிலாளர் நலச் சட்டங்களை கறாராக
அமல்படுத்து. தொழிலாளர் நலச் சட்டங்க்களை மீறும் செயல்களை அனுமதிக்காதே.
4.அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூகப் பாதுகாப்பு
உரிமையை வழங்கு.
5.ரூபாய் 15000/- என்பதை குறைந்த பட்ச
சம்பளமாக நிர்ணயம் செய்.
6.குறைந்த பட்ச மாத ஓய்வூதியம்
ரூபாய் 3000 என்பதை உறுதிப்படுத்து
7. பொதுத்துறைகளின் பங்கு விற்பனையை நிறுத்து.
8. நிரந்தரப் பணிகளில் ஒப்பந்த ஊழியப் பணியை அமலாக்காதே
9.போனஸ், வைப்புந்தி, பணிக்கொடை- இவற்றிற்கானஉச்ச
வரம்பை உயர்த்து.
10. தொழிற்சங்களின் பதிவு செய்யும் கோரிக்கையை,
விண்ணப்பித்த 45 நாட்களுக்குள் பதிவு செய்.
11. தொழிலாளர் விரோத சட்டங்க்களை அமல்படுத்துவதை
கைவிடு.
12.ரயில்வே, இராணுவம், காப்பீடு போன்ர துறைகளில்
அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டத்தைக் கைவிடு.
மத்திய தொழிற்சங்கங்க்கள்
அனைத்தும் இணைந்து இந்திய தேசத்தையும்,
இந்திய தேசத்து மக்களையும்,
தொழிலாளிகளையும் பாதுகாக்க இந்த
வேலை நிறுத்த அறைகூவலை விடுத்துள்ளன.
ஒரு இந்தியன் என்ற உணர்வோடும்,
தேசபக்த உணர்வோடும் இந்த் வேலைநிறுத்தத்தில் பங்க்கேற்க
வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment