NFTECHQ

Saturday 19 September 2015

செப்டம்பர் 19
மத்திய அரசு ஊழியர்கள் தேவைக்கேற்ற குறைந்தபட்ச ஊதியம், பஞ்சபடியை அடிப்படை சம்பளத்துடன் இணைத்தல் , பஞ்சப்படி வழங்குவதற்கான விதிமுறைகளை  முதலிய  9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 1968 செப்டம்பர் 19 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தனர்.
அரசு கடுமையான அடக்குமுறைகளை ஏவியது. துப்பாக்கி சூட்டில் 9 தோழர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர். பத்தயிரத்துக்கும்   மேற்பட்டோர் தற்காலிக வேலைநீக்கம் செய்யப்பட்டனர்.   3,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். 8,000 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சேவை முறிவு தொலைதூர இட மாற்றம் , பதவி இறக்கம் முதலான நடவடிக்கைகள் தொடர்ந்தன.


இத்தகைய தியாகங்களால்தான் இன்று நாம் பல உரிமைகளை அனுபவித்து வருகிறோம். செப்டம்பர் -19- தியாகிகளுக்கு வீர வணக்கம் 

No comments:

Post a Comment