NFTECHQ

Monday 28 September 2015

கேட்டது

ஒரு பொருளாதார நிபுணர் ஒரு உரையாடலில் தெரிவித்த கருத்துக்கள்
இந்திய நாட்டு மக்கள் தேர்தலின் போது மட்டுமே ஜனநாயக உரிமை மற்றும் கடமை பற்றி சிந்திக்கின்றனர்.அதன் பிறகு அடுத்த தேர்தலின் போதுதான் அவர்களுக்கு அந்த நினைவு வருகிறது.
இடைப்பட்ட காலத்தில் மக்கள் தங்கள்  அடிப்படை உரிமைகள் பறிபோவதைப் பற்றி சிந்திப்பதும்ல்லை. கவலைப்படுவதுமில்லை.
ஒரு சிலர் மட்டுமே குரல் எழுப்புகின்றனர். போராட்டங்களை நடத்துகின்றனர். அரசே எல்லாப் பணிகளையும் செய்துவிட முடியாது. அதற்காக தனியாரிடமே அனைத்த்கையும் கொடுத்து விடவும் கூடாது. அரசும், தனியாரும் இணந்துதான் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.
அரசுத் துறைகள் சேவையை மட்டுமே முதன்மைப்படுத்தி பணியாற்ற வேண்டும். லாபத்தைப் பற்றி சிந்திக்கக் கூடாது.
தனியார் நிறுவனங்கள் சேவையைப் பற்றி கவலை கொள்வதில்லை. அவர்களின் நோக்கம் லாபம் மட்டும் அல்ல.
அரசின் சலுகைகளைப் பெற்று,
அரசையும் ஏமாற்றி,
மக்களைக் கொள்ளை அடிப்பதுதான்
தனியாரின் நோக்கம்.
1000 கோடி ரூபாய் முதலீடு செய்து 5000 கோடி ரூபாய் லாபம் சம்பாத்திவிட்டு கடையைக் கட்டுவதே தனியாரின் நோக்கம்.
அரசின் பிரச்னைகள் குறித்து மக்களுக்குத் தெரிவதில்லை.
மக்களின் பிரச்னைகள் குறித்து தெரிந்தாலும் அரசு அதைபற்றி அலட்டிக் கொள்வதிகல்லை.
பொதுத்துறை நிறுவனங்களைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது அரசின் தலையாய கடமை.
அவற்றை விற்று விடுவது என்ற   திட்டம் நாட்ட்டுக்கு கேடு விளைவிக்கும்.
பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோர் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.
தனியார்மயம் என்பதே சர்வரோக நிவாரணி என்று அரசு நினைப்பது கொழுந்து விட்டு எரியும் நெருப்பில் தலையை விடுவத்றகுச் சமம்


No comments:

Post a Comment