அஹிம்சை
ஏவுகணை வானத்தில்ஏவிகோள்கள் சுற்றவிட்டும்
காவுகொள்ளும் சாதிகளின்
கலவரங்கள் ஓயவில்லை !
தொழிற்கூடம் பெருகிநாட்டில்
தொழில்வளர்ச்சி உயர்ந்தபோதும்
விழிசிந்தும் பசிவயற்றில்
வாடுவோர்கள் குறையவில்லை !
ஆயிரமாம் கோடிகளில்
திட்டங்கள் செயல்பட்டும்
பாயிரமாம் பாட்டாளி
படுந்துயரோ மறையவில்லை !
அறிவியலில் முன்னேற்றம்
அடுக்கடுக்காய் நாம்கண்டும்
நெறிபிறழ்ந்த அரசியலால்
நேர்மையாட்சி காணவில்லை !
காந்திமகான் சாந்திவழி
கண்டளித்த சுதந்திரத்தை
ஏந்தியின்று வன்முறைக்கே
ஏலம்விட்டுக் கலங்குகிறோம் !
அன்பென்னும் நல்வழியில்
அகிம்சையினை நெஞ்சிலேற்போம்
ஒன்றுபட்டுச் சுயநலத்தை
No comments:
Post a Comment