NFTECHQ

Sunday 8 November 2015

அவுரங்காபாத்
மத்திய செயற்குழு தீர்மானங்க்கள்
போனஸ் 

போனஸ் வழங்குவதற்கான  வரையறைகளை  போனஸ் குழுஇறுதி செய்யாத நிலையில்.. தீபாவளிக்குள் தற்காலிக  போனஸ்வழங்கிடக்கோரி 
அகில இந்தியத்தலைவர்களும்.. மாநிலமட்டத்தலைவர்களும் 
காலவரையற்ற உண்ணாவிரதத்தைமேற்கொள்ளுமாறு
மத்திய செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

வைப்புநிதி – GPF

வைப்புநிதி பட்டுவாடா செய்வதில் நிகழும் தாமதங்களைவருத்தத்துடன் செயற்குழு உற்று நோக்குகிறது. வைப்பு நிதிக்கானநிதியை BSNLக்கு உடனுக்குடன்  DOT அனுப்ப வேண்டும் எனவும்..தற்போது நிலவும் 
தாமதங்களை தீர்ப்பதற்கு BSNL  நிர்வாகம் முயலவேண்டும் எனவும் மத்திய செயற்குழு 
கேட்டு`ள்கிறது.

78.2சத IDA சம்பள அடிப்படையில் 
வீட்டுவாடகைப்படி 

12/06/2012 வேலை நிறுத்த உடன்பாட்டின்படி 01/04/2013 முதல்HRA  வாடகைப்படி  78.2 சத  IDA சம்பள அடிப்படையில்வழங்கப்பட்டிருக்க வேண்டும். 
ஆனால் வழக்கம் போல் நிர்வாகம்தனது உறுதிமொழியை நிறைவேற்றவில்லை. எனவே BSNLநிர்வாகம்  உடனடியாக 78.2 சத  
IDA சம்பள அடிப்படையில் வீட்டுவாடகைப்படி 
வழங்கிட வேண்டும்.

நேரடி நிய1மன  ஊழியர்களுக்கு
ஓய்வூதியப்பலன்கள்.

BSNLலில் நிரந்தரம் பெற்ற ஊழியர்களுக்குபுதிய ஓய்வூதியத்திட்டம் 
வகுக்கப்பட வேண்டும் என 12/06/2012வேலை நிறுத்தத்தின் போது 
உடன்பாடு  எட்டப்பட்டது.  ஆனால்ஆண்டுகள் 3 கழிந்த போதும் எந்த அசைவுமில்லை. 
எனவேஉடனடியாக BSNL நிர்வாகம் நேரடி நியமன ஊழியர்களுக்கு 
12 சதபங்களிப்பின் அடிப்படியில் புதிய ஓய்வூதியத்திட்டத்தை 
அறிவிக்கவேண்டும்.

ஓய்வூதியப் பங்களிப்பு 

BSNL உருவாக்கத்தின் போது ஊழியர்களுக்கான ஒய்வூதியநிதியை  அரசே வழங்கும் என உடன்பாடு போடப்பட்டது. ஆனால்15/06/2006 அன்று 
அரசு 60 சத நிதிச்சுமையை மட்டுமே ஏற்கும்என்றும்..  40 சத நிதிச்சுமை BSNL  நிர்வாகத்தால் ஏற்கப்படவேண்டும் எனவும் உத்திரவு 
இடப்பட்டுள்ளது. இந்த ஊழியர்விரோத உத்திரவு உடனடியாக 
விலக்கிக்கொள்ளப்பட வேண்டும்.இதற்கான போராட்டங்களில் 
அனைத்து சங்கங்களையும்இணைத்து போராட மத்திய
 செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

DELOITTE குழு அறிக்கை 

ஒரு லட்சம் ஊழியர்களை உபரியாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளஊழியர் விரோத DELOITTE குழு அறிக்கை முழுமையாக ரத்துசெய்யப்பட  
வேண்டும். அகன்ற அலைவரிசை BROAD BAND பழுதுகளை தனியாருக்கு விட எத்தனிக்கும் முயற்சிகைவிடப்பட 
வேண்டும்.  BSNLன் வளர்ச்சிக்கு குந்தகமான இத்தகைய மோசமான 
முடிவுகளை எதிர்த்து போராட்டக்களம்காண 
மத்திய செயற்குழு அறைகூவல் விடுக்கிறது.

செல் கோபுரம் தனி நிறுவனம் 

செல் கோபுரங்களைத் தனியாகப் பிரித்து துணை நிறுவனம்ஏற்படுத்த முயற்சிக்கும் அரசின் போக்கை செயற்குழுவன்மையாகக் 
கண்டிக்கிறது. இதனால் ஏற்படும் செலவினங்கள்மற்றும் ஊழியர் 
பிரச்சினைகளை நிர்வாகம் கணக்கில்கொள்ளவில்லை.  மேலும் இதற்காக அமைக்கப்பட்ட குழுவில்ஊழியர் தரப்பில் இருந்து 
யாரும் நியமிக்கப்படவில்லை. எனவேதனி செல் கோபுர நிறுவன
 உருவாக்கத்தால் உருவாகும் தீயவிளைவுகளை எதிர்த்து 
ஒன்றுபட்ட போராட்டம் காண செயற்குழுவேண்டுகோள் விடுக்கிறது.

மாற்றல் கொள்கை 

மாற்றல் கொள்கையில் கிராமப்புற பகுதிகளுக்கு 3 வருட 
காலநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது . இது ஏற்புடையதல்ல. 3 ஆண்டுகள்என்பது அதிகமான காலமாகும். எனவே 
3 ஆண்டுகளுக்குமுன்னேயே சூழல்களைப் பொறுத்து மாற்றல் இடுவதற்கு 
உரியதிருத்தங்கள் மாற்றல் கொள்கையில் கொண்டு 
வரப்பட வேண்டும்.

நன்றி  காரைக்குடி இணையதளம்


No comments:

Post a Comment