NFTECHQ

Sunday 6 December 2015

டிசம்பர் 6

அம்பேத்கரின்  நினைவு தினம்-125



அம்பேத்கர்  அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்பட்டார். சாதியும் தீண்டாமையும் இந்திய நாட்டில் மட்டும் எப்படி இருக்கிறது என்று ஆராய்ச்சி நடத்தினார். ஒருவரைத் தொடர்ந்து ஏழையாக வைத்திருக்கவும், அவரிடம் மிகக் குறைவான சம்பளத்தைக் கொடுத்து அதிகமான வேலைகளை வாங்கவும் ஏற்படுத்தப்பட்டதுதான் சாதி என்ற அமைப்பு. தீண்டப்படாத மக்கள் தங்களது உரிமைகளை இழந்து நிற்கிறார்கள். எனவே, இது ஒரு அரசியல் பிரச்சினை என்று அம்பேத்கர் கூறினார். அரசியல் ரீதியில் இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணவும் முயன்றார். அதன் விளைவாக தீண்டப்படாத நிலையிலிருந்த மக்கள் நாடாளுமன்றத்திலும் சட்ட மன்றங்களிலும் உறுப்பினர் ஆவதற்கு வழிசெய்தார்.

அம்பேத்கரின்  நினைவு தினத்தில்  அவரது கனவுகள் நிறைவேற சபதமேற்போம்.


No comments:

Post a Comment