நன்றி விமல்
கல்லூரி நாட்களில்
உன் கவிதயால்
என்னைக் கட்டிப்போட்ட
நண்பன் நீ
அப்போது நினைத்தோமா நாம்.
தோழன் என்ற வார்த்தையின்
பொருளோடு நம் வாழ்வு
தொடரும் என்று.
தக்க சமயத்தில்
ஒரு கவிதை தந்து உதவிய என்
தோழனே நன்றி
தோழன் விமலாத்தித்தனின்
கவிதை
எங்கள் உயிர் சங்கம் NFTE BSNL
அத்துக்கூலி என்று சொல்லி
அவமானம் செய்தவரை
ஓரங்கட்டி துரத்தியே
ஒதுக்கிய சங்கம் NFTE
அதிகாரியின் வால் பிடித்து
அற்பனுக்கெல்லாம் காசு அழுது
வேலை பெற்ற கொடுமையினை
வேரறுத்த NFTE
நிரந்தரங்கள் என்பதெல்லாம்
நிச்சயமாய் கனவு தான்
என்று சொன்ன வீணருக்கும்
வாழ்வு தந்தது NFTE
நன்றி கெட்ட மனிதருக்கும்
நலமே செய்தது NFTE
நான்காம் பிரிவு ஊழியரை
மூன்றாம் பிரிவு ஊழியராக்கி
அதிகாரியாய் மேலும உயர்த்தி
அழகு பார்த்த NFTE
ஓய்வு பெற்ற ஊழியரின
ஒவ்வொரு பிடி சோற்றுக்குள்ளும்
உப்பு போல கரைந்திருக்கும்
O P குப்தா பென்சன் திட்டம்
இன்றும் எங்கள் வாழ்விலே
இனிமை சேர்த்த சங்கத்தை
நன்றியோடு தெய்வமாக
நாளும் நாளும் வணங்குவோம்
வாக்களிப்பீர்
NFTE இயக்கத்தின்
இணைந்த கரங்கள் சின்னத்தில்
No comments:
Post a Comment