ஓய்வு பெற்றோருக்கும்
மகுழ்ச்சி
ஓயாது உழைப்போருக்கும்
மகிழ்ச்சி
செப்டம்பர் 2000.
ஊழியர்களின்
உக்கிரமான போராட்டம்.
குப்தா என்னும் மாமனிதனின்
மாபெரும் தலைவனின் விவேகம் மற்றும்
புத்திசாலித்தனத்தால் விளைந்தது ஒரு நன்மை.
ஓய்வுதியத்திற்கான செலவை
அரசே ஏற்கும் என்பதை உறுதி செய்து
உத்தரவாகவும் பெற்றுத் தந்தவர் தோழர் குப்தா.
இது ஒரு அதிசயம் என்று
அறிவு டையோர் பாராட்டினர்.
20006 வரை ஆறு ஆண்டுகள்
எவ்விதப் பிர்சனையும் இல்லை.
15.06.2006 அன்று உருவான உடன்பாட்டை உதறிய
அரசு ஓய்வூதியச் செலவில்
60 சதவிகிதத்தை மட்டுமே
அரசு ஏற்கும் என உத்தர்விட்டது.
தோழர் குப்தா இந்த
உத்தரவைக் கடுமையாக எதிர்த்தார்.
ஆனால் என்ன செய்ய....
அங்கீகாரச் சங்கம் அமைதி காத்தது.
இதை எதிர்த்து அனைத்து சங்கங்க்களும் எதிர்த்து
குரல் கொடுத்த்தால்
நிலைமை மாறியது.
15.06.2006 உத்தரவு ரத்தானது.
ஓய்வூதியச் செலவை
அரசே ஏற்கும் என்ற நிலை
உத்தரவாதமாகியுள்ளது.
இதனால் ஓய்வு பெற்றோருக்கும் நிம்மதி.
பணியில் இருப்போருக்கும் நிம்மதி.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
ரிலையண்ஸ் மற்றும் ஏர்செல்
நிறுவனங்க்களின் முதலாளிகளுக்கு
முண்டாசுக் கவி
பாரதியின் வரிகள் புரிகிறது.
ஆனால் உழைக்கும் வர்க்கத்திற்கு
ஏன் புரியவில்லை?
உழைக்கும் வர்க்கத்திற்கு
வழி காட்டுவோரூகும் ஏன் புரியவில்லை?
உழைக்கும் வர்க்கத்தைப்
பிரித்தாளும் சூழ்ச்சியை
முதலாளித்துவம்தான் செய்யும்.
ஏனெனில் அது அதன் தொழில்
ஆனால்...
No comments:
Post a Comment