NFTECHQ

Thursday 29 September 2016


பட்டுக்கோட்டையார் பாடல்

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா
இது கொள்ளையாடிப்பதில் வல்லமை
 காட்டும் திருட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா

இருக்கும் அறிவை மடமை மூடிய
இருட்டு உலகமடா
வாழ்வில் எந்த நேரமும் சண்டை ஓயாத
முரட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா

விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்து விளையாடும்ம்ம்ம்... ஊஊஓ....
விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்து விளையாடும்ம்ம்ம்
மனம் வெந்திடும் தோட்டக்காரனிடம்
மிரட்டல் வார்த்தைகளிலாடும்
பல வரட்டு கீதமும் பாடும்
வித விதமான பொய்களை வைத்தது
பிழைக்கும் உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா

அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு
அகந்தை குரங்கு தாவும்
அதன் அழகை குலைக்க மேவும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும்
சிலர் குணமும் இதுபோல்
 குறுகிப் போகும் கிறுக்கு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா


அவர் இன்று உயிரோடு இருந்திருந்தால் ஒரு வேளை
தோழா என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கக் கூடும்.

ஆயிரம் பட்டுக்கோட்டையார்கள் அவதரித்து ஆயிராம் பாடல்கள் இதுபோல் எழுதினால்தான் குறுக்கு வழிக்காரர்கள் திருந்துவார்களோ
பவானி பிரச்னையில் தவறாகப் பயணித்த நிர்வாக்ம் தவறைத் திருத்துவதாகக் கூறியுள்ளது.

பரமக்குடி பாதையில்
ஈரோடு பயணிக்காது என்பதும் நமது நம்பிக்கை.

No comments:

Post a Comment