NFTECHQ

Thursday 29 September 2016

விருது அல்லது வி.ஆர்.எஸ்


"ஒரு இலட்சம் கிராமப் பஞ்சாயத்துக்களை OFC கேபிள் மோலம் இணைக்க வேண்டும்.

2.5 இலட்சம் கிராமங்களை ப்ராட்பேண்ட்  வசதி மூலம் இணைக்க வேண்டும்.

பிரதமரின் டிஜிட்டல் இந்தியா என்னும் கனவை
குறிப்பிட்ட காலத்துக்குள் நனவாக்க வேண்டும்.

பி.எஸ்.என்.எல் நிறுவனம்
புதிய  சிந்தனையோடு
புதிய ஆராய்ச்சிகளோடு,
புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி
பிரதமரின் கனவான இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியை
உருவாக்க வேண்டும்.

கிராமப் புறங்களில்  தகவல் தொழில் நுட்ப வசதியின்றித் தத்தளிக்கும் மக்களுக்கு அந்த வசதியைத் தர பி எஸ் என் எல் அதிகாரிகளும் ஊழியர்களும் உழைத்திட வேண்டும்.

இந்திய தொலைத்தொடர்புச் சந்தையில் பி எஸ் என் எல் நிறுவனத்தின் பங்கை 15 சதவிகிதமாக உயர்த்திட வேண்டும்.

புதிய தொழில்நுட்பம்,
திறமையான ஊழியர்கள்,
போதுமான உபகரணங்க்கள்
மற்றும் நிதி ஆதாரம்
இவற்றைக் கொண்டுள்ள பி எஸ் என் எல்
தனியார் நிறுவனங்க்களோடு போட்டி போட வேண்டும்.

தரைவழித் தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டே வருகிறது. இது பற்றி
சீரியசாக சிந்திதித்து செயல்பட வேண்டும்.

சேவையின் தரத்தை மேம்படுத்தினால் மட்டுமே பிளான் 49 போன்ற பல்வேறு திட்டங்கள் வெற்றி பெறும்.

வாடிக்கையாளரின் குறைகள் உடனுக்குடன் தீர்வு காணப்பட வேண்டும். இதில் கவனக்குறைவு என்பதைச் சகித்துக் கொள்ள்வே முடியாது. 

வைராக்கியத்துடன் பணியாற்றுவோருக்கு விருது கள் வழங்க வேண்டும்.
தொடர்ந்து எதிர்மறை வளர்ச்சியைக்
(Negative Growth) கொடுத்து வரும் பகுதியில் பணியாற்றுவோர் வி ஆர் எஸ் திட்டத்தில் வெளியேற வேண்டும்."

இப்படி பேசியவர் இந்திய நாட்டின் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் திரு மனோஜ் சின்ஹா.

சிறப்பாகப் பணியாற்றிய ஊழியர்களுக்கு 27.09.2016 அன்று நடைபெற்ர விருது வழங்கும் விழாவில்தான் அமைச்சர் இவ்வாறு பேசியுள்ளர்ர்ர்.

அமைச்சரின் அக்கறையான சில கருத்துக்களுக்கு பாராட்டுக்கள்.

நமக்கு எழும் கேள்விகள்


போதுமான உபகரணங்க்கள் மற்றும் நிதி ஆதாரம்
இவற்றை பி எஸ் என் எல் நிறுவனம்
கொண்டுள்ளது என்ற அமைச்சரின் கருத்து உண்மையா?

மொபைல்  சேவையில் வாடிக்கையாளர் கணக்கில் உள்ள பணத்தில் ஒரு பகுதி அதிகாலை நேரத்தில் அபகரிக்கப்படுகிறதே. இதற்கு யார் பொறுப்பு?

லேண்ட்லைன்  சேவையில் ஹங்கமா சேவை(?)  என்ற பெயரில் நடைபெறும் திருட்டுக்கு யார் பொறுப்பு?

இப்படிப்பட திருட்டுத் தொழிலைச் செய்யும் நிறுவனங்களில் ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்குப் பங்கு உண்டு என்று சொல்லப்படுகிறதே. அது உண்மையானால் அதற்கான நடவடிக்கை என்ன?

தியாகங்கள் பல செய்து வெள்ளையனை வெளியேற்றிய நமது சுதந்திர தேசத்தில் இது போன்ற கொள்ளைகளை நடத்தும் கொள்ளையர்க்களை வெளியேற்றப் போவது யார்? (நமது பிரதமர்  மாவீரன் பகத்சிங்கைப் பற்றி உண்ர்வு பூர்வமாகப் பேசினார்.)
இந்தக் கொள்ளளையை ஒழிக்கப் போகும் பகத்சிங் யார்?

உபகரனங்கள்  இல்லாமை,
லோ கொட்டேசனில் வழங்க்கப்படும் உபகரனங்களின் லட்சணம் குறித்து அமைச்சர் அறிவாரா?

கிராமப்புறங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் பெருத்த் நட்டத்தோடு இயக்க்ப்படும் பல்லாயிரக்கணக்கான தொலைபேசி நிலையாங்கள் குறித்து அமைச்சருக்குத் தெரியாதா?

கிராமப்புறச் சேவைக்கு இனி USO FUND லிருந்து நிதி உதவி கிடையாது என்று சொல்லிவிட்ட பிரதம அமைச்சரின் அலுவலகச் செய்தி அமைச்சருக்குத் தெரியாதா?

இப்படி இன்னும் பல கேள்விகளுண்டு.

இந்நிலையில்  வருமானக் குறைவு உள்ள பகுதிகளில் பணியாற்றுவோர் விருப்ப ஓய்வில் செல்லட்டும் என்ற அமைச்சரின் பேச்சு  அர்த்தமற்ற ஒன்று.

"பணிப்பாதுகாப்பு" என்ற உறுதிமொழியை திரு வாஜ்பாய் அரசிடம் உத்தரவாகப் பெற்றுத் தந்தவர் எங்களின் ஒப்பற்ற தலைவன் குப்தா.

ஊழியர்களின் உரிமைகளோடு விளியாடினால்
விபரீதங்களுக்கு அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும்.

சிறப்பாக்ச் செயல்பட்டோரை மக்கள் மதிப்பதூண்டு.


செயல்படாதவர்களுக்கு மக்கள் கட்டாய ஓய்வு கொடுத்த வரலாறும் உண்டு.

No comments:

Post a Comment