எங்கேயும் எப்போதும்
தாமதம்...
இந்தச் சொல்லின் மிகச் சரியான
இலக்கனம் தான் நமது நிர்வாக செயல்பாடா?
பல ஆண்டுகள் வனவாசத்துக்குத் துரத்தப்பட்ட
போனஸ் இந்த ஆண்டில் திரும்பி வந்தது.
07.10.2016 அன்று
போனசுக்கான
உத்தரவு வெளியானது.
"போனஸை விட்டுக்கொடு
அல்லது தள்ளிப்போடு" என்று
இயக்குனர் (மனிதவளம்) 10.10.2016 அன்று வேண்டுகோள்
விடுக்கிறார்.
நான்கு நாட்கள் கஷ்டப்பட்டு
உழைத்து
14.10.2016 அன்று அந்த வேண்டுகோளின்
படிவம் வெளியிடப்படுகிறது.
போனசை விரைபில் பட்டுவாடா செய்யுமாறு
14.10.2016 அன்று உத்தரவிடப்படுகிறது.
24.10.2016க்குள் விட்டுக் கொடுத்தல்/தள்ளிப்
போடுதல் குறித்த விருப்பம் தருமாறு 21.10.2016 அன்று உத்தரவு வெளியாகிறது.
07.10.2016 அன்று வெளியான
உத்தரவுக்கு 21.10.2016 வரை காகித உத்தராவுகள் மட்டுமே வருகிறது.
காந்தி சிரிக்கும் காகிதம் கைகளில்
வரவில்லை.
"புன்னகையுடன் சேவை செய்து
போட்டியைச் சந்திக்க வேண்டும்"
ஊழியர்களுக்குத் தரும் அறிவுரை இது.
ஆனால் 3000 ரூபாயைக்
கொடுக்கும்
உத்தரவுக்கு 18 நாட்கள்
சிகிச்சையா?
டிஸ்சார்ஜ் தேதியும்
தெரியவில்லை.
எப்போதுதான் வரும்? என்று
சொல்ல முடியாத ஒரு நிலை.
எங்கேயும்
எப்போதும்
தவறுகளும்
தாமதமும்
தொடர்கதை.
என்று தணியும்
இந்த தாமத சோகம்?
எப்போது விடியும்
விரைவான செயலாக்கம்?
No comments:
Post a Comment