நவம்பர் 7
ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு
மன்னராட்சி
மடிந்தது.
மக்களுக்கான
மானுட ஆட்சி மலர்ந்தது.
ஏறத்தாழ 50
லட்சம் ரஷ்ய மக்கள் இரண்டாம் உலகப் போரில் இன்னுயிரை இழந்தனர்.
இரண்டு
லட்சம் மக்களின்
மகத்தான
போராட்டத்தால்
ரஷ்யப்
புரட்சி மலர்ந்தது.
இது பற்றி
பாரதியின் வரிகள்
ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி
ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி!
கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்!
குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றி லெழுந்ததுபார் குடியரசென்று
உலகறியக் கூறி விட்டார்;
அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது
அடிமையில்லை அறிக என்றார்;
இடிபட்ட சுவர்போலே கலிவிழுந்தான்
கிருதயுகம் எழுக மாதோ!
கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்!
குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றி லெழுந்ததுபார் குடியரசென்று
உலகறியக் கூறி விட்டார்;
அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது
அடிமையில்லை அறிக என்றார்;
இடிபட்ட சுவர்போலே கலிவிழுந்தான்
கிருதயுகம் எழுக மாதோ!
நமது அனுபவம்.
ஒரு ஆட்சி முடிந்து மற்றொரு ஆட்சி வருகிறது.
அட்சியாளர்கள் மாறுகிறார்ள்.
ஆனால் கொள்கையில் மாற்றமில்லை.
மக்களின் வாழ்வில் ஏற்றமில்லை.
ஆனால் ரஷ்யப் புரட்சியால்
ஏற்பட்ட ஆட்சி மாற்றம்
மக்கள் விரும்பிய மாற்றமாகும்.
மக்களின் தேவைகளை
நிறைவேற்றிய மாற்றமாகும்.
உழைப்பையும்,
உழைப்பவனையும் மதிக்கும் மாற்றமாகும்.
பெண்களுக்கு உரிமை தந்த மாற்றம்.
விவசாயிகள் நலம் காக்கும் மாற்றம்.
சமவேலைக்குச் சம ஊதியம் வந்தது.
ஆண் பெண் சமத்துவம் உருவானது.
பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு என்பது
உருவானது.
இந்தியாவில் ரஷ்யப் புரட்சியின்
தாக்கம்
தூக்கில் போட அழைத்துச் செல்ல
சிறையதிகாரிகள் வந்தபோது
பகத் சிங் ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்.
அது லெனின் எழுதிய
‘அரசும் புரட்சியும்.’
இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகள்
அல்லாதோரும் தங்கள் குழந்தைக்களுக்கு லெனின் என்றும் ஸ்டாலின் என்றும் பெயர் வைத்தார்கள்.
நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு
விழா
நடக்கும் தருணத்தில்
இந்திய தொழிலாளி வர்க்கம்
தன் கடமையை உணர்ந்து
சவால்களைஎஎதிர்கோண்டு
போராடி வெற்றி பெற
சபதம் ஏற்க வேண்டும்.
No comments:
Post a Comment