தனியார் வங்கியும்
தங்கக் கட்டிகளும்
ஒரு
தனியார் வங்கியில்
தங்கக் கட்டிகள் இருந்தனவாம்.
வங்கிக் கணக்கில் அந்தத்
தங்கக் கட்டிகள் இல்லையாம்.
விசாரிக்கப்பட்டது.
விபரீதம் தெரிந்தது.
500,1000 ரூபாய் நோட்ட்டுக்களை
முறையில்லா முறையில்
மாற்றுவதற்கு
அன்பளிப்பாகப் பெற்ற
தங்கக் கட்டிகளாம் அவை.
கருப்புப் பண காகிதம்
மஞ்சள் நிற கட்டியாக
மாறி விட்டது.
தனியார்மயம்
தள்ளாடும் பொருளாதாரத்தை
தலை நிமிரச் செய்யும்
தாரக மந்திரம் என்றார்கள்.
தனியார்மயம்
தனிப்பட்ட சிலரிடம்
தங்கக் கட்டிகளாய்
தவழ்ந்து கிடக்கிறது.
No comments:
Post a Comment