NFTECHQ

Friday 30 December 2016

போராட்டங்கள் சடங்காகிறதா?

500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என 08.11.2016 அன்று அறிவிக்கப்பட்டது.

மக்கள் அல்லலுற்றனர்.

நேர்மையாக உழைத்து சம்பாதித்த சொந்தப் பணத்தைப் பெற மக்கள்
மாளாத் துயருக்கு ஆளாகினர்.

வங்கிகளில் வரிசையில் நின்ற போதே நூற்றுக்கனக்கான இந்திய
மக்கள் இன்னுயிரை இழந்தனர்.

லடசக் கணக்க்கில் தொழிலாளர்கள்
வேலை இழந்தனர்.

மாதச் சம்பள்ம் ,ஓய்வூதியம் பெறுவோரையும் இப்பிரச்னை விட்டு வைக்கவில்லை.

அவர்களுக்கு நவம்பர் மாதம் பத்தாயிரம் ரூபாய் முன்பனமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

பி.எஸ்.என். எல் ஊழியர்களுக்கு
அதுவும் இல்லை என ஆனது.

08.11.2016 இந்தக் கொடுமைகளுக்கான
அறிவிப்பு வந்தது.

ஆனால் 44 நாட்கள் கழித்து நமது தமிழ் மாநில அமைப்பு 22.11.2016 அன்று
ஒரு ஆர்ப்பாட்ட அறைகூவல் விடுத்தது.

போராட்டங்கள் காலத்தே நடத்தினால்
அதற்கு ஈர்ப்பு இருக்கும்.

இப்படிப்பட்ட காலம் கடந்த இயக்கங்கள் உணர்த்துவது என்ன?

போராட்டங்கள் சட்ங்குகளாகிப் போனதோ என்பதுதான்.

அதுவும் நமது அமைப்பிலா?

இதை  விமர்சனம் என்று எடுத்துக் கொள்வதா? அல்லது ஆதங்கம் என்று எடுத்துக் கொள்வதா?
அவரவர் மனதை பொறுத்தது அது.


இதில் ஏதேனும் ஒன்று மனதில் எழுவது நல்லது.

No comments:

Post a Comment