அம்மா.. அம்மா..
அலையின் சீற்றம் போல்
தமிழகம் முழுவதும்
ஒலிக்கும் குரல்.
ஆணாதிக்க சமுதாயத்தில்
அதுவும் அரசியலில்
பெண்ணாய்
சாதித்த சரித்திரப் பெண்மணி.
நெருக்கடிகள் நெருக்கியபோதும்
நிமிர்ந்து நின்ற வென்ற வீராங்கனை
துணிச்சல் இவரின் தனிக்குணம்
முடிவெடுப்பதில் உறுதி
எடுத்த முடிவில் உறுதி
முடிவு தவறென்றால் திருத்திக்
கொள்ளும் குணம்
உடைந்த இயகத்தை
ஒன்றுபடுத்திக் காட்ட முடியும்
என்ற வரலாற்றுக்குச் சொந்தக்காரர்
மாண்புமிகு ஜெயலலிதா
அவர்களின் மறைவுக்கு
நமது அஞ்சலி.
விடை பெறுகிறார்
No comments:
Post a Comment