NFTECHQ

Thursday 5 January 2017

துவக்கமே துன்பமா?

2017 துவ்க்கத்தின் முதல் நாளிலிருந்தே தினம்தோறும் விவ்சாயிகளின் மரணம் குறித்த செய்திகள்.

ஒவ்வொரு நாளும் 5,6,7,8 என விவசாயிகளின் மரணச் செய்தி வருகிறது.
மாநிலம் முழுமையும் இந்த் நிலை. இருப்பினும் திருவாரூர் நாகை மாவட்டங்களில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகம்.

நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளின் இதயம்  வடிய பயிர் கண்டு நின்று போனது. வாடிய பயிர் கண்டு வாழ்வின் இருள் பற்றிய அச்சத்தின் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டோரும் உண்டு.

"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய" வள்ளலார் வாழ்ந்த மண் இது.

"சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்" என்ற குறள் தந்த வள்ளுவனைத் தந்த மண் இது.

இந்த் மண்ணிலா இப்படிப்பட்ட சோகங்கள்.

இந்நிலை நீடித்தால்
இயற்கையும் வஞ்சித்தால்
பெரும்பான்மை மக்கள் வணங்கும் கடவுள்களுக்கே கூட பால், பழம், வெற்றிலை, பொங்கல் மற்றும் பிர்சாதங்கள்  கிடைகாமல் போகலாம்.

அந்நிலையில் கூட ஆள்வோர்
கடவுள்களுக்குத் தேவையான பொருள்களுக்காக
அந்நிய முதலீட்டையும், அந்நிய நாட்டிலிருந்து இறக்குமதி செய்வது குறித்து மட்டுமே சிந்திப்பார்கள்.

ஒன்றுபட்டிருந்த விவச்சயிகள் அமைப்பும் பல கூறுகளாகப்  பிரிந்து விட்டன. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு அமைப்பு என்ற நிலை உருவாக்கப்பட்டு விட்டது.

ஆள்வோர்களிடத்தில் அக்கறையில்லை.

எதிர்க்கட்சிகளும்  சடங்க்குக்காக போராட்டங்களை நடத்துகிறன்றன.

இவற்றையெல்லம் கண்டு இயற்கை கருணை காட்டினால் மட்டுமே விடியல் வருமோ? 

No comments:

Post a Comment