பொற்காலம்??
"நவம்பர் 8 முதல் கடந்த 50 நாட்கள் வங்கிகளுக்குப்
பொற்காலம். சுதந்திரத்திற்குப் பிறகு இது வரை இவ்வளவு பணம் வங்கிகளுக்கு வந்ததில்லை.
இது வங்கிகளுக்குப் பொற்காலம்" என்கிறார் பிரதமர்.
பொற்காலம் என்பதன் பொருள் பற்றி ஒரு ஆய்வு தேவைப்படுகிறது.
08.11.2016 அன்று வங்கிகளில் இருப்பில் இருந்த பணமும்,
புழக்கத்தில் இருந்து வங்கிகளுக்கு வந்த 500, 1000 ரூபாய் தாள்களையும் கணக்கில்
சேர்த்தால் ரிசர்வ் வங்கியின் கணக்கு சரியாகப் பொருந்தி விட்டது.
கறுப்புப் பணமும் காணவில்லை.
கள்ளப்பணமும் காணவில்லை.
எல்லைப்பகுதியில் தீவிரவாதத்தால் இறந்த ஒரு 16 வயது இந்திய தேசத்தின் இளையமகனின் இறுதி
ஊர்வலத்தின் (02.01.2017ல்) போது கூட துப்பாக்கிச் சத்தம் கேட்டுக் கொண்டே
இருந்ததாம்.
லஞ்சம், ஊழல் காணாமல் போனதா?
எஞ்சி நின்றது மக்களின் துயரமும், துன்ப்மும்
நூற்றுக்கணக்கான உயிர் இழப்புக்களும் மட்டுமே.
இவைதான் பொற்காலத்தின் அடையாளங்கள் என்றால் இது பொற்காலமே.
No comments:
Post a Comment