NFTECHQ

Friday 31 March 2017

மாண்பு காப்பாற்றப்படுமா?

BSNL அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்கள் 
DPE மற்றும் DOT இலாக்கா செயலர்களுக்கு கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 29/03/2017 அன்று கடிதம் எழுதியுள்ளன.

·                     3வது ஊதியக்குழுவில் BSNL நிறுவனத்திற்கு  செலவினம் மற்றும் இலாபம் என்ற நிபந்தனைகளில் இருந்து விலக்கு...
·                     அனைவருக்கும் 15 சத ஊதிய உயர்வு
·                     5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு
·                     ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியத் திருத்தம்
·                     வாங்கும் சம்பளத்தில் ஓய்வூதியப் பங்களிப்பு
·                     ஒழுங்குபடுத்தப்பட்ட  ஆண்டு ஊதிய உயர்வு

இது காரைக்குடி மாவட்டச் சங்க இணைய தளத்தின் செய்தி.

இதன் மூலமான கடிதம் வேலூர் மாவட்ட இணையதளத்தில் ஆங்கிலத்தில் உள்ளது.  தலைவர்கள் கையொப்பமிட்ட கடிதமும் அந்த இணையதளத்தில் கண்டோம்.

பார்த்து, படித்தவுடன் கோபம் கொப்பளித்தது.
அனைத்து இயக்கங்களும் இணைந்து கோரிக்கை வைப்பது தவறல்ல. ஆனாலும் ....

நியாயமான உணர்வுகளின் அடிப்படையில் மத்திய சங்கத்துக்கு நமது கேள்விகள்.
1. நமது மத்திய் செயற்குழு அமைத்த ஊதிய மாற்றப் பேச்சு வார்த்தைக் குழு கூடியதா?
கூடி விவாத்திதா?
ஏதேனும் முடிவுகள் எடுத்ததா?
2. மத்திய செயற்குழு முடிவின் படி நமது கூட்டணிச் சங்கத் தலைவர்களோடு ஏதேனும் கலந்தாலோசனை நடைபெற்றதா?
3.DPE வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்துவதில் தவறில்லை. ஆனால் அதைத்தாண்டி பல்வேறு அம்சங்கள் கடிதத்தில் உள்ளன.
நமது இயக்கத்துக்குள், நமது குழு விவாதிக்காமல், நமது கூட்டணிச் சங்கக்ங்க்ளோடு விவாதிக்காமல் எப்படி வரையறுக்கப்பட்டது?

அடிப்படைச் சம்பளத்துடன் பஞ்சப்படி இணைப்பு மற்றும் 2000 ரூபாய் இடைக்கால நிவாரணம் எனற உழியர்களைக் கவ்விப்பிடிக்கும் சென்னைத் தொலைபேசி மாநிலச் சங்கத்தின் தீர்மானம் மத்திய செயற்குழுவில் எடுத்துரைக்கப்பட்ட பின்னும் அது சபையேறவில்லை.

மத்திய சங்கத்துக்கு வழிகாட்டும் மாண்பு பெற்ற தமிழ் மாநிலச் சங்கமும், ஊதிய மாற்றக்குழுவில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநிலச் செயலரும்
மத்திய சங்கத்தின் தவறுகளைச்
சுட்டிக்காட்டி சரி செய்வார்கள என நம்புகிறோம்.  



No comments:

Post a Comment