NFTECHQ

Saturday 8 July 2017

அஞ்சலி

தோழர் ஞானையா


NFPTE சம்மேளனத்தின் பொதுச் செயலராகப் பணியாற்றி பல பிரச்னைகளுக்குத் தீர்வு கண்ட தோழர்.

NFPTE சம்மேளனத்தில் பிளவு ஏற்பட்ட போது சிக்கல்களுக்குத் தீர்வு கண்டு மீண்டும் ஒரு மனதாக பொதுச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆழந்த அறிவாற்றலும்
அபாரமான நினைவாற்றலும் நிறைந்தவர்

நாற்பதுக்கும் மேற்பட்ட பயனுள்ள புத்தகங்களை எழுதியுள்ளார்.

வயதின் காரணமாக இயற்கையான உடல் சோர்வு இருந்தபோதும்சிந்தனையில் இளைஞனாக விளங்கினார்

சிறந்த சமூகச் சிந்தனையாளர்

மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்டு தொழிலாளர் கலவி மையம் என்ற அமைப்பைத் துவங்கி ஏராளமான தோழர்களை அந்த இயக்கத்தில் இணைய வைத்தார்.

பல ஆண்டுகள் அந்த அமைப்பின் செயலாலராகப் பணியாற்றி தோழர் மதியிடம் அப்பொறுப்பைக் கொடுத்தார்.

97 ஆண்டுகள் வாழ்ந்து 08.07.2017 அன்று தனது சுவாசத்தை நிறுத்திக் கொண்டார்.

அவரது மறைவுக்கு நமது கொடி தாழ்ந்த அஞ்சலி.

தொழிலாளிகளுக்காக தன்னலம் துறந்து போராட வேண்டும் என்பதே அவர்   வாழ்வு தரும் பாடம். அதுவே இன்று பயில வேண்டிய பாடம்.

No comments:

Post a Comment