விடுதலைத் திருநாள்
வாழ்த்துக்கள்
சிறைக்குள் அடைக்கப்படனர்.
சிறையின் அறைக்குள்ளும்
சிறையின் வெளியிலும்
சித்ரவதைகளை அனுபவித்தனர்.
கொட்டடிச் சிறைக்குள்
கொடுமைகளின் கும்மாளம்.
எண்ணற்ற உயிர்ப்பலிகள்
ஏராளமான தியாகங்கள்
சுதந்திரம் வந்தது.
சுதந்திரம் பெற
சிறைக்குச் சென்று
சித்ரவதை கண்டு
இன்றும் வாழும் சிலருக்கும்
கோட்டை கொத்தளத்தில்
கொடியேற்றும்
வாய்ப்பற்ற நிலை.
ஆனால் ...
சிறைக்குள் இருக்க வேண்டியவர்களுக்கு
கோட்டை கொத்தளத்தில்
கொடியேற்றும் வாய்ப்பு.
கல்வி கற்க வந்த
பாரத மாதாவின்
பச்சிளம் குழந்தைகள்
கல்விக் கூடத்திலேயே
வெந்து செத்தார்கள்.
சாகடித்தவர்களுக்கு
சாதகமான தீர்ப்புக் காற்று.
சுதந்திரப் பிரதேசத்தில்
சுவாசம் தரும் காற்றின்றி
சுவாசத்தை இழக்கும்
பாரத மாதாவின்
பச்சிளம் குழந்தைகள்.
இப்படி பல சிந்தனைகள் நம
இதயத்தைச் சிதைத்தாலும்
நம்பிக்கைக் இழக்காமல்
நடைபோட வேண்டிய கட்டாயச் சூழல்.
எல்லாம் மாறும்
ஏற்றம் சேரும்.
உணர்வுகளை உள்ளுக்குள் வைத்து
அறிவைப் பயன்படுத்தி
நாட்டுக்கு ...
நாட்டு மக்களுக்கு...
நம்மால் ஆனதைச் செய்வோம்.
வேளிவியால் வந்த விடுதலையை
விடுதலையால் பெற்ற
உரிமைகள் காப்போம்.
அனைவருக்கும்
விடுதலயத் திருநாள்
வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment