NFTECHQ

Saturday 30 September 2017

வாழ்த்துகிறோம்
இன்று இலாகா பணி நிறைவு பெறும்,
தமிழகத்தில் NFTE இயக்கத்தின் வளர்ச்சிக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டு வாழ்ந்த
தோழர்கள்
பாலகுரு, திருச்சி
சென்னகேசவன், வேலூர்

ஆகிடோர் நலமுடனும் மகிழ்வுடனும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.
தோழர் சுப்ரமனியன்

"சத்தி சுப்பு" என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட அன்பிற்கும், பாசத்திற்கும் உரிய சத்தியமங்கலம் கிளைச் செயலர் தோழர் சுரமணியன் இன்று இலாகா பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

மிகச்சிறந்த
ஒரு முன்மாதிரியான
கிளைச் செயலராக
இயக்கத்தின் மீது அளவற்ற பற்றுடனும் விசுவாசத்துடனும்  செயல்பட்டவர் அருமைத் தோழர் சுப்ரமனியன்

இவரது பணிநிறைவுக்காலம்
நலமுடனும்,
மகிழ்வுடனும்
பயனுடனும்

அமைய வாழ்த்துகிறோம்.
வாழிய பல்லாண்டு

இன்று பணி ஓய்வு பெறும்

தோழர் A.சுப்ரமணியன் OS
தோழியர் S.உஷா OS
தோழர் G.ராஜேந்திரன் JE
தோழர் R.குணசெகரன் TT

ஆகியோர் நலமுடனும்
 மகிழ்வுசனும்  

பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.
5.3

01.10.2017 முதல்
விலைவாசிப்படி

5.3 சதம் உய்ரும்.

Wednesday 27 September 2017

வெளிச்சத்துக்கு வரும் உண்மைகள்

"பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது."
“பொருளாதாரத்திற்கு அருண் ஜேட்லி செய்ததை நான் இப்போது கூட வாயைத் திறக்காமல் இருந்தால் நான் எனது தேசியக் கடமையிலிருந்து தவறுபவனாகி விடுவேன், நான் கூறப்போவது பாஜகவில் உள்ளவர்களுக்கே நன்கு தெரிந்ததுதான், ஆனால் இவர்கள் பயத்தின் காரணமாக வெளிப்படையாகப் பேசுவதில்லை” என்று ஆரம்பித்து நடப்பு பொருளாதாரக் கொள்கைகளின் முகமூடியைக் கிழித்து எறிகிறார்.
இன்று இந்தியப் பொருளாதாரத்தின் சித்திரம் என்ன?  என்று பலரும் தங்கள் கருத்தைக் கூறிவருகையில், அத்தகைய எதிர்க்கருத்துகளை ஊர்ஜிதம் செய்யும் விதமாக உற்பத்தித் துறை, கட்டுமானம், தொலைத் தொடர்பு உள்ளிட்ட சேவைத்துறைகள், ஏற்றுமதி அனைத்தையும் விட விவசாயத்தின் நிலை ஆகியவை கடும் சரிவுக்குள்ளாகி எண்ணற்ற லட்சக்கணககானவர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர்"

"பொருளாதார வளர்ச்சி விகிதம் கணக்கிடும் முறை 2015-ம் ஆண்டில் நடப்பு அரசினால் மாற்றியமைக்கப்பட்டது என்றும் இந்தக் கணக்கீட்டின் படி கடந்த காலாண்டில் வளர்ச்சி விகிதம் 5.7% என்று நிர்ணயிக்கப்பட்டது"
2015-க்கு முன்பாக நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கணக்கிடும் முறைப்படி பார்த்தால் கடந்த காலாண்டில் வளர்ச்சி விகிதம் 3.7% தான் என்று ஒரே போடாகப் போட்டார்.
புதிய ஜிஎஸ்டியின் கீழ் வரி உள்ளீட்டு வரவு (input tax credit) தற்போது ரூ.95,000 கோடி என்றால் அந்தந்த தொழிற்துறையினர் கட்டிய கூடுதல்வரியை அரசு அவர்களுக்குத் திரும்பச் செலுத்த வேண்டிய தொகை மிகப்பெரிதான ரூ.65,000 கோடியாக உள்ளது"  ஜிஎஸ்டி அமலாக்கத்தால் ஆய பயன் என்ன என்று சூசகமாகக் கேள்வி எழுப்புகிறார்.
மேலும்,  2019 மட்டுமல்ல 2023 வரை பாஜகவை அசைக்க முடியாது என்று அமித் ஷா உள்ளிட்டவர்கள் கூறி வரும் நிலையில்  "அடுத்த லோக்சபா தேர்தலுக்குள் பொருளாதாரம் மீள்வது சாத்தியமல்ல" என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
ஏழ்மையை மிக அருகில் இருந்து தான் பார்த்ததாகவும் அதனால் ஏழ்மை பற்றி தனக்கு அதிகம் புரியும் என்று பிரதமர் மோடி வானொலி உரை  உள்ளிட்ட உரைகளில் கூறிவருவதைக் கண்டு பலரும் நெகிழ்ந்துள்ள நிலையில்
"அனைத்து இந்திய மக்களும் ஏழ்மையை அருகில் இருந்து நெருக்கமாகப் பார்ப்பதற்காக ஓவர்-டைம் பணியாற்றி வருகிறார்” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

இப்படியெல்லம் சொல்வது வேறு யாருமல்ல.
முன்னாள் நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா.

(நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் 27.09.2017)

Monday 25 September 2017

NFTE தூத்துக்குடி
மாவட்ட மாநாடு
25.09.2017ல்
NFTE தூத்துக்குடி மாவட்ட  மாநாடு
சிறப்புடனும்
எழுச்சியுடனும்
நடைபெற்றது.

ஒற்றுமையாய் நடைபெற்ற சிறப்பான மாநாடு.
கீழ்க்கண்டோர் நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர் தோழர் தங்கவேலு
செயலர்  தோழர் பாலக்கண்ணன்
பொருளர் ஜான்சன்சாமுவேல்
ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யப் பட்டனர்.


செயல்பாடு சிறக்க வாழ்த்துகிறோம்.
NFTCL
கடலூர் மாவட்ட மாநாடு
24.9.2017ல்
விழுப்புரத்தில்
NFTCL கடலூர் மாவட்ட  மாநாடு
எழுச்சியுடனும் சிறப்புடனும் நடைபெற்றது.


தோழர்கள் மதி, ஜெயராமன், பாபு, அசோகராஜன், மாரி, ஆனந்தன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உரையாற்றி சிறப்பித்தனர்.

கீழ்க்கண்டோர் நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர் தோழர் அரிகிருஷ்ணன்
செயலர்  தோழர் மஞ்சினி
பொருளர் மணிகண்டன்
ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யப் பட்டனர்.

செயல்பாடு சிறக்க வாழ்த்துகிறோம்.
வெல்லட்டும்
சிறக்கட்டும்
இன்று
25.09.2017 நடைபெறும்
NFTE தூத்துக்குடி மாவட்ட மாநாடு
சிறப்பாகவும்,
வெற்றிகரமாகவும்
 நடைபெற

வாழ்த்துக்கள்.

Saturday 23 September 2017

நேற்று கேட்ட செய்தி

2040ஆம் ஆண்டில் நிலவில் 100 பேர் வ்சித்து வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய சர்வதேச அறிவியலாளர்கள் அமைப்பு திட்டமிட்டுள்ளதாம்.
2030ஆம் ஆண்டு 10 அறிவியலாளர்கள் நிலவுக்குச் செல்ல உள்ளனராம். பவீடு கட்டுதல், விவசாயம் செய்தல் மற்றும் பல பணிகளை அந்த 10 பேர் செய்வார்களாம். 10 ஆண்டுக்களுக்குள் பணி முடித்து 2040ஆம் ஆண்டு முதல் 100 பேர் நிலவில் வாழ்க்கை நடத்துவார்களாம்.


மத்திய சங்க செய்தி

BSNL அமைப்பின் நிர்வாகக் குழுக் கூட்டம்
(Management Committee) நடைபெற்றது.

01.01.2017 முதல் BSNL ஊழியர்களுக்கு 15 சத ஊதிய உயர்வு வழங்குவதற்கான முடிவை அக்குழு எடுத்துள்ளது.

தற்போது பெறும் அலவண்ஸ்களில் கூடுதல் இருக்காது.

இந்த முடிவை மேலும் ஒரு  குழு ஆ ராயும்.

பின்னர் BSNL வாரியத்தின் ஒப்புதலுக்கு
அனுப்பாப்படும்.

அதன் பின் DOT ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
************************************************************
நமது கருத்து

மேலே  கூறப்பட்ட  அத்தனை நிகழ்வுகளுக்குப் பின்னரே இறுதியான முடிவுகள் வரும்.

இதுவரை BSNLEU  வின் குரல் ஒலித்த வித்த வேறு.
தற்போது ஒரு நாள் வேலைநிறுத்தத்தின் விளைவே இந்த முடிவு என்கிறது அந்தக் குரல்.


இப்படியும் சில பச்சோந்திகள்...
வாழ்த்துக்கள்

நாளை 24.09.2017
நடைபெறவுள்ள
கடலூர் மாவட்ட
NFTCL மாநாடு

சிறக்க வாழ்த்துகிறோம்.

Thursday 21 September 2017

 

ஜியோவுக்கு சாதகமான டிராயின் முடிவு..

ஜியோ  நெட்வொர்க் சேவை அறிமுகம் ஆனதில் இருந்தே
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இடையில் இண்டர்கனக்ட் கட்டணங்களை வசூலிப்பதில் பிரச்சனை ஏற்பட்டது.
ஜியோ மற்றும் டொக்கோமோ உள்ளிட்ட நிறுவனங்கள் இண்டர்கனக்ட் கட்டணங்களை நாங்கள் அளிக்க மாட்டோம், அதே போன்று எங்களது போட்டி நிறுவனங்களும் அதனை அளிக்கத் தேவையில்லை என்று கூறிவந்தன.

தற்போது அதற்கான கட்டணத்தைக் குறைத்து டிராய் அறிவித்து உள்ளது.

முன்பு ஒரு அழைப்பிற்கு 14 பைசாவாக இருந்த இண்டர்கனக்ட் கட்டணம் 6 பைசாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய இண்டர்கனக்ட் கட்டண முறை வருகின்ற அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்று டிராய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜியோ    

போட்டி நிறுவனங்களிடம் இண்டர்கனக்ட் கட்டணங்களை அளிக்க மாட்டோம் என்று கூறி வந்த ஜியோ நிறுவனம் இது வாடிக்கையாளர்களுக்கு அதிகப் பயன் அளிக்கும் என்பதால் முழுமையாக நீக்க வேண்டும் என்று டிராய் கோரிக்கை வைத்து இருந்தது.

டெர்மினேஷன் கட்டணங்கள் 2020 ஜனவரி 1 முதல் உள்நாட்டு அழைப்புகளுக்கு முழுமையாக நீக்கப்படும் என்றும் டிராய் தெரிவித்தது.
பாபு தாரபாதா உரை
1921 செப்டம்பர் 21. லாகூர். தபால் ஊழியர் சங்க அகில இந்திய மாநாடு. அதன் ஒப்பற்ற தலைவர்  பாபு தாரபாதா
தலைமை உரையாற்றினார். அவரின் அந்த பேச்சக்காக குற்றம் சாட்டப்பட்டு வேலை நீக்கம் செய்யப்பட்டார். அப்படி என்ன பேசிரிட்டார்?

" தொழிலாளர்கள் பிச்சைகாரர்கள் அல்ல. அவர்களே இந்த பூமியின் உயிர்ச் சத்து. உழைப்பின் முத்திரை விழுந்தாலன்றி எந்தப் பொருளும் செல்வமாவதில்லை. செல்வம் அனைத்தும் படைப்பவர்கள் அவர்களே. தொழிலாளர்கள் இல்லை என்றால் செல்வத்தை உற்பத்தி செய்யும் உழைப்பு எங்கிருந்து வரும்?
தொழிலாளி வேலை செய்வதை நிறுத்தினால் என்ன ஆகும்
ஒரு 
தானிய மணி கூட விளையாது. ஒரு முழத் துணி நெய்யப்படாது. ஒரு செங்கல் இடம் பெயராது."
அநீதி கண்டு ஆர்பரித்து போராடாது அநீதி களைய முடியாது என்பத தாரக மந்திரமானது.
தபால் தந்தி ஊழியர் இயக்கம் வீரமிக்க இயக்கமாக இருந்ததற்கு அடித்தளம் அமைத்த தலைவருக்கு தலை தாழ்த்தி அஞ்சலி செலுத்துவோம்.


நன்றி தோழர் மாலி

Wednesday 20 September 2017

அஞ்சலி
தாராபுரத்தில் டெலிகாம் டெக்னிசியனாக பணியாற்றி வந்த
தோழர் V.ராஜ்
உடல்நலகுறைவால் இன்று காலமானார்.

அவரது  மறைவுக்கு நமது மாவட்டச் சங்கம் சார்பாக இதயபூர்வ அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறோம்.

Tuesday 19 September 2017

செப்டம்பர் 19

ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்கள் பிற்க்கும் நாட்களில் பொதுத்துறை ஊழியர்களும் ஜனவரி, ஜூலை மாதங்களின்  முதல் நாளில் மத்திய, மாநில அரசு ஊழியர்களும் விலைவாசிப்படி உயர்வு எவ்வளவு என்பதை அறிந்து கொள்கின்றனர்.

விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு விலைவாசிப்படி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்காக ஒரு நாள் வேலைநிறுத்தம் 1960 செப்டம்பர் 19ஆம் நாள் நடைபெற்றது. வேலைநீக்கம், தற்காலிக வேலைநீக்கம், சிறைவாசம் என பல்வேறு அடக்குமுறைகளை அன்று எதிர்கொண்டனர் நமது தலைவர்களும் தோழர்களும்.

அன்று அவர்கள் செய்த தியாக வேள்வியால் இன்று விலைவாசிப்படி கிடைக்கிறது.
அநத்த் தியாகத்தையும் ,தியாகிகளையும் நினைவில் கொள்வோம்.
இரங்கல்
NFTE பேரியக்கத்தின்  ஈரோடு மாவட்டப் பொருளாளர் அன்புத் தோழர் மெளனகுருசாமி அவர்களின் அன்னை 18.09.2017 அன்று காலாமானார்.

அன்னையை இழந்திருக்கும் நமது தோழருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Saturday 16 September 2017

என்னமோ நடக்குது
மர்மமாய் இருக்குது

சேவை மையங்களை தனியாருக்கு விடும் முடிவு குறித்து BSNLEU  சங்கத்திற்கும் நிர்வாகத்திற்கும் இடையே ஒரு உடன்பாடு வந்து விட்டது. இது BSNLEU இணையதளம்  தரும் செய்தி.

சோதனை அடிப்படையில் வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு மண்டலங்களில் ஒவ்வொன்றிலும் மூன்று சேவை மையங்கள்  தனியாருக்கு விடப்படுமாம்.--இது உடன்பாடாம்.

சேவை மையங்க்களின் எண்ணிக்கைமற்றும் அவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் குறித்து நிர்வாகம் இனிமேல்தான்தகவல் திரட்டுமாம். அப்படியானால் ஆள் பற்றாக்குறை என்று நிர்வாகம் எப்படி முடிவுக்கு வந்தது?

என்னமோ நடக்குது
மர்மமாய் இருக்குது


Friday 15 September 2017

சென்னைத் தொலைபேசி

14.09.2017 அன்று சென்னைத் தொலைபேசி மாநிலச் செயலர் தோழர் மதி தலைமையில் 500க்கும் மேற்பட்ட  தோழர்கள் பங்கேற்ற ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் அண்ணா சாலை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

வாடிக்கையாளர் சேவை மையங்களைத் தனியாருக்குத் தருதல், தனி டவர் கம்பெனி அமைத்தல் போன்ற முடிவுகளை எதிர்த்தும் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம்.

அரசியல் தலைவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள்  பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

தனி டவர் கம்பெனி அமைக்கும் முடிவை எதிர்த்து ஆர்ப்பாட்ட அறைகூவல். ஆனால் வாடிக்கையாளர் சேவை மையங்க்களைத் தனியாருக்கு விடும் திட்டம் குறித்து
ஏண் இந்த மெளனம்?

ஏன் இந்த மயான அமைதி? 
சேவை மையங்களைச் சூழ்ந்துள்ள கருமேகங்கள்

வாடிக்கையாளர் சேவை மையங்களைத் தனியார் நிறுவனங்கள் கையாளும் என்ற முடிவு அபாயகரமானது.

ஒரு மனிதனின் இதயத்துக்குள் வைரஸ் கிருமிகளைப் பாய்ச்சுவது போன்றது இந்த முடிவு.

இந்த முடிவு பல மோசமான விளைவுகளை உருவாக்கும்.

தற்போது உள்ள வாடிக்கையாளர்களைத் தக்க வைத்தல், புதிய வாடிக்கையாளர்களை இணைத்தல், மற்ற நிறுவனங்களிலிருந்து  நமது நிறுவனத்துக்கு வர விரும்புவோரை நம் வசப்படுத்துதல்
போன்ற பணிகளுக்கு    நெருக்கடிகள் உருவாகும். தடைகளும் தாண்டவமாடும்.

எதிர்பாராத பல சிக்கல்களும் உருவாகும்.

இது உடனடியாகக்      கவனிக்கப்பட்டு சேவைமையங்களை நமது வசமே தக்கவைத்துக் கொள்ள வழிவகை கான் வேண்டும்.

காலம் கடந்துவிட்டாலும் இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே எஞ்ச்சியுள்ளன.
கருததரங்குகள் நடத்தும் காலமல்ல இது. சூழ்நிலையின் கடுமையைக் கருத்தில் கொண்டு காலத்தே காரியமாற்ற வேண்டியது அவசியம்.  

"நல்ல பொழுதையெல்லாம்
தூங்கிக் கழிப்பவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன்
தானும் கெட்டார்"-பட்டுக்கோட்டை

2017 ஜூன் மாதமே இதற்கான டெண்டர் விடப்பட்டும் அதைப்பற்றி அறியாமல் இருந்தது விழிப்புணர்வற்ற தன்மையாகும்.

"விழித்துக் கொண்டோர் மட்டுமே பிழைக்க முடியும்.


விழித்துக் கொள்ள்வார்களா?

Monday 4 September 2017


வாழிய பல்லாண்டு
31.08.2017 அன்று இலாகா பணி ஓய்வு பெற்ற
தோழியர் S.V.வான்மதி OS
தோழர் C.ராமன்குட்டி OS
தோழர் M.குருசாமி OS
தோழர் M.ராஜேஸ்வரன் TT
மற்றும் தோழியர் வசந்தமல்லிகா சுரேஷ் (விருப்ப ஓய்வு)

ஆகியோர்
நலமுடனும்
மகிழ்வுடனும்

பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.