NFTECHQ

Friday 15 September 2017

சேவை மையங்களைச் சூழ்ந்துள்ள கருமேகங்கள்

வாடிக்கையாளர் சேவை மையங்களைத் தனியார் நிறுவனங்கள் கையாளும் என்ற முடிவு அபாயகரமானது.

ஒரு மனிதனின் இதயத்துக்குள் வைரஸ் கிருமிகளைப் பாய்ச்சுவது போன்றது இந்த முடிவு.

இந்த முடிவு பல மோசமான விளைவுகளை உருவாக்கும்.

தற்போது உள்ள வாடிக்கையாளர்களைத் தக்க வைத்தல், புதிய வாடிக்கையாளர்களை இணைத்தல், மற்ற நிறுவனங்களிலிருந்து  நமது நிறுவனத்துக்கு வர விரும்புவோரை நம் வசப்படுத்துதல்
போன்ற பணிகளுக்கு    நெருக்கடிகள் உருவாகும். தடைகளும் தாண்டவமாடும்.

எதிர்பாராத பல சிக்கல்களும் உருவாகும்.

இது உடனடியாகக்      கவனிக்கப்பட்டு சேவைமையங்களை நமது வசமே தக்கவைத்துக் கொள்ள வழிவகை கான் வேண்டும்.

காலம் கடந்துவிட்டாலும் இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே எஞ்ச்சியுள்ளன.
கருததரங்குகள் நடத்தும் காலமல்ல இது. சூழ்நிலையின் கடுமையைக் கருத்தில் கொண்டு காலத்தே காரியமாற்ற வேண்டியது அவசியம்.  

"நல்ல பொழுதையெல்லாம்
தூங்கிக் கழிப்பவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன்
தானும் கெட்டார்"-பட்டுக்கோட்டை

2017 ஜூன் மாதமே இதற்கான டெண்டர் விடப்பட்டும் அதைப்பற்றி அறியாமல் இருந்தது விழிப்புணர்வற்ற தன்மையாகும்.

"விழித்துக் கொண்டோர் மட்டுமே பிழைக்க முடியும்.


விழித்துக் கொள்ள்வார்களா?

No comments:

Post a Comment