NFTECHQ

Tuesday 31 October 2017

தொடர்கிறது...
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு
நிறுவன (ONGC) ஊழியர்களுக்கு
01.01.2017 முதல்
15 சத உயர்வுடன் கூடிய
ஊதிய மாற்றத்துக்கான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.  
********************************************************************
**********************************************************************
ஹிந்துஸ்தான் காப்பர் லிமிட்டட் நிறுவன
ஊழியர்களுக்கு
01.01.2017 முதல்
15 சத உயர்வுடன் கூடிய
ஊதிய மாற்றத்துக்கான

உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. 
AITUC 98
ஏஐடியுசி அமைப்பின்
98வது ஆண்டு உதயநாள் இன்று.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக,
இந்தியாவில் தொழிற்சங்க சட்டமே
இல்லாத காலத்தில்,
துணிவுடன் உதித்தது ஏஐடியுசி.

1920 ம் ஆண்டு,
லாலா லஜபதிராய் தலைமையில்
தோன்றிய இச்சங்கத்தின் வயது - 98.

அக்டோபர் - 31ம் தேதியான இன்று, இந்திய தொழிலாளர் வர்க்கம் தலை நிமிர்ந்து.
1920, அக்டோபர் 31ம் தேதி, இயற்றிய முதல் தீர்மானம், சம்பளம், போனஸ், பஞ்சப்படி கேட்டு அல்ல.

இந்திய நாட்டை அடிமைப்படுத்திய வெள்ளை அரசுக்கு எதிராக பிரிட்டிஷ் அரசு, முற்றிலும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்பது தான்.

இன்று 2017   அக் டோபர்  31,
கொள்கை அற்ற கொள்ளை அரசே
வெளியேறு என உழைக்கும் மக்கள்
ஒரணியில், சாதி, மத, அரசியல்
வேறுபாடுகளை களைந்து
திரள சபதமேற்போம்

இந்நாளில் ...

உழைப்பவர் ஒற்றுமை உறுதியாகட்டும்.

AITUC ஜிந்தாபாத்
வாழிய பல்லாண்டு

இன்று பணிநிறைவு பெறும்
தோழியர் A.L. அம்சராணி OS அவர்கள்
நலமுடனும்
மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ

மாவட்டச் சங்கம் சார்பாக வாழ்த்துகிறோம்.

Monday 23 October 2017

நான்மாடக் கூடலில்
நியாயத்திற்கான போராட்டம்.
அநீதி கண்டு வெகுண்டெழுந்து
ஆர்ப்பரித்து போராடும்
மதுரை மாவட்டத் தோழர்களின்
போராட்டம் வெல்லும்.

வாழ்த்துக்கள். 

Tuesday 17 October 2017

அனைவருக்கும்
தீபஒளித்திருநாள்
வாழ்த்துக்கள்

ஆதார் அட்டை இல்லாததால் உயிரிழந்த 11 வயது சிறுமி: அவரைக் கொன்றது பட்டினி மட்டுமா?

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காததால், அரிசி கிடைக்காமல், ஜார்க்கண்டைச் சேர்ந்த 11 வயது சிறுமி பட்டினியால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அவ்வாறு இணைக்காத ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் ரேஷன் பொருட்களை மட்டுமே நம்பி தங்கள் ஜீவனத்தை நடத்தி வந்த ஏழைக் குடும்பங்கள் பரிதவிப்புக்கு உள்ளாகின.
ஜார்க்கண்ட் மாநிலம் கரிமதி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமாரி என்ற சிறுமி கடந்த செப்டம்பர் 28ம் தேதி உயிரிழந்தார். சிறுமி உயிரிழந்து பல நாட்கள் ஆன நிலையில், அவரது மரணத்துக்கான காரணம் தெரிய வந்துள்ளத.
அவர்கள் வீட்டு ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைக்காததால், அது ரத்து செய்யப்பட்டு, அரிசி முதலியவை கிடைக்காமல், பட்டினியால் சிறுமி மரணம் அடைந்தார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் இந்த தகவல் வெளியுலகுக்குத் தெரிய வந்துள்ளது. சந்தோஷியின் தாய் உட்பட 10 பேர் கொண்ட இந்த குடும்பத்துக்கு கடந்த 6 மாதங்களாக ரேஷனில் பொருட்கள் வழங்கப்படவில்லை. இதனால், இந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல நாட்கள் பட்டினியாகவே தங்கள் நாட்களை கழித்து வந்துள்ளனர்.
2013ம் ஆண்டு முதல், ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தும், அந்த உத்தரவை மீறும் வகையில் அரசுகள் நடந்து கொள்வதையே இந்த சம்பவம் உறுதி செய்துள்ளது. ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது, இருப்பவர்கள் இணைத்துக் கொள்ளலாம் என்றே உச்ச நீதிமன்றம் கூறி வந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு எந்த அரசு பதிலளிக்கப் போகிறது. பொறுப்பேற்றுக் கொள்ளப்போகிறது.
ஆதார் இணைப்பினால் பல நன்மைகள் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் கிடைத்திருப்பதாக மத்திய அரசு மார்தட்டிக் கொண்டாலும், அது நடக்காமல் போயிருந்தாலும் யாருக்கும் ஒன்றும் ஆகியிருக்காதோ? ஆனால் கட்டாயம் என்ற ஒற்றை வார்த்தையால், இப்படி ஒரு உயிர்தானா? இல்லை வெளிச்சத்துக்கு வராமல் எத்தனை உயிர்கள் போயிருக்குமோ என்றே அஞ்ச வேண்டியுள்ளது.
பல்வேறு விஷயங்களில் களையெடுக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள், எடுத்ததுமே ஏழை, எளிய மக்களின் அடிப்படை வசதிகளிலேயே குறி வைப்பதுதான் கவலையளிக்கும் விஷயமாக உள்ளது.
மத்திய அரசும், மறைமுகமாக, ஆரம்பத்தில் இருந்தே ஏழை எளிய மக்களின் பலாபலன்களில்தான் முக்கியக் கவனம் செலுத்தி வந்தது. சிலிண்டர் மானியம், ரேஷன் பொருள் மானியம் என ஏழை மக்களுக்குக் கிடைக்கும் குறைந்தபட்ச சலுகைகளைக் கூட இரும்புக் கரம் கொண்டு அடக்கி, லட்சமும் இல்லாமல் கோடியும் இல்லாமல், லட்சக் கோடிக்கணக்கில் கொள்ளையடித்தவர்கள்கு அதேக் கையால் டாடா காண்பித்துக் கொண்டிருக்கிறது.
மக்களுக்கு எதிரான நல(?) திட்டங்களை செயல்படுத்துவதில் மட்டும் எந்த அரசியல் கட்சிகளும் இதுவரை பாகுபாடு காட்டியதே இல்லை

நன்றி தினம்ணி 17.10.2017 

JE இலாக்காத்தேர்வு
2016ம் ஆண்டு காலியிடங்களுக்கான
JE (TTA)
இலாக்காத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பு CORPORATE அலுவலகத்தால் 16/10/2017 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தக்காலியிடங்கள் – 8834
தமிழகத்தில் மொத்தக்காலியிடங்கள் = 774
OC/OBC
பிரிவு = 591
SC
பிரிவு = 122
ST
பிரிவு = 61
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நாள் – 15/12/2017
தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 15/01/2018
தேர்வு நடைபெறும் நாள் : 28/01/2018
தேர்வு ONLINE முறையில் நடைபெறும்.
தேர்வு 3 மணி நேரம் நடைபெறும்.
தேர்வு OBJECTIVE ரகம்.
தவறான பதிலுக்கு ¼ மதிப்பெண் குறைக்கப்படும். (NEGATIVE MARKS)
01/07/2016 அன்று வயது 55க்கு கீழ் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி அல்லது
இரண்டாண்டு ITI தேர்ச்சி அல்லது 3 ஆண்டு DIPLOMA தேர்ச்சி.

01/07/2016 அன்று  5 ஆண்டு சேவைக்காலம் இருக்க வேண்டும்.
ரூ.9020 – 17430 சம்பள விகிதத்தில் இருக்க வேண்டும்.
அதற்கு கீழ் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
TTA
சம்பளத்திற்கு சமமான சம்பளவிகிதத்தில் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். அத்தகைய ஊழியர்களுக்கு ஒரு ஆண்டு உயர்வுத்தொகை மட்டும் வழங்கப்படும்.
சிறப்பான ஆர்ப்பாட்டம்


10.10.2017 அன்று அனைத்து அமைப்புகளின் தலைவர்களும் தோழர்கள் தோழியர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம்   ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது.

Friday 13 October 2017

துவங்கியது
பொதுத்துறை நிறுவனங்களில் ஊதிய மாற்றங்க்கள் நடைபெற வேண்டிய காலமிது.
இந்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறையில்  பணியாற்றும் 2.98 லடசம் ஊழியர்களுக்கு ஊதிய மாற்ற உடன்பாடு 10.10.2017 அன்று உருவாகியுள்ளது.
AITUC,CITU, BMS அமைப்புகளுக்கும் நிர்வாகத்துக்கும்  ஏற்பட்ட
இந்த உடன்பாடு இது.
இது பத்தாவது ஊதிய மாற்றம்
உடன்பாட்டு அம்சங்கள்
* 20 சத ஊதிய உயர்வு
* ஐந்து ஆண்டுகளுக்கான உடன்பாடு இது.
* 01.07.2016 முதல் 30.06.2021 வரையான ஐந்து ஆண்டுகளுக்கு இந்த ஊதிய மாற்ற உடன்பாடு.
* 4 சதம் கூடுதல் அலவண்ஸ்
* மருத்துவ உதவித் தொகையாக ஆண்டுக்கு ரூபாய் 18000.
21.06.2017 முதல் மூன்று நாட்கள் வேலைநிறுத்தம் என தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்திருந்தன

அதன் பின்னணியில் இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது
மாவட்டச் செயற்குழு
11.10.2017 அன்று சத்தியில் மாவட்டத்தலைவர் தோழர் பாலசுப்ரமணியன் தலைமையில் மாவட்டச் செயற்குழு சிறப்புடன் நடைபெற்றது.

மாவட்ட உதவிச் செயலர் தோழர் நல்லுசாமி செயற்குழுவைத் துவக்கி வைத்து உரையாற்றினார்.

மாவட்ட்ச் செயலர் தோழர் பழனிவேலு இன்றைய சூழல், போனஸ், மூன்றாவது ஊதிய மாற்றம், டெல்லி பேரணி, மாநிலச் செயற்குழு, நடைபெறவுள்ள போராட்டங்கள், அமைப்பு நிலை, நமது செயல்பாடுகள்   குறித்து தனது அறிமுகவுரையில் விரிவாக எடுத்துரைத்தார்.

மாவட்ட நிர்வாகிகள், கிளைச் செயலர்கள் தங்கள்  கருத்துக்களை எடுத்துக் கூறினர்.

வரும்காலச் செயல்பாடு சிறக்க செயற்குழு வழிகாட்டியாக அமைந்தது.
உள்ளங்கள் உதவியால்
நல்லதோர் வினை
சத்தி அருகில்  உள்ள DG புதூரில் (தாசப்பகவுண்டன் புதூர்) "தவத்திரு ராமசாமி நினைவு தர்மகாரிய அறக்கட்டளை (அனாதை ஆசிரமம்- குடில்)"
என்னும் அமைப்பு செயல்படுகிறது.

அங்கு பயிலும் மானவர்களின் தேவையை அறிந்தும், புரிந்தும் அவர்களுக்கு தேவையானவற்றை உதவும் உள்ளங்கள் NFTE BSNL  ஈரோடு மாவட்டம் சார்பாக உதவி வழங்கும் நிகழ்வு  11.10.2017 அன்று
நடைபெற்றது.

மாணவர்களின் புத்தகங்களை வைத்துக் கொள்ள ஒரு பீரோ வழங்க்கப்பட்டது. மேலும் அவர்களது சில தேவைகளும் நிறைவேற்றப்பட்டன.
அமைப்பின் பொறுப்பாளரும், அங்கு பயிலும் மாணவர்களில் நான்கு மாணவர்களும் பங்கேற்றனர்.

சிறப்பாக நடைபெற்று வரும் ஒரு நல்ல அமைப்பைக் கண்டறிந்த சத்தி தோழர்களுக்கு நன்றி.

தோழர் சுப்ரமணி அந்த குடிலுக்கு இருபது மிதியடிகளை  (MAT) வழங்க்கினார்.

2005ல் தோழர் மாலி பணி ஓய்வுபெறூம் போது
ரூபாய் 5000 வழங்கி துவக்கி  வைத்தது.
நல்ல உள்ளங்க்களின் உதவியோடு
தொடர்ந்து 12 ஆண்டுகளாக இதுபோன்ற பணிகள்
தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இது வளரும்.
இது வாழும்.

இது தொடரும்.

Thursday 12 October 2017

ஒரு நாடகம்
04.10.2017 அன்று அனைத்து அமைப்புகளும் இணைந்து சில நல்ல முடிவுகளை எடுத்து போராட திட்டமிட்டன.

உண்மையில்  BSNLEU தலைமைக்கு அக்கறை இருந்திருந்தால் அனைத்து அமைப்புகளும் 04.10.2017 அன்று நடந்த கூட்டத்தில் பேசி போனசுக்காகஒன்றுபட்டு போராடியிருக்கலாம்.

ஆனால் திடீர் என்று போனசுக்காக 13.10.2017 அன்று தனியாக தனித்து நின்று ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது BSNLEU. அதன் இணைய தளச் செய்தி

Due to certain unavoidable reasons, the call is being given at a very short notice.

உண்மையை ஒளிக்க சிலர் "தவிர்க்க முடியாத" என்ற வார்த்தையைப் பயன்படுத்துவர். இதுவும் இந்த ரகமே.

பல ஆண்டுகளாக போனஸ் பறிபோனதை நிர்வாகத்திடம் பயபக்தியைக் காட்டி வேடிக்கை பார்த்த கூட்டம் இன்று ஒரு நாடகமாடுகிறது.

போனஸ் பெற்றுத்தர வேண்டும் என்பது இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் அல்ல. இது ஒரு சதிச்செயல்.

இது குறித்து தோழர் மதி பதிவிட்டுள்ள முகநூல் செய்தி.

Unity & Struggle : BSNLEU Style ?
We felt very happy when a body like All Unions and Associations in BSNL was recently formed to safeguard the interests of both BSNL and it's employees . But today we come across a call given by BSNLEU for demonstration on 13-10-17 to demand Rs.7000/- as PLI . NFTE is holding it's National Executive meeting in Vijayawada on 13-10-17. All important leaders like Circle Secretaries of NFTE will be away in Vijayawada in Andhra Pradesh on that day. But knowing fully this Comrade Abhimanyu is doing this for reasons beyond our imagination. He may like to score few brownie points on PLI so that it can be used in favour of BSNLEU in the next verification due in 2019. Our employees very well know how his union betrayed them on PLI for several years. However he has a duty to answer the following questions.
1. Why he has not cared to give a joint/ united call for PLI ?
2. Why he has avoided any decision to finalise the new formula for PLI since 2013 ?
3. He was justifying the denial of PLI for more than 6 years and kept quite justifying the denial of PLI citing financial difficulties of BSNL. He even declared from the top top few years ago that hence forth no one could get PLI in BSNL, when NFTE was struggling demanding PLI. Now what are the compelling reasons for his change of heart ?
One can fool some for long. Many for short time. But no person can fool all the people all the time.
சத்தி கிளை மாநாடு

11.10.2017 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய நிர்வாகிகள்

தலைவர்
தோழர் P.சதாசிவம் JE சத்தி

உதவித்தலைவர்கள்
தோழர் M.தன்னாசி OS சத்தி
தோழர்  P.ராமகிருஷ்ணன் TT சத்தி

செயலர்
தோழர் S.சுந்தரேசன் TT

உதவிச்செயலர்கள்
தோழர்  P.சங்க்கரன்   TT ராஜன்நகர்
தோழர் M.P.ராமலிங்க்கம் JE ச்த்தி

பொருளர்
தோழர் K.P.ஈஸ்வரன் TT வின்னப்பள்ளி

உதவிப்பொருளர்
தோழர்  P.ராஜூ TT சத்தி

செயற்குழு உறுப்பினர்கள்
தோழர் N.குரு OS சத்தி
தோழர் A.சந்திரசேகரன் TT புஞ்சைப்புளியம்பட்டி
தோழியர் D.சரஸ்வதி TT சத்தி
தோழர் R.மாரிமுத்து  TT சத்தி
தோழர் R.மனோகரன்   TT பவானிசாகர்

தோழர் P.மூர்த்தி TT ரங்கசமுத்திரம்  டணிக்கையாளராக நியமிக்கப்பட்டர்.

புதிய நிர்வாகிகள் செயல்பாடு சிறக்க

மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.

Wednesday 11 October 2017

உத்தரவு

01.10.2017 முதல் 5.3 சத அகவிலைப்படி உயர்வுக்கான உத்தரவை BSNL நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Tuesday 10 October 2017

மாவட்டச் செயற்குழு
நாள் 11.10.2017
காலம் காலை 10.30 மணி
இடம் சத்தி தொலைபேசி நிலையம்

ஆய்படு பொருள்

அமைப்புநிலை

ஊழியர் பிரச்னைகள்

Monday 9 October 2017

விதைக்கப்பட்டு 50 ஆண்டுகள்

சே குவாரா
•ஒவ்வொரு அநீதிக்கு எதிராகவும் நீங்கள் பொங்குகிறீர்களா.. அப்படியானால் நீங்கள்தான் நான்

•நாம் ஒன்றுக்காக சாகத் தயாராக இருந்தால்தான் அதற்காக வாழ முடியும் காரியத்திற்கு உதவாத எந்த வார்த்தையும் முக்கியத்துவம் இல்லாதது நீ என்னைக் கொல்ல வந்துள்ளாய் என்று எனக்குத் தெரியும். உடனடியாக அதைச் செய். •உண்மையான புரட்சி எது தெரியுமா.. அன்புதான். அன்பு உணர்வுதான் உண்மையான புரட்சிக்கு வித்து. அதுதான் புரட்சியை வழி நடத்தக் கூடிய சக்தி. அன்பு உணர்வு இல்லாத, நேச உணர்வு இல்லாத எந்தப் புரட்சியும் உண்மையானதாக இருக்க முடியாது.



Sunday 8 October 2017

அக்டோபர் 8
பாட்டாலே
புத்தி சொன்ன
பட்டுக்கோட்டையார்

நினைவு தினம்.

Friday 6 October 2017

தோழர் சுப்ரமணி
பணிநிறைவு பாராட்டு விழா

விசுவாசத்தின் வித்தாக,
திறமையின் முத்தாக,
நற்பணியாற்றிய நல்ல ஊழியனாக,
கட்டுப்பாடு மிக்க கடமை வீரனாக
பணியாற்றிய
சத்தி கிளைச் செயலர்
தோழர் சுப்ரமணி
அவர்களுக்கு
பணி நிறைவு பாராட்டு விழா.
நாள்  11.10.2017
காலம் பகல் 1130 மணி
இடம் தொலைபேசி நிலையம் சத்தியமங்கலம்

பாராட்டுரை
தோழர் மாலி
தோழர் செல்வராஜன்
தோழர் K.M.ந்டராஜன்
தோழர் புண்ணியகோட்டி
அன்புள்ளத்துடன் வாழ்த்த

அனைவரும் வருக
சத்தியமங்கலம் கிளை மாநாடு

நாள் 11.10.2017
காலம்  காலை  0930 மணி

இடம்   தொலைபேசி நிலையம் சத்தியமங்கலம்

மாநாட்டு உரை   தோழர் பழனிவேலு
(மாவட்டச் செயலர்)


அனைவரும் வருக