NFTECHQ

Friday 13 October 2017

மாவட்டச் செயற்குழு
11.10.2017 அன்று சத்தியில் மாவட்டத்தலைவர் தோழர் பாலசுப்ரமணியன் தலைமையில் மாவட்டச் செயற்குழு சிறப்புடன் நடைபெற்றது.

மாவட்ட உதவிச் செயலர் தோழர் நல்லுசாமி செயற்குழுவைத் துவக்கி வைத்து உரையாற்றினார்.

மாவட்ட்ச் செயலர் தோழர் பழனிவேலு இன்றைய சூழல், போனஸ், மூன்றாவது ஊதிய மாற்றம், டெல்லி பேரணி, மாநிலச் செயற்குழு, நடைபெறவுள்ள போராட்டங்கள், அமைப்பு நிலை, நமது செயல்பாடுகள்   குறித்து தனது அறிமுகவுரையில் விரிவாக எடுத்துரைத்தார்.

மாவட்ட நிர்வாகிகள், கிளைச் செயலர்கள் தங்கள்  கருத்துக்களை எடுத்துக் கூறினர்.

வரும்காலச் செயல்பாடு சிறக்க செயற்குழு வழிகாட்டியாக அமைந்தது.

No comments:

Post a Comment