NFTECHQ

Thursday 30 November 2017

வாழிய பல்லாண்டு
இன்று பணிநிறைவு பெறும்

தோழர் G.ராஜசேகரன் OS
தோழியர் ஷைலஜா கெளதம் Rajbhasha Adhikari
தோழர் K.மணி TMO
ஆகியோர்
நலமுடனும்
மகிழ்வுடனும் பல்லாண்டு வாழ

வாழ்த்துகிறோம்.

Wednesday 29 November 2017

வேலைநிறுத்தக் கோரிக்கைகள் விளக்கக் கூட்டம்
12.12.2017 மற்றும்
13.12.2017 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தம்.

இதன் கோரிக்கைகள் குறித்து விளக்கும் கூட்டம்  07.12.2017 அன்று ஈரோட்டில் நடைபெறும்.

அனைத்து அமைப்புகளின் சார்பாக கீழ்க்கண்ட தலைவர்கள் பங்க்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தோழர்கள்
P.பாலமுருகன், NFTE
N.P.ராஜேந்திரன் BSNLEU
P.செந்தில்குமாரலிங்க்கம் AIBSNLEA
P.S.காங்கேஷ் SNEA
M.ரவீந்திரன் TEPU
J.செந்தில்குமாரி SEWA.
கூட்டத்தில் திரளாகப் பங்கேற்பீர்.
வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்குவீர்.
வென்றெடுப்பீர் நம் கோரிக்கைகளை
நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு

ஈரோடு மாவட்ட BSNL அனைத்து தொழிற்சங்க அமைப்புகள் சார்பாக ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செல்வகுமாரசாமி அவர்களிடம் போராட்ட கோரிக்கைகள் குறித்த மனு இன்று 29.11.2017 வழங்கப்பட்டது

Monday 27 November 2017

இனி என்ன நடக்கும்
ஊதிய மாற்றத்துக்கான DPE வழிகாட்டும் நெறிமுறைகள் வழக்கமான முறையில் உததரவிடப்பட்டுள்ளது.

கொடுக்கும் திறன்
ஏற்கும் திறன் என்ற வார்த்தைகள் உள்ளன.

அரசு எந்த நிதி உதவியும் செய்யாதாம்.
(தனியாரின் கார்ப்பரேட் நிறுபவனங்களுக்கு மட்டுமே உதவி செய்யும்)

இனி பேச்சு வார்த்தையைத் துவக்க வேண்டும்.
ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.
ஒன்றுபட்டு உறுதியுடன், வலுவாகப் போராட வேண்டும்.

ஊழியர்கள் எதிர்பார்ப்பு இனி அதிகரிக்கும்.


தொழிற்சங்கத் தலைவர்களுக்கு பொறுப்பு கூடும்.

Sunday 26 November 2017

தோழர் கோஹ்லி
விடை பெற்றார்
NFPTE/NFTE இயக்கத்தின் அகில இந்தியத் தலைவர்கள் வரிசையில்  அரும்பணியாற்றிய
அருமைத் தோழர் கோஹ்லி
நிரந்தரமாக உடலால்
விடைபெற்றார்.

தோழர் குப்தாவின் பணிகளுக்கு உறுதுணையாக இருந்தவர்.

பல்வெறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண்ட ஆற்றல் மிக்க தலைவராக இருந்தவர்.

அவரது மறைவுக்கு நமது கொடி தாழ்ந்த அஞ்ச்சலி.
தோழர் துரைராஜ் மறைவுக்கு
அஞ்சலி
TAD என அன்புடன் அழைக்கப்பட்ட அருமைத் தோழர் T.A. துரைராஜ் காலமானார் என்ற செய்தியை அறிவிப்பதில் பெரும் துயருறுகிறோம்.

NFPTE/NFTE இயக்கங்களில் ஈரோடு மாவட்டத்தில் இணையற்ற பனியாற்றிய முன்னணித் தலைவர்களில் ஒருவர்.

பழககுவதற்கு இனிய தோழரின் மறைவுக்கு நமது இதய அஞ்சலி.


அவரது துணைவியார மற்றும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Saturday 25 November 2017

முடிவு வந்தது
முட்டுக்கட்டைகளோடு
பொதுத்துறை ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் வழங்குவது குறித்த முடிவை மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது.

இது குறித்து DPE (பொதுத்துறைகளுக்கான அமைச்சகம்) வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும்.

"கொடுக்கும் திறன்"
"நிதிஆதாரம்"
போன்ற நிபந்தனைகள் உள்ளன.

மந்திரத்தாலும்
மந்திரிகளாலும்
மாற்றம் நிகழாது.

உறுதியான ஒற்றுமை,
வலுவான போராட்டம்
 இவை மட்டுமே

ஊதிய மாற்றத்துக்கு வழி வகுக்கும்.
உன்னதமான தலைவன்

உலகின் உன்னதமான தலைவன்
புரட்சியின் நாயகன்
போராளிக்கு இல்லக்கணம் தந்தவன்

பிடல் காஸ்ட்ரோ நினைவு தினம் இன்று.

Friday 24 November 2017

சம்மேளன தினம்
நவம்பர் 24.
NFPTE என்னும் தன்னிகரற்ற பேரியக்கம்
உதயமான தினம்.
தோழர் குப்தாவின் பெருமுயற்சியால்
ஒன்பது சங்கங்கள் NFPTE என்னும் ஒரு குடையின் கீழ ஒருங்கிணைக்கப்பட்ட தினம்.

கடுமையான சவால்களைச் சந்தித்து வெற்றி கண்ட இயக்கம்.

இப்போது நினைத்தாலும் இதெல்லம் எப்படி சாத்தியமாயிற்று- சாதனையாயிறு என்பது பிரமிப்பாக இருக்கிறது.

NFPTE ன்னும் பேரியக்கத்திலிருந்து,
NFPTE என்னும் பேரியக்கத்தின் செயல்பாடுகளிலிருந்து,
NFPTE ன்னும் பேரியக்கத்தை வழிநடத்திய ய தலைவர்களிடமிருந்து
கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம்.

அவற்றைக் கற்று
அவை வழி நடப்பதே

காலத்தின் தேவை

Wednesday 22 November 2017

மனிதச் சங்கிலி இயக்கம்

மூன்றாவது ஊதிய மாற்றம்.
தனி டவர் கம்பெனி எதிர்ப்பு
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி

BSN அனைத்து அமைப்புகளின் அறைகூவலை ஏற்று 23.11.2017 அன்று ஈரோடு நகரில் மனிதச் சங்கிலி இயக்கம்.

காலம் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

இடம்  பொதுமேலாளர் அலுவலகம் முன்புள்ள கனரா வங்கி யிலிருந்து பாரத் ஸ்டேட்  வங்கி வரை


திரளாகப் பங்கேற்பீர்.

Thursday 16 November 2017

சமுதாயப் பணியில்
சத்தி தோழர்கள்

சத்தி NFTE கிளையின் தோழ்ர்கள் 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுத்துள்ளனர்


சமுதாய அக்கறையோடு பணியாற்றிய சத்தி கிளைத் தோழர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

Wednesday 15 November 2017

சாதனை படைத்த

செளந்தர்ராஜ்

அருமைத் தோழர் G.செளந்தரராஜூ
டெலிகாம் டெக்னீசியன்.
புதிய தொலைபேசி இணைப்புகள் தருதல்,
தொலைபேசி இடமாற்றத்தை (ஷிப்டிங்) விரைந்து தருதல்,
துண்டிக்கப்பட்ட தொலைபேசி
இணைப்புகளை மீண்டும் தருதல், (ரீகனெக்சன்),
தொலைபேசிக் கட்டண நிலுவைத் தொகை வசூல் செய்தல் போன்ற பணிகளைச் சிறப்பாகச் செய்துள்ளார்.
கொடுக்கப்பட்ட இலக்கையும் தாண்டி சாதனை படைத்துள்ளார்.

தற்போதைய சூழலில் இத்தகைய பணிகளைச் செய்வது அதுவும் இலக்கைத் தாண்டி செய்வது என்பது எளிதல்ல.

திரு. ஆறுமுகம், துணைப்பொதுமேலாளர் (CFA)
திரு ராஜமாணிக்கம் துணைப்பொதுமேலாளர் (நிதி)  ஆகியோர் அவர் பணிபுரியும் இடத்திற்கே சென்று
தோழரின் பணியைப் பாராட்டி
சால்வை அணிவித்து பாராட்டியுள்ளனர்.

நமது தோழரின் கடமை உணர்வும்,
பணியில் காட்ட்டும் அக்கறையும்
பாராட்டுதலுக்குரியது.

தோழர் செளந்தரராஜூ அவர்களை மாவட்ட்ச் சங்கம் மனதார வாழ்த்தி பாராட்டுகிறது. அவரது சாதனைப் பணி தொடர வாழ்த்துகிறோம்.
இத்தகைய சிறபாகப் பணியாற்றும் ஊழியர்களைப் பாராட்டி கெளரவப்படுத்திய மாவட்ட நிர்வாகத்தையும், அதிகாரிகளையும் மாவட்டச் சங்கம் சார்பாகப்  பாராட்டுகிறோம்.
ருஷய்ப் புரட்சி
நூல் வெளியீட்டு விழா

ருஷய்ப் புரட்சியின் நூறு ஆண்டுகள் நிறைவுற்றது.

ருஷய்ப் புரட்சி குறித்து தோழர் மதிவாணண் அவர்களின் மதிவண்ணத்தில் உருவான நூல் வெளியீட்டு விழா.

நாள்
17.11.2017 மாலை 3 மணி
இடம் ராஜா அண்ணாமலை மன்றம் சென்னை
விழா சிறக்க வாழ்த்துக்கள்
BSNL அனைத்து சங்க
கூட்ட முடிவுகள்
14/11/2017 அன்று BSNL அனைத்து சங்க கூட்டம் NFTE பொதுச்செயலர் தோழர்.சந்தேஷ்வர்சிங் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
• 16/11/2017 அன்று நடக்கவிருந்த மனிதச்சங்கிலி இயக்கத்தை 23/11/2017 அன்று கூடுதல் பங்கேற்புடன் நடத்துவது.
• 23/11/2017 அன்று BSNL நிர்வாகத்திற்கும் DOTக்கும் டிசம்பர் 12 மற்றும் 13 வேலைநிறுத்த அறிவிப்பு செய்வது.
• 18/11/2017 அன்று மாநில மட்டத்தில் அனைத்து சங்க கூட்டம் நடத்தப்பட்டு மனிதச்சங்கிலி இயக்கத்தையும் வேலைநிறுத்தத்தையும் திறம்பட நடத்துவது பற்றி முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். டெல்லி தலைமையகத்தில் 17/11/2017 அன்று கூட்டம் நடைபெறும்.
• 30/11/2017க்குள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கை மனு அளிக்கப்படவேண்டும். கோரிக்கை மனுவின் மாதிரி இணையதளத்தில் உடனடியாக வெளியிடப்படும்.
அகில இந்தியத்தலைமையில் இருந்து சுவரொட்டி மற்றும் சுற்றறிக்கைகள் வெளியிடப்படும். மாநில மட்டத்தில் அவர்களது தாய்மொழியில் வெளியிட வேண்டும்.

அனைத்து அகில இந்தியத்தலைவர்களும் பங்கேற்கும் வேலைநிறுத்த விளக்கக்கூட்டம் நாடு முழுவதும் நடைபெறும். 20/11/2017 லக்னோவில் துவங்கி 08/12/2017 அன்று ஹைதராபாத் நகரில் முடிவுறும். சென்னையில் 05/12/2017 அன்று நடைபெறும்.
மனிதச் சங்க்கிலி இயக்கம்
16/11/2017 அன்று நடைபெறவிருந்த மனிதச்சங்கிலி இயக்கம் 23/11/2017 அன்று  நடைபெறும் என
தலிவர்கள் அறிவித்துள் ளனர்.

திரளாகப் பங்க்கேற்று சிறப்புடன் நடத்திடுவோம்.

Tuesday 14 November 2017

நேரு பிறந்த நாள்
நவம்பர் 14
"உங்கள் தேசத்தில் பெரும்பான்மையினர் படிப்பறிவு இல்லாதவர்கள். அவர்களில் வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை அளித்தது தவறு; உங்கள் தேசத்தில் ஜனநாயகம் தழைக்காது' - என்று நேருஜியிடம் சொன்னார் மேலைநாட்டு பத்திரிகையாளர் ஒருவர்.
"
என் மக்களில் பெரும்பாலோர் கல்வி கற்காதவர்கள் என்பது உண்மையே! ஆனால் அவர்கள் அனைவரும் புத்திசாலிகள். அவர்களிடம் கிராமியப் பொது அறிவு உண்டு. எது சரி; எது தவறு என முடிவு எடுக்கும் திறன் நிரம்பவே உண்டு' எனப் பளிச்செனப் பதில் தந்தார் பண்டித ஜவாஹர்லால்.

Thursday 9 November 2017

இப்படை வெல்லும்
இன்று (நவம்பர் 9 2017)
மூன்று நாள் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் துவங்கியது.
நாட்டின் நலன் காக்க,
நாட்டு மக்கள் நலன் காக்க,
உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கு இழைக்கப்படும் இன்னல்கள் அகற்றிட
எழுந்திட்ட

இப்படை வெல்லும்.

Wednesday 8 November 2017

வெற்றி பெற்றே தீரும்
இன்று இந்தியாவின் திட்டமிடல் கொள்கையும் அதன் அமைப்புமுறையும் மாறிப் போனதையும்கூட நாம் சோஷலிஸப் பயணத்திலிருந்து விலகி நடப்பதன் அடையாளமே.
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, முதலாளித்துவம் சர்வதேச வணிக ஒப்பந்தங்களின் வழியாக இன்று தன்னை வலிமைப்படுத்திக்கொண்டிருக்கிறது.

இது சோஷலிஸத்தின் வீழ்ச்சியோ, முதலாளித்துவமே இறுதியில் வெற்றி பெறும் என்ற பேராசைக் கனவின் அறிகுறியோ அல்ல. வரலாறு நெடுகிலும் முதலாளித்துவம் தனது தோல்விகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டே தன்னை வலுப்படுத்திக்கொண்டிருக்கிறது.

இன்று நாடுகளின் எல்லைகளைக் கடந்து நிற்கும் பெருமுதலாளித்துவம் தனது தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தன்னைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது என்றால், சோஷலிஸம் தனது பலவீனங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாதா என்ன? மானுடத்தின் மாபெரும் விடுதலைக் கனவு தடைப்பட்டிருக்கலாம். ஆனால், அது வெற்றி பெற்றே தீரும். மனிதர்கள் அனைவரும் சமம் என்ற சோஷலிஸக் கனவு முழுமையாய் நிறைவேறும் நாளில்தான் மானுடம் என்ற வார்த்தை தனக்கான முழுமையான பொருளைப் பெறும்.


Tuesday 7 November 2017

2017 நவம்பர-7
ருஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு நிறைவு.போற்றுதலுக்குரிய மகத்தான சில நினைவுகள்.
1. யுகப்புரட்சி நாயகன் லெனின்.
2. லெனின் புரட்சிக்காரனாய் உருவெடுத்ததின் உந்துசக்தி அவரது அண்ணன் அலெக்ஸாண்டர்.
3. காரியம் யாவிலும் கை கொடுத்த காதலி குருப்ஸ்கயா.
4. புரட்சியின் முதற்கட்டம்(1905)
5. கிரம்ளின் மாளிகை- லெனின் அலுவல் அறை.
6. கிரம்ளின் மாளிகையில் ஜனாதிபதியாக.
7. சோவியத் காங்கிரஸில் லெனின் உரை நிகழ்த்துகிறார்.
8. தேச நிர்மாணப்பணியில் மரத்துண்டின் அடிப்பாகத்தைச் சுமக்கும் ஜனாதிபதி லெனின்.

வாழ்க ருஷ்யப்புரட்சி.ஓங்குக புரட்சியாளர்களின் தியாகம்.

Monday 6 November 2017

முற்றுகைப் போராட்டம்
2017
நவம்பர் 9,10,11
நாடாளுமன்ற முற்றுகைப்போராட்டம்.
மத்திய அரசின்
மக்கள் விரோத,
விவாசாயிகள் விரோத,
தொழிலாளர் விரோத
கொள்கைகளை முறியடிக்கும்
முற்றுகைப் போராட்டம்
கோடிக்கணக்கில்
கோப முகங்களுடன்
கோரிக்கை முழக்கத்தோடு
முற்றுகைப் போர்.

வெல்லட்டும்.

Sunday 5 November 2017

அகில இந்திய மாநாடு
NFTE பேரியக்கத்தின்
அகில இந்திய மாநாடு
பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில்
14.03.2018 முதல்
16.03.2018 வரை
 நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.