ஒரு வரலாற்று நிகழ்வு
இந்திய நாடு சுதந்திரம் பெறும் முன்பே 1920ஆம் ஆண்டில்
(31.10.1920) துவக்கப்பட்ட முதல் தொழிற்சங்கம் AITUC.
விடுதலைப் போராட்டத்தில் AITUC அமைப்பின் தலைவர்கள்
சீரிய பங்காற்றினர்.
உழைக்கும் மக்களின் உரிமைக்கும், வாழ்வுக்கும்,
தேசத்தின் நலன் காக்கவும் உன்னதமான இலட்சியங்களோடு இயங்கும்
AITUC இயக்கத்தின் தேசிய பொதுக்குழுக் கூட்டம் 9.12.2017 முதல் 11.12.2017 வரை
ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்றது.
தோழியர் அமர்ஜித் கெளர்
AITUC அமைப்பின் தேசிய பொதுச்செயலராக ஒருமனதாக தேர்வு
11.12.2017 அன்று செய்யப்பட்டார்.
இந்திய நாட்டின் தொழிற்சங்க வரலாற்றில் ஒரு தோழியர்
மத்திய சங்கம் ஒன்றிற்கு பொதுச்செயலர்
பதவிக்கு தேர்வு செய்யப்படுவது இதுவே முதல்முறை.
மிகச்சிறந்த அறிவாற்றலும், கொள்கைப்பிடிப்பும் மிக்க
தோழியர் அமர்ஜித் கெள்ர் அவர்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.
No comments:
Post a Comment