NFTECHQ

Tuesday 31 January 2017

பொருளாதார ஆய்வறிக்கை

இந்த 3 விஷயங்களும் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும்! - பொருளாதார ஆய்வறிக்கை எதிர்காலத்தில் இந்தியாவின் வளர்ச்சியை மூன்று காரணிகள் பாதிக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.

இன்று சமர்ப்பிக்கப்பட்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள அந்த மூன்று காரணிகள்...

1. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதில் உள்ள நடை முறை சிக்கல். சிவில் விமானத் துறை, வங்கித் துறை, உரத் தொழில் போன்றவற்றில் மேலும் தனியார்மயம் தேவை.

2. அத்தியாவசிய சேவைகளான மருத்துவம், கல்வி போன்றவற்றை அளிப்பதில் மாநில அரசுகள் போதிய அக்கறை காட்டாதது. ஊழல், அரசு அதிகாரிகளின் பொறுப்பின்மை, வேண்டியவர்களுக்கு மட்டும் வேலைகளைச் செய்து கொடுப்பது போன்றவை பெரும் பாதிப்பை உண்டாக்கும்.

3. ஏழைகளுக்கான அரசின் மறு பகிர்வு முறை சுத்த மோசம். யாருக்காக திட்டங்கள் தீட்டப்படுகின்றனவோ, அவர்களுக்கு சரியாக அவற்றின் பலன்கள் போவதில்லை. இந்தக் குறையை சரி செய்ய அரசு சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

           வாழிய பல்லாண்டு

இன்று பணி ஓய்வு பெறும்

1 .திரு S.பாலசுப்ரமணியன் PA TO GM
2. திரு H.நாகராஜன் SDE
3.திருV.வெங்க்கடகிருஷ்ணன் JTO
4.தோழர் G.ரத்னசாமி TT
5.தோழர் K.சொங்க்கப்பன் TT

ஆகியோர்
நலமுடனும்
மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ
மாவட்டச் சங்கம்

சார்பாக வாழ்த்துகிறோம். 
BSNL தகவல்

ஏப்ரல் 2016 முதல் டிசம்பர் 2016 வரை BSNL  நிறுவனத்தின் சேவைகள் மூலமான வருமானம் ரூபாய் 19379.6 கோடி.

ஏப்ரல் 2015 முதல் டிசம்பர் 2015 வரை இந்த வருமானம் 18314.9 கோடி ரூபாய்.

வருமானம் 5.8 சதம் உயர்ந்துள்ளது.

ஏப்ரல் 2016 முதல் டிசம்பர் 2016 வரை BSNL  நிறுவனத்தின் நட்டம் ரூபாய் 4890 கோடி.
ஏப்ரல் 2015 முதல் டிசம்பர் 2015 வரை
நட்டம் 6121  கோடி ரூபாய்.

வழக்கமாக ஜனவரி முதல் மார்ச் வரையான காலத்தில் வருமானம் கணிசமாக இருக்கும் என்பதால் இந்த ஆண்டு வருமானமும் கூடும். நட்டமும் கடந்த சில ஆணாடுகளை விட குறையும்.


இந்த தகவல்களை நிறுவனத்தின் தலைவர் அனுபம் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.





வங்கி ஊழியர் வேலை நிறுத்தம்

நாள்  07.02.2017

கோரிக்கைகள்

1. வங்கிகளுக்கு போதுமான அளவுக்கு
நிதி ஒதுக்கீடு செய்
2. ATM களில் போதுமான அளவுக்கு நிதி   இருப்புக்கு நிதி ஒதுக்கு.
3. பொதுமக்கள் பனம் எடுக்க விதிக்கப்பட்டுள்ள உச்சவர்மபை நீக்கு.


மக்களின் துயர் துடைத்து நலன் காக்கும் இந்தபோராட்டம் வெல்ல வாழ்த்துக்கள்.

Monday 30 January 2017

ஜனவரி 30
மகாத்மா

நினைவு தினம்

அகிம்சை மற்றும்
அறவழி  மூலம் போராட முடியும் என்பதை உலகுக்குச் சொன்ன  உத்தமரின் நினைவு தினம் இன்று.

அவர் பிரிந்து 69 ஆண்டுகள் ஆன பின்னும் அவர் வழியில் போராடி வெல்ல முடியும் என்று  தமிழக மாணவர்கள் நிரூபித்துள்ளனர்.

அவர் வழி என்றும் நிலைக்கும்

Sunday 29 January 2017

NFTCL
தேசிய தொலைத்தொடர்பு
ஒப்பந்த ஊழியர் சம்மேளனத்தின்

தமிழ் மாநில மாநாடு
பிப்ரவர் 11, 12 தேதிகளில்...
காரைக்குடியில்...
ஒப்பந்த ஊழியர் வாழ்வில்..
மாற்றத்தையும்
ஏற்றத்த்யும் உருவாக்க
திட்டமிடும் மாநாடு
வெல்லட்டும்.
ஈரோட்டின் பங்கும்
இந்த மாநில மாநாட்டில்

இருக்கும்.

Friday 27 January 2017

பேஸ்புக், ட்விட்டருக்கு மாற்றாக புதியதோர் இணையம் செய்வோம்! 


தை பிறந்தால் வழி பிறக்கும். இங்கே புரட்சி பிறந்திருக்கிறது. இதற்கு கருபொருளாகவும் எரிபொருளாகவும் இருந்த இளைஞர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.
பல்வேறு விவாதங்கள் நிகழும் இந்நேரத்தில் ஒரு கருத்தை மட்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

இந்த விழிப்புணர்ச்சிக்கு சமூக வலைத் தளங்கள் மையமாக இருந்திருக்கின்றன. Social media என்று சொல்லப்பட்டாலும், ஓர் ஊடகமாகப் பதிவானால் அதற்குரிய கட்டுப்பாடுகளை சந்திக்க வேண்டியிருக்குமோ என எண்ணி Facebook - Twitter போன்ற தளங்கள் தொழில்நுட்ப நிறுவனங்களாகத்தான் இயங்குகின்றன.

அவர்களின் இந்த சாமர்த்தியத்தை உலக சமூகங்கள் தங்களின் தன்னெழுச்சிக்காக பயன்படுத்துவதில் மகிழ்ச்சி. ஆனால் இந்த நிறுவனம் எதுவும் அறத்தின் அடிப்படையிலோ அல்லது நல்லிணக்க நோக்கத்தோடு அமைக்கப்படவில்லை. வணிகமும் ஆதிக்கமும் இவர்களின் இரு கண்கள். இதே நிறுவனங்கள் என்றாவது ஒருநாள் நமக்கு எதிராக திரும்பும் சூழல் ஏற்படலாம். அது நடப்பதற்குள் நாம் தன்னிச்சையாக இயங்குவதற்கு நாமே ஒரு தளத்தை உருவாக்குதல் அவசியம். சீனாவின் 'sino weibo' என்ற தளம் மிகச் சிறந்த உதாரணம்.

 மாற்றத்திற்கு தலைமை தாங்க நினைப்பவர்கள் தொழில்நுட்பத்திற்கு தலைமை தாங்க வேண்டும். உலகமெலாம் மென்பொருள் வல்லமைக்கு பெயர் பெற்ற தமிழ் இளைஞர்கள் ஒரு குழு அமைத்து நமக்கான ஒரு சமூக வலைத்தளத்தை உருவாக்கும் முயற்சிகளைத் தொடங்கவேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

தான் சார்ந்த சமூகத்தின் பண்புகளைப் பாதுகாக்க நினைப்பதும் அதன் பெருமைகளைப் பாடுவதும் மனித இயல்பு. அதை ஒடுக்க நினைப்பதுதான் இறையாண்மைக்கு எதிரான செயல். வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையில் தமிழர்களின் அடையாளம் புத்துணர்ச்சி பெறுவதன் மூலம் இந்தியம் என்ற தத்துவமும் மேம்படுகிறது. தமிழர்களைப் புரிந்துகொள்ளாத சில அரசியல் சக்திகள் இந்தியாவைப் புரிந்துகொள்ளவில்லை என்று

அர்த்தம். ஆக்கபூர்வமாக இணைவோம். நம் சிந்தனையில் எரிகின்ற நெருப்பை வீணாக்காமல் விளக்காக்குவோம்.
எதிர்பார்ப்புகளோடு...
கபிலன் வைரமுத்து

Wednesday 25 January 2017

அனைவருக்கும்
குடியரசு தின

வாழ்த்துக்கள்


அளப்பரிய பெருமை மிகுந்த
இந்திய பண்பாடு
இந்திய கலாச்சாரம்
இந்திய நாகரீகம்
ஏழை எளிய சாதரண மக்களின் உரிமை
இவை அனைத்தையும் காத்திட
உருவான
குடியரசு நிலைத்து நீடிக்கட்டும்.

நிம்மதியான வாழ்வு
மக்களுக்குக் கிடைக்கட்டும்.

இவை காக்கப்படும் என்ற நம்பிக்கையை தமிழக மனவர்களும் இளைஞர்களும்
தந்திருக்கிறார்கள்.

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்
போராட்டங்க்களும்

படிப்பினைகளும்

ஒரு போராட்டத்தை திட்ட்மிட்டோ
திட்டமிடாமலோ துவக்குவது எளிது.

அந்தப் போராட்ட்டத்தை எப்போது எப்படி முடிப்பது என்பதுதான் மிகவும் முக்கியமானது.

இதற்கான படிப்பினையை  தோழர் குப்தா நமக்கு நிறையவே கற்றுக் கொடுத்திருக்கிறார். இப்போது அடையாளப் போராட்டங்களையே நாம் நடத்தி வருகிறோம். தோழர் குப்தா காலத்தில் நீண்ட நெடிய போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு போராடத்தையும் எப்போது எப்படி முடிக்க வேண்டுமோ அப்படி முடித்தவர் அவர்.

இது குறித்து சிலர் விமர்சனம் செய்தது உண்டு. ஆனாலும் இப்போது பாரபட்சமின்றி சிந்திதுப் பார்த்தால் அந்தப் போராட்டங்க்கள் அனைத்துமே நல்ல பலன்களைத் தந்திருக்கின்றன. அவற்றை ஊழியர்களும் ஓய்வு பெற்றவர்களும் அனுபவித்து வருகின்றனர்.

எந்த ஒரு போராட்டத்தையும் அரசு நசுக்க்கிவிடாமல் உடன்பாட்டொடு முடிக்கும்
வல்லமை பெற்ரவர் தோழர் குப்தா.

ஒரு போராட்டத்தை முடிப்பதில் போராடுவோருக்கும் பங்கு உண்டு. ஆள்வோருக்கும் பங்கு உண்டு.

1974ல் ரயில்வே ஊழியர் போராட்டம் அரசால் சிதைக்கப்பட்டது. அது முறியடிக்கப்பட்ட
போராட்டமாக அமைந்தது.

மாணவர் இளைஞர் போராட்டத்தைச் சிறப்பாக முடித்து வைத்து அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் நல்ல பெயர பெறும் வாய்ப்பை அரசு தவறி விட்டது.

மாறாக போராட்டத்தை அமைதியாக முடித்து மாணவர்கள் பெருமை பெறுவதை அரசு விரும்பவில்லை.

ஒரு அமைதியான அறவழிப் போராடத்தைஅதிகாரத்தை வைத்து முறியடிப்பது என்ற அரசின் முடிவால் மாணவர்களுக்கு இழப்பில்லை.

ஜல்லிக்கட்டைச் சட்டம் போட்டு மீண்டும் கொண்டு வந்துவிட்டோம் என்று அரசு பெருமை கொண்டால் அந்தப் பெருமை மானவர்களால் கிடைத்தது என்பதே நிதர்சனமான சத்தியம்.

அண்ணாவின்   பெயரைக் கொண்ட கட்சியின் அரசு அண்ணாவின் வழியை ஏன் பின்பற்றவில்லை?

அதிகார உணர்வா?
மாணவர்களின் பெருமையைப் பறிப்பதா?
அல்லது நிர்ப்பந்தமா என்பது ஆள்வோருக்கே தெரியும்.

ஆகப்பெரிய கட்சியாக இருந்த காங்க்கிரஸையே 50 ஆண்டு காலமாக ஆட்சியிலிருந்து விலக்கி வைத்தது மானவர் சக்தி.

இந்த மாணவர் சக்தியின் விளைவைப் புரிந்து கொண்டு பாடம் கற்க வேண்டியவர்கள் தமிழக அரசிய்லவாதிகள்.

தொழிற்சங்கங்க்களும் இந்த்ப் மாணவர் போராட்டங்களிலிருந்து
பாடம் கற்க வேண்டியது அவசியம்.
ஜனவரி 25
மொழிப்போர்
தியாகிகள் தினம்

இன்று மொழிப்போர் தியாகிகள் தி1930 முதல்  1965-வரை
நடந்த இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில், தமது இன்னுயிரை ஈந்தவர்களுக்கும் காவல் துறையாலும் இந்தியத் துணை ராணுவத்தாலும் கொல்லப்பட்டவர்களுக்கும் நினைவஞ்சலி செலுத்தும் நாள்.

தமிழகத்தில் அரசியல் அதிகாரத்தை
1965 மாணவர்கள் போராட்டம்தான் மாற்றியமைத்தது.

மொழிப்போர் தியாகிகள் பற்றி ஒரு வரி கூட இல்லாத பாடப்புத்தகங்கள்தான் இன்றைக்கு மாணவர்களுக்குத் தரப்பட்டுள்ளது. அவ்வள்வுதான் தமிழ் மொழி மீதான அக்கறையோ?

காலங்க்கள் மாறலாம்.
களங்கள் மாறுவதில்லை.

கொலைக்களத்தில் 
கொள்கைகள்

விதிகள், நெறிமுறைகள்,கொள்கைகள் என் அனைத்தையும் கறாராகக் கடைப்பிடிக்க வேண்டும் என ஊழியர்களுக்கு புத்திமதிகள் சொல்லப்படுகின்றன. ஊழியர் சங்கங்களுக்கும் இந்த புத்திமதிகள் சொல்லப்படுகின்றன.

ஆனால் அதிகாரிகளுக்கு இது பொருந்தாது என்னும் நிலைபாடு தலைதூக்கியுள்ளது.

மாற்றல் கொள்கையில் அதிகாரியோ ஊழியரோ ஒரு ஊரில் கட்டாயம் இரண்டு ஆண்டுகள் இருந்தால்தான் விருப்பமாற்றலுக்கு விண்னப்பிக்க முடியும் என்பது மாற்றல் கொள்கை. சமீபத்தில் கூட கார்ப்பரேட் அலுவலகம் இதை வலொயுறுத்தி உத்தரவிட்டுள்ளது.

ஊழியர்களைப் பொறுத்தவரை இந்த விதியில் காட்டப்படும் கறார்த்தன்மை அதிகாரிகளுக்குக் கிடையாதா?

கொள்கையை அமல்படுத்த வேண்டிய இடத்தில் இருக்கும் உயர் அதிகாரிகளே அந்தக் கொள்கையை கொலைக்களத்துக்கு அனுப்பும் விபரீதங்கள்  அரங்கேறுகின்றன.

ஊழியர் சங்கங்க்கள் இதில் கவனம்
செலுத்த வேண்டிய அவசரம் உள்ளது.

Tuesday 24 January 2017

போராட்டங்களும்
போதனைகளும்
ஒவ்வொரு போராட்டமும் மூன்று விளைவுகளை உருவாக்கும்.
1. வெற்றி
2. தோல்வி
3. படிப்பினை.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தோல்வி என்று சொல்வதற்கு இம்மியளவும் காரணம் இல்லை.

இந்தப் போராட்டம் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் கிடைத்திட்ட வெற்றி என பெருமிதம் கொள்வதில் இருவேறு கருத்துக்கள் இருக்க நியாமில்லை.

மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயம் உரிமைக்காகவும், நியாய்த்திற்காகவும் அறவழியில் அமைதியாகப் போராடும் என்பதை உலகுக்குகு உரக்கச் சொலியிருக்கிறது.

50 ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்கள் நடத்திய மொழிப்போர் வரலாற்றை கேட்டிருக்கிறோம். படிதிருக்கிறோம்.
"1968 மொழிப் போராட்டத்தின்போது, அன்றைய முதல்வர் அண்ணா மாணவர்களுடன் ஐந்து இரவுகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது நினைவுக்கு வருகிறது." என்று 24.01.2017 இந்து தமிழ் நாளிதழில் திரு சமஸ் குறிப்பிட்டுள்ளார்.

இப்போது ஏன் அப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றிருக்கக் கூடாது?         அப்படி நடந்திருந்தால் ஆளுவோருக்கும் பெருமை கிடைத்திருக்கும். ஒரு வேளை ஆளுவோர் போராட்டத்தை அவ்வாறு முடிக்க விரும்பாமல் வேறு வழியில் முடிக்கத் திட்டமிட்டார்களோ என்னவோ?

ஆனால் ஒன்று நிச்சயம். இந்தப் போராட்டம் நிச்சயமாக வரும் காலத்தில் தமிழகத்தில் ஒரு புதிய வரலாற்றை எழுதும்.

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய போராட்டம் மகோன்னதமானது. இந்தப் போராட்ட காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பதே நமக்குக் கிடைத்த பெருமை.

-தொடரும்-
வாழ்த்தி
வரவேற்கிறோம்

ஈரோடு மாவட்டத்த்தில்
ஜனவரி 2017ல்
3 தோழிய்ர்கள்
14 தோழர்கள் என
17 பேர் நமது NFTE இயக்கத்தில்
இணைந்துள்ளனர்.

தாய்ச் சங்கத்தில்
இணைந்த
அனைவரையும்
வாழ்த்தி
வரவேற்கிறோம்.

Friday 20 January 2017

ஈரோடு மாவட்டத்தில்..

20.01.2017 அன்று
சங்க வேற்பாடு இன்றி...
சங்கத்தின் பதாகைகள் இல்லாமல்....
பி.எஸ்.என்.எல் பதாகையை மட்டும் கையில் ஏந்தி
ஈரோடு மாவட்டம் முழுமையும்
பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் என்ற அடிப்படையில் ஊர்வலமாகச் சென்று போராடும்

மானவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
எழுந்தது காண்

இளைஞர் படை

ஜல்லிக்கட்டு போராட்டக்களம் மனதுக்கு மகிழ்வையும் ஆறுதலையும் உருவாக்கியுள்ளது.

ஆள்வோரின் அக்கறையற்ற அவலநிலையால் சாதாரண ஏழை எளிய மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகியுள்ள நிலையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க எழுச்சிமிகு போராட்டம் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டுக்கு  போராட்டம் எனத் துவங்கி  அவர்கள் மக்களின் பல்வேறு பிரச்னைகள் குறித்தும் பேசுகின்றனர்.

விவசாயம், குடிநீர்ப் பிரச்னை, அந்நிய நாடுகளால் ஏற்பட்டுள்ள பிரச்னைகள்  , உலகமயமாக்கலின் சதி, பணமதிப்பு நீக்கம் என பல்வேறு பிரச்னைகள் குறித்தும் அவர்கள் தெளிவாகப் பேசுகின்றனர்.

மத்தியிலும், மாநிலத்திலும்ஆள்வோருக்கு  இது ஒரு எச்சரிக்கை தரும் போராட்டமாக அமைந்துள்ளது.

எதிர்காலத்திற்கு இது பெரும் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. 

Wednesday 18 January 2017

தோழர் ஜீவா
நினைவு தினம்
ஜனவரி 18

இன்றைய சூழ்நிலையைச் சற்றெ கவனித்தால்,

தோழர் ஜீவா என்ற மாபெரும் மனிதன்,
ஜாதிக்கொடுமையை எதிர்த்தும்,
இந்து தர்மம் என்ற பெயரில் இழைக்கப்பட்ட கொடுமைகளை எதிர்த்தும், ஆளுவோரின் அடக்குமுறையை எதிர்த்தும் போராடிய போராளியாக வாழ்ந்த வாழ்க்கை ஒரு வரலாறு.

சமூகம், அரசியல், இலக்கியம், தொழிற்சங்கம் என பல்வேறு தளங்களில் ஒரு உன்னத மார்க்சியவாதியாகப் பணியாற்றியவர்  தோழர் ஜீவா.

அவரது வாழ்க்கை இன்னும் பல ஆண்டுகளுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Tuesday 17 January 2017

மக்கள் திலகத்துடன்

சில வினாடிகள்


1967
சட்டமன்றத் தேர்தலில் சங்ககிரி தொகுதியில் போட்டியிட்டு வென்ற திரு நல்லமுத்து அவர்கள் காலமானதையொட்டி ஒரு இடைத்தேர்தல் வந்தது.

தி.மு.கசார்ப்பில் போட்டியிட்ட திரு வீரமணி அவர்களுக்குவாக்குக் கேட்க மக்கள் திலகம் சங்ககிரி வந்தார்.

நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனது ஆசிரியர் ஒருவருடன் சென்று மக்கள் திலக்த்தைப் பார்த்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. உடன் கலைஞரும் இருந்தார்.

ஒரு விதமான பரவச நிலையில் மக்கள் திலகத்துக்கு வணக்கம் சொன்னேன். எனது ஆசிரியர் என்னை "இவன்தான் எங்கள் பள்ளியின் தமிழ் மன்றச் செயலாளர்" என அறிமுகப்படுத்தினார்.

"என்ன படிக்கிறாய்" என கேட்டார்.

நான் "ஆறாம் வகுப்பு படிக்கிறேன்" என்றேன் பவ்யமாக.

"ஆறாம் வகுப்பு படிக்கும் போதே தமிழ மன்றச் செயலாளரா? என எனது ஆசிரியரைப் பார்த்து வினவினார்.

"தமிழ் நன்றாகப் படிப்பான். தமிழ் நன்றாகப் பேசுவான். கையெழுத்தும் நன்றாக இருக்கும். ஆகவே இவனை சிறப்பாக முன்னேற்றும் எண்ணத்துடன் தலைமை ஆசிரியர்  இவனை அந்தப் பொறுப்புக்குத் தேர்வு செய்தார்" என்றார்.

உடனே அவர் என்னைப் பார்த்து "நல்லாப் படிக்கணும். உன்னால முடிஞ்சதைப் பிறருக்குச் செய்யணும்" என்றார்.

"சரீங்க  JB சார்'" என்றேன்.
(JB என்பது அன்பே வா படத்தில் அவரது பெயர்.

"சினிமாவெல்லாம் பார்பாயா"  என்றார்.

நான் "எப்பவாவது பார்ப்பேன்"
என்றேண்.

அதற்குள் ஆசிரியர் அவருக்கு வணக்கம் சொல்லி என்னை அவ்விடத்திலிருந்து அழைத்துச் சென்றார்.

உன்னிடம் இத்தனை வினாடிகள் அவர் பேசியது மிகப் பெரிய வாய்ப்பு என்று முதுகில் தட்டினார்.

கலைஞரையும் சந்தித்தோம். வணக்கம். சொன்னோம். அவர் எனது முதுகில் தட்டிக் கொடுத்தார்.

அதற்குப் பிறகு கலைஞரை இரண்டு முறை சந்திக்கவும் உரையாடவும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால்  மக்கள்  திலகத்தைச் சந்திக்கும் வாய்ப்பு அந்த ஒரே முறைதான்.

எனது ஆசிரியர் 2015ல் தனது 81ஆவது வயதில் காலமானார். அவர் உடல்ந்லம் சரியில்லை என அறிந்து அவரைக் கடைசியாக சந்தித்த போது அவர் இதை நினைவு கூர்ந்தார். "எனக்கும் சற்று நிம்மதீடா குமார். அபர் சொன்னவாறே நீயும் உன்னால் முடிந்ததைச் செய்துள்ளாய்" என்றார். எனது அரசியல் கொள்கை நிலைபாடு குறித்தும் அவர் என்னுடன் உரையாடினார் எனது ஆசிரியர்.

இப்பொழுதும் உணர்கிறேன்.

மற்றவர்களை வசீகரிக்கும் சக்தி மக்கள் திலகத்திடம் இருந்தது.

அதனால்தான் இன்றும் அவர் மக்கள் மனதில் நிற்கிறார்.

மக்கள்  திலகத்தின் நூற்றாண்டு தினம் இன்று. ஜனவரி 17.

Monday 16 January 2017

குவியும் சொத்து
இந்தியாவில் உள்ள 57 பணக்காரர்களிடம் மட்டும், நாட்டில் உள்ள மொத்த சொத்தில் 70 சதவீதம் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உலக பொருளாதார கூட்டமைப்பின் கீழ் இயங்கும் ஆக்ஸ்பம் (Oxfam) என்ற அமைப்பு வெளியிட்டுட்டுள்ள ஆய்வில், இந்தியாவில் ஒரு சதவீதம் செல்வந்தர்களிடம் நாட்டில் உள்ள மொத்தம் செல்வத்தில் 58 சதவீதம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்தியாவில் முகேஷ் அம்பானி, திலிப் சங்கவி, அசிம் பிரேம்ஜி உள்ளிட்ட 84 செல்வந்தர்கள் உள்ளனர். இவர்களிடம் உள்ள மொத்த சொத்த மதிப்பு 248 பில்லியன் டாலர். மேலும் அடுத்த 20 ஆண்டுகளில், 500 பேரிடம் 2.1 ட்ரில்லயன் டாலர்களுக்கும் அதிகமான சொத்துக்கள் இருக்கும். இது இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியை விட அதிகம்.


இதனால் இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள ஏழைகள், மேலும் ஏழைகளாக மாறுவார்கள். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சீனா, இந்தோனேசியா, இந்தியா, வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் உள்ள 10 சதவீதம் பணக்காரர்களின் வருமானம் 15 சதவீதத்திற்கு அதிகமாக உயர்ந்துள்ளது. அதே சமயம் 10 சதவீத ஏழைகளின் வருமானம் 15 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது. 

Friday 13 January 2017

னைவருக்கும்
இனிய
பொங்கல்

நல்வாழ்த்துக்கள்



விதை விதைப்பவனுக்கும்
விதை விதைப்பவனை நம்பி வாழ்பவனுக்கும்
விண்
மழையையும்
மகிழ்வையும்
தரட்டும் என
வேண்டுவோம்.

மத்திய சங்கச் செய்திகள்
2014-15 ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு இன்னும் போனஸ் ரூபாய் 3000 வழங்கப்படவில்லை. இதை உடனே வழங்குமாறு நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.

2014-15 ஆம் ஆண்டுக்கான  போனஸ் ரூபாய் 3000  TERM CELL பகுதியில் பணிபுரிவோருக்கு இன்னும் வழங்கப்படவில்லை. இதை உடனே வழங்குமாறு நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.

BSNL நிறுவனத்தின்  "இன்ஸ்பெக்ஷன் குவார்ட்டர்ஸ்களை" நல்ல முறையில் பராமரிப்பதைக் கண்காணிக்க மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் நிதி, சிவில், எலக்ட்ரிகல் சம்பந்தமான அதிகாரிகளை உள்ள்டக்கிய ஒரு குழுவை நியமிக்க வேண்டும் என கார்ப்பரேட் அலுவலகம் தலைமைப் பொது மேலாலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் "இன்ஸ்பெக்ஷன் குவார்ட்டர்ஸ்களை"
யாருக்கும் சொல்லாமல்
திடீரென "இன்ஸ்பெக்ஷன்"

செய்ய வேண்டும் எனவும் உத்தரவு 

மகிழ்ச்சியும்

ஆதங்கமும்

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுமையும் மாணவர்களும், இளைஞர்களும் ஆர்வத்துடனும் கோபத்துடனும் போராடி வருகின்றனர்.

தமிழகத்தின் பாரம்பரியம், கலாச்சாரம் காக்கவும், மண்ணின் மாட்டுக்காளைகளைக் காக்கவும் அவர்கள் எழுச்சியுடன் போராடு வதைக் காணும்போது அளவற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

மண்ணின் அடையாளம் மரித்துப் போகாமல் காக்க அவர்களின் உணர்வு பூர்வமான போராட்டம் உள்ள்த்தில் உவகையை  ஊற்றாகப் பெருக வைக்கிறது.

ஆனாலும்....


இப்படிப்பட்ட கோபம் அவர்களின் எதிர்கால வாழ்வைக் கேள்விக்குறியாக்கும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக கோபம பொங்கி எழவில்லையே என
எண்ணும் போது மனம் வருந்துகிறது.

மருத்துவக் கல்விக்கு இந்த ஆண்டு முதலும் பொறியியல் கல்விக்கு அடுத்த ஆண்டு முதலும் பொதுநுழைவுத் தேர்வு என்பது பெரு நகரம் முதல் சிறு கிராமம வரை சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவச் செல்வங்களின் வாய்ப்பு பறி போய் விடுமே என்ற பதைபதைப்பும்கவலையும் அவர்களுக்கு ஏற்படாததும், அதற்காக போராடாததும் வருத்தமளிக்கிறது.

மாண்வச் செல்வங்களின் பெற்றோர் பணமதிப்பு நீக்கத்தால் படும் அவதி குறித்து அக்கறையுடன் ஆர்ப்பரித்து அவர்கள் போராடாமல் இருப்பது ஏமாற்ரத்தையும் வருத்தத்தையும் தருகிறது.

இருப்பினும் அவர்களின் போராட்டம் ஒரு வகையில் மகிழ்ச்சியே.

ஏனெனில் அநீதி கண்டு அவர்கள் இனி வரும் காலத்தில் போராடுவர்கள் என்பது நம் நம்பிக்கை.

Thursday 12 January 2017

ஜனவரி 12
விவேகானந்தர் பிறந்த தினம்

இளையோர் தினம்


"கீழ்ப்படியக் கற்றுக் கொள்.
கட்டளையிடும் பதவி தானாக
வந்து உன்னை அடையும்"

"உன்னால் சாதிக்க முடியாத
காரியம் என்று ஒன்று இருப்பதாக
நினைக்காதே"  -விவேகானந்தர்

மதம், இனம், நாடு, மொழிகளைத்களைத் தாண்டி மனிதர்களை நேசிக்க முடியுமென்று உணர்த்தி வாழ்ந்த மனிதர். 

Wednesday 11 January 2017

மோடி அறிவிப்பு தெரியாதாம்...

ரூ.5 லட்சம் பழைய நோட்டு

 வைத்திருந்த பாட்டி




கேரளாவைச் சேர்ந்த சதி என்ற 75வயது பாட்டி, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதை காலதாமதாக தெரிந்துக்கொண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே வரப்புழா என்னும் சிற்றூரில் சதி(75) என்பவர் தனியாக வசித்து வருகிறார். அவரது வீட்டில் மின்சாரம், ரெடியோ என எந்த பொருட்களும் இல்லை. அவருக்கு தேவையான பொருட்களை வாங்க எப்போதவதுதான் வெளியே செல்வார். எல்லா நேரங்களிலும் வீட்டிலேதான் இருப்பார். 

அண்மையில் காய்கறி வாங்க கடைக்கு சென்றுள்ளார். கடைக்காரரிடம் 500 ரூபாய் நோட்டை நீட்டியுள்ளார். கடைக்காரர் ரூபாய் நோட்டு செல்லாது என்று கூறியுள்ளார். உடனே அதிர்ச்சி அடைந்த பாட்டி, ரூபாய் நோட்டு புதுசா தானே இருக்கு, கிழியவும் இல்லை ஏன் செல்லாது? என்று கேட்டுள்ளார்.

கடைக்காரர் மூலம் மோடி ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது பற்றி தெரிய வந்துள்ளது. இதையடுத்து பாட்டி தான் வீட்டில் வைத்திருந்த பணத்தை அவசரமாக வங்கிக்கு எடுத்துச் சென்றுள்ளார். பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற கால்கெடு முடிந்துவிட்டதால் வங்கி அதிகாரிகள் ரூபாய் நோட்டுகளை மாற்ற மறுப்பு தெரிவித்து விட்டனர்.

இதனால் வங்கி வாசலில் நின்றுக்கொண்டு கூச்சலிட்டுள்ளார். இதுகுறித்து வங்கி அதிகாரிகள், அவர் எங்கள் வங்கியில் தான் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். அவர் எடுத்து வந்த சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டும் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

சதி பாட்டி குறித்து அக்கம்பக்கம் வசிப்பவர்கள் கூறியதாவது:-

அவர் எப்போதும் வீட்டிலேயே தான் இருப்பார். அவர் வீட்டு அருகில் எங்களை நிற்க விட மாட்டார். இவ்வளவு கால வருடங்களில் எங்களிடம் இரண்டு அல்லது மூன்று முறை தான் பேசியிருப்பார். ரூபாய் நோட்டு விவகாரம் அவருக்கு தெரியும் என்று நினைத்தோம். இதுகுறித்து அவரிடம் நாங்கள் எதுவும் சொல்லவில்லை. இவ்வளவு தொகை பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பார் என்று எங்களுக்கு தேரியாது, என்றனர்.

அவரின் நிலைமை அறிந்த ஊர் பஞ்சாயத்து கமிட்டி, ரிசர்வ் வங்கியை நாட உதவி செய்து வருகிறது. யாரையும் எளிதில் நம்பாத பாட்டி, இந்த உதவியையும் வேண்டாம் என்று மறுத்துள்ளார். 
இரண்டாயிரம் ரூபாய்

01.01.2017 முதல் பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும். இதற்கான கோரிக்கையை பிப்ரவரி 13,14 தேதிகளில் கோழிக்கோட்டில் நடைபெறவுள்ள் நமது இயக்கத்தின் மத்திய செயற்குழுவில் முன்வைத்து அதைப் பெறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்"  

தோழர் மதிவாணன் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து.
ஜனவரி 11
லால் பகதூர் சாஸ்திரி

பிறந்த தினம்


"ஒரு ஆட்சி என்பது அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து செயல்படுவதாக இருக்க வேண்டும்.

அப்பொழுதுதான் நமது இலட்சியங்க்களையும் குறிக்கோள்களையும் அடைய முடியும்.

மக்களே இறுதித் தீர்ப்பளிக்கும் சக்தி படைத்தவர்கள்"-லால் பகதூர் சாஸ்திரி

Saturday 7 January 2017

தோழர் ஞானையா 97


தோழர் ஞானையா அவர்களுக்கு இன்று பிறந்த நாள்.
அந்தத் தோழருக்கு நமது உள்ளம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

NFPTE சம்மேளனத்தின் பொதுச் செயலராகப் பணியாற்றி பல பிரச்னைகளுக்குத் தீர்வு கண்ட தோழர். NFPTE சம்மேளனத்தில் பிளவு ஏற்பட்ட போது சிக்கல்களுக்குத் தீர்வு கண்டு மீண்டும் ஒரு மனதாக பொதுச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆழந்த அறிவாற்றலுடன் நிறைய, பயனுள்ள புத்தகங்களை எழுதியுள்ளார்.


97 வயது. வயதின் காரணமாக இயற்கையான உடல் சோர்வு இருப்பினும் சிந்தனையில் இன்னும் இளைஞனாக விளங்குகிறார். சிறந்த அரசியமல் மற்றும் சமூகச் சிந்தனையாளரான அவர் இன்னும் பல ஆண்டுகள் பயனுள்ள வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.

Thursday 5 January 2017

மலையென வளரும்

          மாமனிதனின் புகழ்




குன்றாத புகழுக்குச் சொந்தக்காரர் குப்தா.

தொலைத்தொடர்பு ஊழியர்களுக்குத் தொண்டால் பொழுதளந்த தோழன் குப்தா.

சமூக சிந்தனையோடு சாதனைகள் படைத்திட்ட பாட்டாளி வர்ககத்த் தோழன் குப்தா.

லட்சக்கணக்கான தோழர்களுக்கு சமூகத்தில் ஏற்றம் தந்து வாழ்வினில் மறுமலர்ச்சியை உருவாக்கிய தோழன் குப்தா..

ஓய்வீதியம் என்றாலே ஓ.பி. குப்தா மட்டுமே நினைவுக்கு வரும் வகையில் சாதனை நிகழ்த்திய தோழன்.


தோழன் குப்தா தொழிலாளி நலன் குறித்து சிந்திப்பதை இயற்கை சிதைத்த நாள் இன்று