NFTECHQ

Wednesday 31 January 2018

பல்லாண்டு வாழ்க
31.01.2018 அன்று பணி நிறைவு பெறும்
தோழர் N.ஆனந்தராஜு   OS
தோழர் S.சண்முகம் TT
தோழர் V.பன்னீர்செல்வம் TT
ஆகியோர் நலமுடனும்
மகிழ்வுடனும்

பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

Tuesday 30 January 2018

ஜனவரி 30
இன்று மகாத்மா காந்தியடிகள்
மதவாதிகள் தூண்டுதலால்
மாபாவி கோட்சேவால்
படுகொலை செய்யப்பட்ட நாள்.
அண்ணலைக் கொன்றது நாதுரோம் கோட்சேவின் குண்டுகள் இல்லை. எங்கிருந்தோ பாய்ந்த் நான்காவது குண்டுதான் கொன்றது என்று இன்றும் நீதிமன்றத்தில் வாதாடும் பேர்வழிகள்  நடமாடும் காலமிது.
அப்படிப்பட்டவ்ர்களின் ஆட்சியில்தான் நியாயம் கேட்டு இன்று போராட்டத்தை துவக்குகிறோம்.
சத்தியாகிரகம் சாதிக்கும் என்ற நம்பிக்கையில் களம் காண்கிறோம்.

நமது மனவலிமையும் அதன் வழியில் செயல் வலிமையும் வெற்றியைத் தரும் என்ற உறுதியுடன் களம் காண்போம்.
சத்தியாகிரகம்,
விதிப்படிவேலை
என்னும் இரு கருவிகளுடன் களம் காண்போம்.
காரியங்கள் பல செய்வோம்.

கள்த்தில் வெற்றி கான்போம்.

Saturday 27 January 2018

போராட்டமும் கோரிக்கைகளும்

போராட்ட இயக்கங்கள்

30.01.2018 முதல் தொடர்ந்து ஐந்து நாட்கள் சத்தியாகிரகம்

30.01.2018 முதல் காலவரையற்ற விதிப்படி வேலை

23.02.2018 அன்று டெல்லியில் DOT அலுவலகமான 
சஞ்சார் பவன் நோக்கி பேரணி

கோரிக்கைகள்

1. மூன்றாவது ஊதிய மாற்றம்
 (a)01.01.2017 முதல் 15 சதவிகித உயர்வுடன் 
ஊதிய மற்றத்தை அமல்படுத்து
(b) 01.01.2017 முதல் ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்து
(c) இரண்டாவது ஊதிய மாற்றத்தில் விடுபட்ட
பிரச்னைகளுக்குத் தீர்வை உருவாக்கு
2. துணை டவர் நிறுவனத்தை உருவாக்கும் 
முடிவைக் கைவிடு
3.ஓய்வு  பெறும் வயது 60 என்பதை 58 ஆக குறைக்காதேவிருப்ப ஓய்வின் மூலம் ஊழியர்களைக் 
குறைக்கும் முயற்சியைக் கைவிடு.

தோழர்களே தோழியர்களே

மேற்கண்ட கோரிக்கைகளை 
வென்றெடுக்க உறுதியுடன் போராடுவோம்.
இறுதி வெற்றி நமதே
வாழ்த்துக்கள்

நாளை 28.01.2018 அன்று நடைபெறும் JE தேர்வில் பங்க்கேற்க்கும் தோழர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
வாழ்த்துக்கள்

சிறப்பான முறையில் பணிசெய்தமைக்காக ஈரோடு எக்ஸ்டர்னல் பகுதியைச் சேர்ந்த கீழ்க்கண்ட டெலிகாம் டெக்னீசியன் தோழர்கள் நிர்வாகத்தால் பாராட்டப்படு கெளரவிக்கப்பட்டுள்ளனர்.

தோழர் G.பூபாலன்
தோழர் E.V.ராஜேந்திரன்
தோழர் R.யுவராஜ்சிங்
தோழர் V.மணியன்
இப்படிப்பட்ட அணுகுமுறையைக் கையாளும் நிர்வாகத்தைப் பாராட்டுகிறோம்.
பாராட்டப்பட்டு, கெளரவிக்கப்பட்ட தோழர்களுக்கு மாவட்டச் சங்கம் சார்பாக உள்ளம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
நமது வேண்டுகோள்
சிறப்பாகப் பணி செய்வோரைத் தேர்வு செய்யும்போது  விருப்பு வெறுப்பற்ற அணுகுமுறையைக் கையாள வேண்டும்.
உண்மையான கணக்கீடுகளை ஒப்பிட்டு தேர்வு முறை அமைவதே பொருத்தமாக இருக்கும்.
அதுவே நிர்வாகத்துக்கும் பாராட்டு பெறூவோருக்கும் கிடைக்கும் மரியாதையாக அமையும்.
மற்ற ஊழியர்களுக்கும் ஊக்கம் தருவதாக அமையும்.

மேலும் மாவட்டம் முழுமையும் உள்ள அனைத்து கேடர்களிலும் உள்ள ஊழியர்களின் பணிகளையும் கணக்கில் கொள்வது மேலும் சிறப்பைத் தரும்.

Friday 26 January 2018

குடியரசு தின வாழ்த்துக்கள்



ந்திய தேசத்தின் 69 ஆம் குடியரசு தினம் இன்று.
சுதந்திரம் எவ்வள்வு முக்கியமோ அதற்கு இணையானது குடியரசும். மக்களின் ஆட்சி என்பதே குடியரசின் மகத்துவம். மக்கள் ஆட்சி என்னும் ஜனநாயக முறைப்படி 1952ல் நமது நாட்டில் முதல் தேர்தல் நடைபெற்றது.
71 ஆண்டுகளாக ஒன்றுபட்ட சுதந்திர நாடாகவும்,
66 ஆண்டு களாக மக்கள் ஆட்சி என்னும் ஜனநாயக மாண்பும் காக்கப்பட்டு வருவது பெருமைக்குரியது.
இப்பெருமைகளைத் தொடர்ந்து காப்போம்.
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்
உயர்வு தந்த தளர்வு
பஸ் கட்டண உயர்வுக்கு பிறகு, ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து போக்குவரத்து அதிகாரி கள் கூறும்போது, “கட்டண உயர்வுக்கு முன்பு அரசு போக்குவரத்து கழகங்களில் தினமும் சராசரியாக 2 கோடியே 10 லட்சம் பேர் பயணம் செய்தனர். வசூல் தொகையும் ரூ.21 கோடி வரை கிடைத்தது. கட்டண உயர்வுக்கு பிறகு சுமார் ரூ.35 கோடி முதல் ரூ.38 கோடி வரையில் வசூலாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தினசரி வசூல் ரூ.28 கோடியாக மட்டுமே உயர்ந்துள்ளது. பயணிகளின் மொத்த எண்ணிக்கையும் ஒரு கோடியே 85 லட்சமாக குறைந்து விட்டது. சுமார் 25 லட்சம் பேர் அரசு பஸ்களில் பயணம் செய்வது குறைந்துள்ளது. இவர்கள் ரயில், தனியார், ஆம்னி பஸ் பயணத்துக்கு மாறியிருக்கலாம்’’ என்றனர்.
மேலும் சில அதிகாரிகள் கூறும்போது, “பஸ் கட்டணம் உயரும்போதெல்லாம், பயணி கள் எண்ணிக்கை கணிசமாக குறைவது வாடிக்கையான ஒன்றுதான். அதிக கட்டணம் உயர்வு, சீசன் இல்லாதது உள்ளிட்டவை இதற்கு காரணமாகும். இது நிரந்தரமானதல்ல. அதேநேரத்தில் அரசு போக்குவரத்து கழகங்களை உடனடியாக சீரமைத்து, தரமான சேவையை வழங்காவிட்டால் வருவாய் இழப்பு என்பது நிரந்தரமாகிவிடும்’’ என்றனர்.
தனியார் பஸ்கள்

இதுதொடர்பாக ஏஐடியுசி பொதுச்செயலாளர் ஜெ.லட்சுமணன் கூறும்போது, ‘‘ஒரே நேரத்தில் அதிகளவில் கட்டணம் உயர்த்தப்பட்டதால், குறிப்பிட்ட சதவீத மக்கள் ரயில், தனியார் பஸ் மற்றும் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்த தொடங்கி விட்டனர். சென்னையை காட்டிலும், தமிழகம் முழுவதும் இயக்கப்படும் 5 ஆயிரம் தனியார் நகரப் பஸ்களில் அரசு பஸ்களை விட குறைவாகவே கட்டணம் வசூலிப்பதால், அதிகளவிலான மக்கள் அதில் பயணம் செய்கின்றனர். எனவே, மக்களிடம் அரசு போக்குவரத்து கழகங்கள் நம்பக தன்மையை ஏற்படுத்த உடனடி யாக புதிய பஸ்களை வாங்கி, சிறப்பான சேவையை அளிக்க வேண்டும்’’ என்றார்.
நன்றி இந்து தமிழ்

Thursday 25 January 2018

9 மணி நேரத்தில் ரயில் நிலையம் அமைத்து அசத்தல்: சீனாவில் அதிசய சாதனை


Wednesday 24 January 2018

மத்திய சங்கங்களின் அறைகூவல்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து நவம்பர் 2017ல் நடைபெற்ற நாடாளுமன்ற முர்றுகைப் போராட்டத்தின் தொடர்ச்சியாக
25.01.2018 அன்று நாடு முழுமையும் மறியல் போராட்டம்.

25.01.2018
காலை 10 மணிக்கு
ஈரோடு  பேருந்து நிலையத்தில் அனைத்து
மத்திய சங்க ங்களின் மறியல் போராட்டம்.

வாரீர் தோழர்களே

Tuesday 23 January 2018

வெள்ளிக்கிழமை பிற்பகல்தான் அதற்கு சரியான நேரமாம்

மக்களே உஷார்


 எந்த காரணத்தைக் கொண்டும் உங்கள் ஏடிஎம் எண்ணைக் கேட்க மாட்டோம், ஓடிபி எண்ணைக் கேட்க மாட்டோம் என்று வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளிடம் இருந்து குறுஞ்செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஆனாலும், வங்கி மோசடி குறித்த செய்திகள் ஒருநாளும் தவறுவதில்லை. விதவிதமாக மோசடிச் செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
இதில் மிகவும் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த ஜெயலட்சுமி (71) என்ற மூதாட்டி, வங்கி மோசடியில் ரூ.90 ஆயிரத்தை இழந்த அதிர்ச்சியில் மரணம் அடைந்ததுதான்.
வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறிய மோசடி நபர்கள், ஜெயலட்சுமியின் ஏடிஎம் கார்டின் பயன்பாட்டு தேதி முதிர்வடைந்துவிட்டதாகவும், அட்டை எண்ணைக் கூறினால் அதனை புதுப்பித்துக் கொடுப்பதாகக் கூறி, ஏடிஎம் கார்டின் எண் மற்றும் ஓடிபி எண்ணையும் பெற்று அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.90 ஆயிரத்தை கொள்ளையடித்துள்ளனர். சிறுக சிறுக சேமித்த தொகையை இழந்த அதிர்ச்சியில் ஜெயலட்சுமி மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
பண மோசடியில் பணத்தை இழந்த எத்தனையோ குடும்பங்கள் வாழ்க்கையை இழந்திருந்தாலும், முதல் முறையாக ஒரு உயிரும் பறிபோயுள்ளது.
இது குறித்து பொதுத் துறை வங்கியின் மேலாளர் ஜெயராஜ் கூறுகையில், சமீபகாலமாக செல்போன் மூலமாக வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் கொள்ளையடிக்கப்படுவது அதிகமாக நடக்கிறது. எனவேதான், புதிதாக ஏடிஎம் அட்டையைப் பெறும் அனைத்து வாடிக்கையாளர்களிடமும், எந்த காரணத்தைக் கொண்டும் ஏடிஎம் அட்டையின் எண்ணையோ, ஓடிபி எண்ணையோ யாருக்கும் தெரிவிக்கக் கூடாது என்று வங்கி அதிகாரிகள் அறிவுறுத்துகிறார்கள்.
இதுபோன்ற மோசடிகள் குறித்தும் அவர் சில குறிப்புகளை எடுத்துரைத்தார்.
அதாவது, வழக்கமாக வங்கிகளிடம் இருந்து அழைப்பு வந்தால் அது இலவச அழைப்பு எனப்படும் டோல் ஃப்ரீ எண்களில் இருந்தே வரும். ஆனால், இந்த மோசடியாளர்களின் அழைப்பு டோல் ஃப்ரீ எண்களைப் போல் அல்லாமல், சாதாரண செல்போன் எண்களில் இருந்துதான் வரும்.
அடுத்து, வெள்ளிக்கிழமை பிற்பகலில்தான் இதுபோன்ற மோசடி செல்போன் அழைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுவும் குறிப்பாக பிற்பகல் 2 மணி முதல் 3 மணிக்குள். ஏன் என்றால், வங்கிக் கணக்கு பற்றிய விவரத்தை இதுபோன்ற மோசடியாளர்களிடம் பகிர்ந்து கொள்ளும் அப்பாவிகள், தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்து உடனடியாக வங்கிக்குச் சென்றால் கூட, வங்கி மூடப்பட்டிருக்கும். அடுத்த இரண்டு நாட்களுக்கு வங்கி விடுமுறையாக இருப்பதால், வாடிக்கையாளர் வங்கியைத் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.
அதேபோல இதுபோன்ற மோசடிகளைப் பார்த்தால் பாய்ண்ட் - ஆஃப் - ஸ்கேல் எனப்படும் POS என்ற பரிமாற்றம் மூலமாகத்தான் பணம் களவாடப்பட்டிருக்கும். பாய்ண்ட் - ஆஃப் - ஸ்கேல் மூலம் பணம் கொள்ளையடிக்கப்பட்டால் அதனை மீட்பது என்பது முடியாத காரியம். எனவே, இதுபோன்ற வங்கி மோசடியில் இருந்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே தற்காத்துக் கொள்ள முடியும் என்கிறார் ஜெயராஜ்.

நன்றி :  தினமணி
போராட்ட விளக்கக் கூட்டம்

30.01.2018 முதல் நடைபெறவுள்ள
சத்தியாகிரகம் மற்றும்
விதிப்படி வேலை குறித்து
அனைத்துச் சங்கத் தலைவர்கள்
 பங்கேற்கும்
விளக்கக் கூட்டம்.

இடம் பொதுமேலாளர் அலுவலகம்
நாள் 25.01.2018
காலம் மாலை 4 மணி

அனைவரும் வருக.
ஜனவரி  23
நேதாஜி சுபாஷ் சந்ர போஸ்

பிறந்த தினம் இன்று
வாழ்த்துகிறொம்
வரவேற்கிறோம்

ஈரோடு மாவட்டத்தில் மற்ற சங்கங்களிலிருந்து விலகி நமது NFTE பேரியக்கத்தில் பத்து தோழர்கள் ஜனவ்ரி 2018ல் இணைந்துள்ளனர்.

அந்த பத்து தோழர்களையும் வாழ்த்தி வரவேற்கிறோம்.


இதற்கான முயற்சியில் ஈடுபட்ட கிளைச்செயலர்களையும்                  மாவட்டச் சங்க நிர்வாகிகளையும் பாராட்டுகிறோம்.

Monday 22 January 2018

விலைவாசிப்படி உயர்வு


01.01.2018 முதல் 2.6 சத விலைவாசிப்படி உயர்வுக்கான உத்தரவை BSNL நிறுவனம் வெளியிட்டுள் ளது. ஆக 01.01.2018 முதல் மொத்த விலைவாசிப்படி 126.9 சதவிகிதமாகும்.

Thursday 18 January 2018

ஜனவரி 18
தோழர் உயிரின்பன்
 நினைவு தினம்

சுதந்திரப் போராட்ட வீரர்.
கந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்.
பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளின் மீது தாக்கம் கொண்டவர்.
பெரியாரின் ஆலோசனையை ஏற்று "நான் ஏன் நாத்திகன் ஆனேன்" என்று பகத்சிங் பற்றிய நூலை எழுதியவர்.
காந்தியம்,
காங்கிரஸ்,
சுயமரியாதை இயக்கம்
இப்படிப்பட்ட இய்க்கங்கள் மீது ஈடுபாடு கொண்டவர்.
உடன் நின்ற தோழர் ராமமூர்த்தியையும் இணைத்து
ஒன்றுபட்ட பொதுவுடைமை இயக்கத்தில்
இணைந்தார்.

தமிழ்மொழி மீது எல்லையற்ற காதல் கொண்டவர்.

இலக்கியங்கள் மீது பற்றும் அவை குறித்த அறிவும் பெற்றவர்.

பொதுவுடைமை இயக்கக் கூட்டங்க்களில் முதன்முதலில் இலக்கியம் பேசியவர்.

தொழிலாளர்களுக்காக,
விவசாயிகளுக்காக்,
விவசாயத் தொழிலாளர்களுக்காக
பல்வேறு போராட்டங்களை நடத்தியவர்.

அடக்குமுறைகளுக்கு அஞ்சாத போராளி.

ஏறத்தாழ பத்தாண்டுகள் சிறையில் இருந்தவர்.

சுரண்டலுக்கு எதிராக போராடியவர்.

ஆயிரக்கணக்கானோருக்கு  மார்க்சியம் கற்றுத் தந்த ஆசான்.

மார்க்சிய வழியில் போராடும் முறைகளைதொழிலாளிகளுகுக் கற்றுத் தந்தார்.

எளிமைக்கு முதல் உதாரணமாய்த் திகழ்ந்தவர்.
18.01.1963ல் சென்னை தாம்பரத்தில் உயிரின்பனின்உயிர் பிரிந்த்து.
அவரது இறுதி ஊர்வலத்தில் இரண்டு லட்சத்திற்கு  மேல் பொதுமக்கள் பங்கேற்றனர்.

தமிழ்மொழியின் மீதிருந்த காதலால் சமஸ்கிருதப் பெயரான ஜீவானந்தம்  என்பதை "உயிரின்பன்"  என மாற்றிக் கொண்டார்.
உயிருள்ள வரை
உயிரின்பன் பாதையை

உள்ளத்தில் ஏந்தி வாழ்வோம்.

Wednesday 17 January 2018

சத்தியாகிரகம்

அரசின் பணிகளுக்கு ஒத்துழைக்காமல் இருப்பது,
அரசின் ஆணைகளை ஏற்க மறுப்பது,
அரசின் அடக்குமுறையை அமைதி வழியில் எதிர்கொள்வது,
நோக்கங்கள் நிறைவேறும் வரை உறுதி கொண்ட நெஞ்சோடு
அற வழியில் அமைதியாகப் போராடுவது  

இதுவே சத்தியசோதனையில் சத்தியாகிரகம் பற்றி அண்ணல் சொல்லியுள்ளதன் சுருக்கமான சாராம்சம்.


31.01.2018 முதல் BSNL   அனைத்து அமைப்புகளின் சத்தியாகிரகம் துவங்குகிறது.
ஜனவரி 17
எம்.ஜி.ஆர் பிறந்த தினம்

தமிழக அரசியலில்
தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிய,
ஏழை மக்களின் அன்பையும்
ஆதரவையும் பெற்ற
எம்.ஜி.ஆர்

பிறந்த தினம் இன்று.

Tuesday 16 January 2018

இரங்கல்
பத்திரிக்கையாளர்,
ஓவியர்,
நாடக ஆசிரியர்,
பதிப்பாளர்,
அரசியல் விமர்சகர்,
தனது கருத்தை எவ்விடத்திலும் துணிச்சலுடன் சொல்லும் ஆற்றல் படைத்தவர்
என பன்முகத்தன்மையாளராக வாழ்ந்த
திரு ஞாநி
மறைந்தார்.

அவரது மறைவுக்கு நமது ஆழ்ந்த இரங்கல்

Saturday 13 January 2018

இனிய
பொங்கல்

நல்வாழ்த்துக்கள்
ஜனவரி 13

தோழர் அஜாய்குமார் கோஷ்  நினைவு தினம்


ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராக  சிறப்பாக பணியாற்றிய தோழர் அஜய் குமார் கோஷ்  நினைவு தினம் இன்றூ.

Friday 12 January 2018

ஜனவரி 12
விவேகானந்தர் பிறந்த தினம்.


மதம், கடவுள், மனிதம் பற்றி விவேகானந்தர் சொன்ன கருத்துக்கள் இன்றைய சமூகமும், சமூகத்த்தை ஆளுபவர்களும்  மீண்டும் மீண்டும் அறிந்து புரிந்து நடப்பது சமூகத்துக்கு நன்மை விளைவிக்கும்.  

Thursday 11 January 2018

ஜனவரி 11
திருப்பூர் குமரன் நினைவு தினம்

சென்னிமலையில் பிறந்து
செங்குருதி தந்து
செய்தற்கரிய தியாகங்கள் செய்த
கொடிகாத்த குமரனின் நினைவு தினம் இன்று.

குமரனின் நினைவு தினத்தை அரசு சார்பில் ஆண்டு தோறும் அனுசரிக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
ஆனால் இன்று அத்தகைய நிகழ்வு எதையும் அரசு நடத்தவில்லை என சென்னிமலை மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.


குமரனின் தியாகம் போற்றுவோம்.

Tuesday 9 January 2018

அனைத்து சங்க அறைகூவல்

BSNL நிறுவனத்த்ன் அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களின் கூட்டம் 08.01.2018 அன்று டெல்லியில் FNTO சங்க அலுவலகத்தில் FNTO பொதுச்செயலாலர் தோழர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. கருத்து பரிமாற்றங்களுக்குப் பின்னர் கீழ்க்கண்ட முடிவுகள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

ஒரு மனதான முடிவுகள்

மகாத்மாவின் மறைவு தினமான ஜனவரி 30 அன்று (30.01.2018) அண்ணலின் சமாதியில் அனைத்துச் சங்கத் தலைவர்களும் அஞ்சலி  செலுத்துதல்.

அன்று முதலே ஐந்து நாட்கள் தொடர்ந்து சத்தியாகிரகம்.


30.01.2018 அண்ணல் காந்தியடிகள் வழியில்
அதிகாரிகளும் ஊழியர்களும் லா;அவரையற்ற ஒத்துழையாமை இயக்கம் மற்றும் விதிப்படி வேலை

28.02.2016 டெல்லியில் சஞ்சார் பவன் (DOT அலுவலகம்) முன்பு மாபெரும் முற்றுகைப் போராட்டம்.
ருவார காலத்திற்குள் அமைச்சரைச் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்துதல்.
தனிடவர் நிறுவன அமைப்பு பிரச்னையை சட்ட ரீதியாக அணுகுதல்

கோரிக்கைகள்

01.01.2017 முதல் மூன்றாவது ஊதிய மாற்றத்தை 15 சத உயர்வுடன் அமல்படுத்து.

01.01.2017 முதல் ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்து.

தனி டவர் நிறுவன முடிவைக் கைவிடு.

ஓய்வு பெறும் வயது 60 என்பதை 58 ஆகக் குறைக்கும் முயற்சியைக் கைவிடு.

ஒன்றுபட்டு போராடுவோம்.
ஓரணியாய் எழுவோம்.

வெற்றி பெறுவோம்.