உயர்வு தந்த தளர்வு
பஸ் கட்டண உயர்வுக்கு
பிறகு, ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து போக்குவரத்து அதிகாரி கள் கூறும்போது, “கட்டண
உயர்வுக்கு முன்பு அரசு போக்குவரத்து கழகங்களில் தினமும் சராசரியாக 2 கோடியே 10
லட்சம் பேர் பயணம் செய்தனர். வசூல் தொகையும் ரூ.21 கோடி வரை கிடைத்தது. கட்டண
உயர்வுக்கு பிறகு சுமார் ரூ.35 கோடி முதல் ரூ.38 கோடி வரையில் வசூலாகும் என
எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தினசரி வசூல் ரூ.28
கோடியாக மட்டுமே உயர்ந்துள்ளது. பயணிகளின் மொத்த எண்ணிக்கையும் ஒரு கோடியே 85
லட்சமாக குறைந்து விட்டது. சுமார் 25 லட்சம் பேர் அரசு பஸ்களில் பயணம் செய்வது
குறைந்துள்ளது. இவர்கள் ரயில், தனியார், ஆம்னி பஸ் பயணத்துக்கு மாறியிருக்கலாம்’’
என்றனர்.
மேலும் சில
அதிகாரிகள் கூறும்போது, “பஸ் கட்டணம் உயரும்போதெல்லாம், பயணி கள் எண்ணிக்கை
கணிசமாக குறைவது வாடிக்கையான ஒன்றுதான். அதிக கட்டணம் உயர்வு, சீசன் இல்லாதது
உள்ளிட்டவை இதற்கு காரணமாகும். இது நிரந்தரமானதல்ல. அதேநேரத்தில் அரசு
போக்குவரத்து கழகங்களை உடனடியாக சீரமைத்து, தரமான சேவையை வழங்காவிட்டால் வருவாய்
இழப்பு என்பது நிரந்தரமாகிவிடும்’’ என்றனர்.
தனியார் பஸ்கள்
நன்றி இந்து தமிழ்
No comments:
Post a Comment